
இயற்கை உணவை உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா போன்ற நோய்கள் வராது என்று லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
யூகே, கிரீஸ், ஸ்பெயின் நாடுகளிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக நிகழ்த்திய இந்த ஆய்வின் முடிவில் நகரப்புறங்களில் ஆஸ்த்மா நோய்கள் அதிகம் இருப்பதாகவும், இதற்குக் காரணம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பதும் தான் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
செல்லப்பிராணிகளின் மூலமாகவும் ஆஸ்த்மா நோய்க்கான அலர்ஜி குழந்தைகளைப் பிடிப்பதுண்டு.
ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் வளர்ந்த நாடான யூ.கேயில் பிறக்கும் குழந்தைகளில் பத்து பேருக்கு ஒருவர் ஆஸ்த்மாவினால் பாதிக்கப் படுகிறார்களாம்.
உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றியமைப்பத மூலம் ஆஸ்த்மாவை விரட்டலாம் எனும் இந்த ஆராய்ச்சி அந்த மக்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆரஞ்சு, ஆப்பிள், தக்காளி மற்றும் திராட்சை போன்ற பழங்களை தொடர்ந்து உண்டு வரும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா நோயே வருவதில்லையாம். அவர்களுக்கு ஆஸ்த்மா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சத்தி உருவாகிவிடுகிறதாம்.
சிகப்பு திராட்சையை உண்ணும்போது அதன் தோலுடன் சேர்த்து உண்ணவேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
முந்திரி, பாதாம், நிலக்கடலை, பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வரும் வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நோயற்ற வாழ்வுக்கு மருத்துவரை நாடாமல் காய்கறி, பழக் கடைகளை நாட அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.









மாசிலா சொன்னது,
ஏப்ரல் 18, 2007 இல் 5:21 பிற்பகல்
நல்ல உபயோபகரமான செய்தியை அழகாக அறியத் தந்தமைக்கு நன்றி சேவியர். தொடர்ந்து எழுதி வாருங்கள்.
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 19, 2007 இல் 5:43 மு.பகல்
வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்.
தவச தானியம் என்றால் என்ன? « தாளிக்கும் ஓசை சொன்னது,
ஏப்ரல் 21, 2007 இல் 7:46 பிற்பகல்
[...] படிக்க வேண்டியது. இந்த வாரத்திற்கு.. சுட்டி 1 | சுட்டி 2 | சுட்டி [...]
cheena (சீனா) சொன்னது,
ஜனவரி 1, 2008 இல் 10:03 பிற்பகல்
காய்கறி பழ வகைகள் – சாப்பிட்டால் ஆஸ்த்மா வராதென்றால் சாப்பிடலாமே