காளான் அல்லது மஷ்ரூம்…

காளான் !

 

 

 

mushroom

முன்பெல்லாம் கிராமத்து வீதிகளில் கிடைத்து வந்த இலவச உணவு காளான்கள். இந்த காளான்களுக்கு மாபெரும் மருத்துவக் குணாதிசயங்கள் இருப்பதாக இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பெண்களைப் பெரிதும் தாக்கும் மார்பகப் புற்று நோயை சுமார் 64 விழுக்காடு வரை தடுக்கும் வல்லமை இந்த காளானுக்கு உண்டாம். காளானுடன் பச்சைத் தேனீரும் (கிரீன் டீ ) அருந்துவோருக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு 90 விழுக்காடு குறைகிறதாம்.

சீனாவில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வின் நீட்சி பல்வேறு வடிவங்களில் தொடரும் என தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

காளானில் புற்றுநோயை எதிர்க்கும் குணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அதன் விளைவாகவே இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் நடப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கான்சருக்கு அளிக்கப்படும் மருந்துகளைப் போலவே காளானும் செயல்படுகிறதாம். அதாவது கான்சரை உருவாக்கும் ஆஸ்டிரோஜென் ஹார்மோனை தடுக்கும் அல்லது மட்டுப்படுத்தும் திறன் காளான்களுக்கு உண்டாம்.

கான்சர் எதிர்ப்புக்கும், காளானுக்கும் இடையேயான தொடர்பு சமீபகாலமாகவே பல்வேறு ஆராய்ச்சிகளை தூண்டி விட்டிருக்கிறது. அதில் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது.

அதாவது, காளான் சூப் தயாரித்துக் குடிப்பதனால் மார்பகப் புற்று நோயை குணப்படுத்த முடியுமா என்பதே அந்த ஆராய்ச்சி.

ஆஸ்திரேலியாவிலும் ஒரு பெரிய ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரம் பெண்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சி, கான்சருக்கான பிற காரணிகளையும் கருத்தில் கொண்டே நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

காளான்களை உட்கொள்வதும், கூடவே கிரீன் டீ உட்கொள்வதும் கான்சரிலிருந்து விலகி இருக்க உதவும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துச் சொல்கின்றன.

 

9 மறுமொழிகள்

  1. viji சொன்னது,

    மார்ச் 25, 2009 இல் 10:06 மு.பகல்

    தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை http://www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

  2. மார்ச் 30, 2009 இல் 12:43 மு.பகல்

    கூடிய சீக்கிரம் கான்சரிலிருந்து விலகி இருக்க மருந்து கண்டுபிடிக்க படும் நு நம்புறன்..

  3. சேவியர் சொன்னது,

    மார்ச் 30, 2009 இல் 1:14 பிற்பகல்

    //கூடிய சீக்கிரம் கான்சரிலிருந்து விலகி இருக்க மருந்து கண்டுபிடிக்க படும் நு நம்புறன்..//

    உங்கள் நம்பிக்கை நனவாகட்டும் :)

  4. param சொன்னது,

    மே 23, 2009 இல் 2:42 பிற்பகல்

    enakku nuraiyeeral piratchinai ullathu. naan kaalaam saappidalaamaa/

  5. சேவியர் சொன்னது,

    மே 24, 2009 இல் 9:48 பிற்பகல்

    /enakku nuraiyeeral piratchinai ullathu. naan kaalaam saappidalaamaa///

    தெரியலையே :(

  6. kannan சொன்னது,

    ஆகஸ்ட் 12, 2009 இல் 4:05 மு.பகல்

    Very good information. Thank you.

  7. நாஸிர் சொன்னது,

    அக்டோபர் 27, 2009 இல் 2:27 மு.பகல்

    அருமையான தகவல்களை பதிவு செய்து தமிழுலகிற்கு நற்சேவை செய்துள்ளீர்கள். (வணக்கம் இறைவனுக்கு மட்டுமே உரியதால்) வாழ்த்துகள்•

  8. PARAM சொன்னது,

    அக்டோபர் 27, 2009 இல் 4:58 பிற்பகல்

    ப்ரோக்கோளி சமைக்கும் முறை:
    கோளிஃப்ள்வரைப்போலவே பிரிக்க வேண்டும். பிரிக்க முடியாத பெரிய துண்டுகளை வேண்டுமானால் சிறிதாக வெட்டிக் கொள்ளலாம்.சிறிது நேரம் உப்பு நீரில் போட்டு வைத்திருந்து புழுக்கள் இருந்தால் வெளியான பிறகு ஆவியில் மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு வேக விட்டு எடுக்கவும்.பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு 2 சிறிய வெங்காயம்,2பல் பூண்டு ,சிறு துண்டு இஞ்சி இம்மூன்றையும் இடித்துப் போட்டு[உறைப்புக்கு வேண்டுமானால் 4 சிவப்பு மிளகாயையும் சேர்க்கலாம்] நனகு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து உப்பும் இட்டு கடைசியாக அரைவேக்காடாக வெந்திருக்கும் ப்ரோக்கோளியையும் போட்டு கிளறி இறக்கி சூடு ஆறுவதற்குள் சாப்பிட வேண்டும். இது நம் இந்தியர்களுக்கு ஒத்துப் போகும் ரெசிபி. சாப்பிட்டு பார்த்து சொல்லுங்களேன். எப்படியிருந்தது என்று.

  9. சேவியர் சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 5:19 பிற்பகல்

    நன்றி நாஸிர். வருகைக்கும், கருத்துக்கும்…


மறுமொழியொன்றை வழங்குக