வந்து விட்டார் அடுத்த ஜே.கே.ரௌலிங்

இவர் தான் அடுத்த ஜே.கே.ரௌலிங்கர் என்கிறார்கள் பத்தொன்பதே வயதான கேத்தரின் பேனர் பற்றி. அவருடைய முதல் புத்தகமான “த ஐஸ் ஆஃப் எ கிங்” இப்போது வெளி வந்து வாசகர்களை வசீகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

நிஜ உலகிற்கும், கற்பனை உலகுக்கும் இடையே நடக்கும் வழக்கமான ஆங்கில கதை தான் இதுவும் எனினும் இதில் ஆசிரியரின் கற்பனை சிறுவர்களையும், பதின்வயதினரையில் சட்டென வசீகரிக்கும் விதத்தின் அமைந்திருக்கிறதாம்.

பதினான்கு வயதில் இந்த நாவலை எழுத ஆரம்பித்ததாகச் சொல்லும் கேத்தரின், பள்ளி நாட்களில் புத்தகங்களின் பின்னால் சில வரிகள், கற்பனைகளை எழுதி வைத்ததையும், மாலை நேரங்கள், வார இறுதிகள் என கதைகள் எழுதி அவற்றை புத்தகம் போல கட்டி மகிழ்ந்ததையும் நினைவு கூருகிறார்.

பெரிய பதிப்பகத்துடன் தொழில் ஒப்பந்தம் போட்டுள்ள இவர் தன்னுடைய நூல் வெளி வரும் என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என சொல்லிச் சொல்லி வியக்கிறார்.

இந்த எழுத்தாளரை நாம் சாதாரணமாக எடை போடக் கூடாது, இவருடைய எழுத்துக்கள் இவர் தான் அடுத்த ரௌலிங்கர் என்பதை அப்பட்டமாய் விளக்குகின்றன என ரசிக்கின்றனர், பதிப்பகத்தார்.

பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பாய் நகரும் இந்த நாவல் வெளியாகும் இந்த நேரத்தில் இன்னொரு நூலையும் எழுதி முடித்திருக்கிறாராம். முதல் நாவல் வெளியான உடனேயே பெஸ்ட் செல்லர் வரிசையிலும் இடம் பிடித்திருக்கிறதாம்.

இந்த நாவல் விரைவில் திரைப்படமாகவும் தயாராகப் போகிறது என்பது கூடுதல் செய்தி.

இன்னும் சில ஆண்டுகளில் பல மில்லியன்களுக்குச் சொந்தமாகப் போகும் இந்த இளம் பெண்ணின் விழிகளில் மிதக்கின்றன கற்பனை உலகங்களும், மாய மனிதர்களும்.

மறுமொழியொன்றை வழங்குக