இன்றைக்கு சிறுவர்களின் கைகளில் சாவாகாசமாய் அமர்ந்திருக்கின்றன விதவிதமான கைப்பேசிகள். பெரியவர்களுக்கு அழைப்பு வரும்போது கைப்பேசியை குழந்தைகளின் கையில் கொடுப்பதும் அவர்கள் அதை காதில் வைத்து வெகு நேரம் பேசுவதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது.
கைப்பேசி பயன்படுத்துவது ஆபத்து என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும் அதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே இத்தகைய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
அத்தகைய மக்களை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்ய வந்திருக்கிறது சுவீடன் நாட்டு புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.
பதினாறு வயதுக்கு உட்பட்டவர்கள் கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தினால் அவர்களுக்கு மூளைப் புற்று நோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிகமாகும் என்பதே அந்த அதிர்ச்சியளிக்கு ஆராய்ச்சி முடிவு. லண்டனில் நடைபெற்ற ஆராய்ச்சி உயர்குழு கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கிளையோமா எனும் ஒருவகை மூளைப் புற்று நோய் இந்த அதீத கைப்பேசிப் பயன்பாட்டின் விளைவாக உருவாகும் என்றும், பதினாறு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் இருக்கும் எனவும் இந்த ஆராய்ச்சியை நடத்திய சுவீடன் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பேராசிரியர் லெனார்ட் ஹார்டெல்.
இருபது வயதுக்கு உட்பட்ட அனைவருமே கைப்பேசியின் பயன்பாட்டை அறவே விட்டு விடவேண்டும் எனவும், மிக மிக அவசியமான நேரங்களில் மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்துகிறார்.
சிறுவயதினருக்கு மண்டை ஓடு உறுதியற்று இருப்பதாலும், கதிர்களைக் கடத்தும் தன்மை அதிகம் இருப்பதாலும் கைப்பேசி அலைகளால் மூளை நேரடியான தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதே இவர்களுடைய முடிவு.
லண்டனின் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை பிரிட்டன் முழுவதும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் அங்கு பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவயதினரில் 90 விழுக்காடு பேர் கைப்பேசி வைத்திருக்கிறார்கள். ஆரம்பப் பள்ளி செல்லும் பச்சிளம் குழந்தைகளில் 40 விழுக்காடு பேர் கைப்பேசி வைத்திருக்கிறார்கள்!
கைப்பேசியை அதிகம் பயன்படுத்துவதால் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து மிக மிக விரிவாக ஆராய்ச்சி நடத்த பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு தொலைதொடர்பும் ஆரோக்கியமும் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 90000 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் இதன் முடிவு வெளியாகும் போது குழந்தைகளின் கையில் இருப்பது தொடர்பு சாதனமா ? இல்லை புற்று நோய் பரிசளிக்கும் சாதனமா என்பது இன்னும் தெளிவாகும்.
இந்த ஆராய்ச்சி ஒரு எச்சரிக்கை மணி. குழந்தைகளையும், பதின்வயதினரையும் தீய பழக்கங்களிலிருந்து பாதுகாப்பது போல கைப்பேசிப் பயன்பாட்டிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என முத்தாய்ப்பு வைக்கிறார் பேராசிரியர் ஹார்டெல்.










ஹேமா சொன்னது,
செப்டம்பர் 25, 2008 இல் 4:22 மு.பகல்
நல்ல பயனுள்ள பதிவு.பெற்றவர்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் எடுப்பார்களா?
அரவிந்தன் சொன்னது,
செப்டம்பர் 25, 2008 இல் 8:18 மு.பகல்
அருமையான பதிவு, ……..
பெயரிலி சொன்னது,
செப்டம்பர் 25, 2008 இல் 10:00 மு.பகல்
It’s a useful post
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 26, 2008 இல் 3:36 பிற்பகல்
//நல்ல பயனுள்ள பதிவு.பெற்றவர்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் எடுப்பார்களா?//
நன்றி சகோதரி
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 26, 2008 இல் 3:37 பிற்பகல்
நன்றி அரவிந்தன்.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 26, 2008 இல் 3:39 பிற்பகல்
நன்றி முகம் காட்டா வாசகரே
Thamil porukkai சொன்னது,
அக்டோபர் 10, 2008 இல் 6:48 பிற்பகல்
Nalla irruku ing ko
vijay சொன்னது,
அக்டோபர் 10, 2008 இல் 8:01 பிற்பகல்
very super
vijay சொன்னது,
அக்டோபர் 10, 2008 இல் 8:02 பிற்பகல்
nalla erukku
Farhan சொன்னது,
மார்ச் 26, 2009 இல் 10:37 மு.பகல்
very imp to child