மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்கு வரும் பலரும் கடற்கரையோரங்களில் குறைந்த பட்ச ஆடைகளோடு சூரிய ஒளிக் குளியலில் லயித்திருப்பது சகஜம்.
நமது நாட்டிலும் சூரியக் குளியல் மற்றும் சூரிய ஒளியில் ஓய்வு எடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்கூடு.
இந்த சூரியக் குளியலில் பல்வேறு நன்மைகள் உண்டு. மிக முக்கியமான நன்மை வெயிலில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி. அதேபோல இந்த சூரியக் குளியலில் பல்வேறு தீமைகளும் உள்ளன. அவற்றில் முக்கியமானது “சன் பர்ன்” எனப்படும் வெப்பத்தினால் உடலில் தோல் சிவந்து போய் கொப்புளங்களோ, புண்களோ வருவது.
சிலருக்கு மிகவும் மிருதுவான தோல், விரைவில் சிவந்து போய்விடும். சிலருடைய தோல் வெப்பத்தை அதிகம் கிரகித்துக் கொள்ளும். இது தான் சூரியக் குளியல் நடத்துவோரின் மிகப்பெரிய சிக்கல்.
எவ்வளவு நேரம் வெயிலில் இருக்கலாம், எப்போது நிழலில் போகவேண்டும் ? போதுமான அளவு வெயிலில் இருந்து விட்டேனா என்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்குமே என கலங்கியிருந்த சூரியக் குளியல் பிரியர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது இந்த புதிய கண்டுபிடிப்பு.
சின்ன ஒரு பிரேஸ்லெட் போன்ற இந்த மெல்லிய ஸ்டிரிப் ஒன்றை நமது கைகளில் கட்டிக் கொண்டால் நமது உடல் ஒத்துக் கொள்ளும் அளவுக்கு அதிகமான வெயில் தாக்கும் போது இந்த ஸ்ட்ராப் “பிங்க்” நிறமாக மாறிவிடுகிறதாம்.
வெயிலிலுள்ள புற ஊதாக்கதிர்களின் அளவைக் கிரகித்தும், நமது தோலின் தன்மையை அறிந்தும் இந்த கருவி செயல்படுகிறதாம்.
சூரிய வெப்பம் தாக்கிவிடுமோ எனும் பயத்தில் தேவையற்ற கிரீம்களை உடலில் பூசிக்கொள்வதோ, தேவையான அளவு வெயிலை ரசிக்க முடியாமல் போவதோ இதன் மூலம் முழுமையாக தவிர்க்கப்படும் என்பது சிறப்புச் செய்தியாகும்.
புற உதாக் கதிர்களின் தாக்கம் பல வகை தோல் புற்றுநோய்களுக்குக் கூட காரணமாகி விடுகிறது, இந்த எளிய ஸ்ட்ராப், நம்மை எச்சரிக்கை செய்வதன் மூலம் புற ஊதாக்கதிர்கள் அதிகமாய் தாக்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
மிகவும் மலிவாக, ஒரு சில ரூபாய்கள் எனும் விலையில் இந்தப் பொருள் விற்பனைக்கு வர இருக்கிறது.
கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் இந்த கண்டு பிடிப்புக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
ஃ



Twitted by tamils சொன்னது,
April 22, 2009 இல் 8:12 பிற்பகல்
[...] This post was Twitted by tamils Xavier: பயமற்ற சூரியக் குளியல்…: மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் சுற்ற http://twitter.com/tamils/statuses/1592579438 This ping back was generated with the http://real-url.org free Twitter back pinger! This is an automatic message, nobody red it before so sorry for bugs. [...]
Joe சொன்னது,
April 23, 2009 இல் 12:46 பிற்பகல்
நல்ல கண்டுபிடிப்பு.
Ravi kumar (kuwait ) சொன்னது,
April 24, 2009 இல் 7:18 பிற்பகல்
// kuzhikkamal iruppavarukku ethavathu …..???
சேவியர் சொன்னது,
April 24, 2009 இல் 9:09 பிற்பகல்
//// kuzhikkamal iruppavarukku ethavathu …..???//
ஹா..ஹா
சேவியர் சொன்னது,
April 24, 2009 இல் 9:10 பிற்பகல்
நன்றி ஜோ
ரிசாத் சொன்னது,
April 27, 2009 இல் 8:01 பிற்பகல்
மிகவும் பாராட்டதக்க கண்டுபிடிப்பு..
சேவியர் சொன்னது,
April 29, 2009 இல் 4:31 மு.பகல்
/மிகவும் பாராட்டதக்க கண்டுபிடிப்பு..//
நன்றி ரிசாத்,.
K.SIVA(Fr) சொன்னது,
மே 22, 2009 இல் 9:06 பிற்பகல்
ATHIKAPPADIYAANA MAKKALIN UDALIL THAANKIKKOOLLUM SAKTHI MIKAIYAAKA IRUPPIN, UDALIL PUTRUNOOJII VARAMAADDAATHU, ATHAAVATHU THOOL PADDAIKALIL VITDAMINUM KOOLUPPU SAKTHIUM IRUPPIN ENTHA VITHAMAANA PAATHIPPUM EERPAD VAAJIIPPU ILLAI. THOOLIL VIDDAMINAAL KANAYANKALUKKU PAATHIPPUKKAL ILLAI EN PATHEY URUTHI INTHA THAAK KUTHALIL IRUNTHU PAATHU KAAKKA UDALLUKKU VENDIYA SOORIYAK KATHIR EETHIR SAKK THIYAANA (Vitdamine) udalukku poosiyapin SOORIYAK KOOLIPPU CEJII VATHU THAAN SAALA CIRANTHATHU. IVAI POOSAP PADAA VIDIN THOOLIL KURAINT THULLA CILA VITDAMIN VEELIJEERAP PADDU VIDA SANTHARPPAM UNDU ENAVEE ATHARKURIYA CIRANTHA THAYAA TIPPUKKALAI THERIVU CEJIIVATHU UNKALIN THALAIYAAYA KADAMAI. _K.SIVA-(Fr)