ஆறு வயது, ஆறா மனது…

tears
சில துயரங்களை வார்த்தைகளால் நிச்சயம் சொல்ல முடியாது.
உயிரை உலுக்கிப் போடும் நிகழ்வுகளைச் சொல்ல கண்ணீரால் தான் முடியும்.
சில துயரங்களைக் கண்ணீர் கூட சொல்லிவிடாது
உறைந்து போனபின் உருகுவது கூட கடினமாகிவிடுகிறது.

நீண்டகாலக் கனவாக இருந்து, நிஜமாய் மாறிய சொந்தக் காரில் குடும்பத்துடன் ஆனந்தமாய் பாண்டிச்சேரி பயணித்தபோது,
கோர விபத்து ஒன்றில் படுகாயமடைந்து
ஆறு வயதேயான தனது தேவதை போன்ற மகன் ராகுலை
இழந்து, படுகாயமடைந்து
சொல்லொண்ணாத் துயரத்தில் இருக்கும் உயிர்தோழியும், சகபதிவருமான ( உன்னுடன் ) ஜானகி அவர்களின் துயரத்தை என்னால் எப்படியும் சொல்லி விட முடியாது.

“வாடா ராகுல்” என மகனின் உடலருகே, அவனுடைய ஆடைகளை நெஞ்சோடணைத்து அவர் கதறிய கதறலைக் கேட்டபின் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

வாய் திறந்தால் அழுகை வெடித்துவிடுமோ எனும் பயத்தில் பேசாமலேயே இருந்து விடுகிறேன்.
அவருடைய துயரத்தில் பங்குகொள்ளும் விதமாய் எனது இரண்டு வலைத்தளங்களும் சில நாட்களுக்கு மெளனமாய் இருக்கும்.

6 மறுமொழிகள்

  1. சரவணகுமரன் சொன்னது,

    ஜூன் 15, 2009 இல் 1:01 மு.பகல்

    :-( (

  2. vijaygopalswami சொன்னது,

    ஜூன் 15, 2009 இல் 1:24 மு.பகல்

    வலி மிகுந்த செய்தியாக இருக்கிறது. எந்த வகையிலும் ஆறுதல் சொல்ல இயலாத இழப்பு.

  3. ரிசாத் சொன்னது,

    ஜூன் 15, 2009 இல் 3:14 மு.பகல்

    //வலி மிகுந்த செய்தியாக இருக்கிறது. எந்த வகையிலும் ஆறுதல் சொல்ல இயலாத இழப்பு…//

    உண்மை..
    அறுதல் நமக்கு சொல்ல முடியாது.
    ஆனால் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

  4. Sivakumar சொன்னது,

    ஜூன் 15, 2009 இல் 5:14 மு.பகல்

    We deeply shocked at the suddenness of Raghul’s demise. We all were shocked to hear the news. No body could believe it. We know no one can take the place of this sweet Boy….. We all pray God almighty to eternal rest his soul in peace. Also we pray God to give courage to the parents to face the situation.

    Please Convey our Deepest condolences…

    In deep Sympathy!
    Uma & Siva

  5. thamilannan சொன்னது,

    ஜூன் 16, 2009 இல் 2:39 மு.பகல்

    varuththamaana seithi

  6. kunthavai சொன்னது,

    ஜூன் 16, 2009 இல் 10:21 பிற்பகல்

    மனம் பதறிவிட்டது. ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை.


மறுமொழியொன்றை வழங்குக