கமல் வெளியிட்ட வண்ணங்களின் வாழ்க்கை

வண்ணங்களின் வாழ்க்கை : சுந்தரபுத்தன்

ஓவியம் என்பது நடந்து செல்லும் புள்ளி – என்பார்கள். ஓவியங்கள் இல்லாத வாழ்க்கை நினைவுகளின் ஏழ்கடல் தாண்டியது. இயற்கை அனைத்தையுமே தூரிகையாகவும் வண்ணங்களாகவும் பாவிக்கிறது. வானத்தின் மேலும், பூமியின் கீழும் கூட ஓவியங்கள் நிரம்பி வழிகின்றன.

இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ஓவியங்களுக்கென எப்போதுமே சிறப்பு இடம் ஒன்று உண்டு. மேற்குலகில் கோலோச்சிய ஓவியர்களில் சட்டென ரபேல், டிசியன், ரூபன்ஸ், லியானார்டோ போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். வான்கோவை மறக்க முடியுமா ? எனினும் எல்லா ஓவியர்களுமே ஏதோ ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையில் நிராகரிக்கப்பட்டிருந்தவர்கள் எனும் வரலாறு வலியூட்டுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஓவியர்கள் வீர சந்தானம், புகழேந்தி, கதவு சந்தானம், விஸ்வம்,  வித்யாசங்கர், ஜெயராமன், மனோகர் என சமகாலப் பட்டியல் நீள்கிறது. பலருக்கும் தமிழக ஓவியர்கள் பற்றிய சரியான அறிமுகம் இல்லை. காரணம், காலம் காலமாக ஓவியம் என்பது பிற இலக்கியங்களைத் தாங்கிப் பிடிக்கத் தான் தமிழில் பயன்படுகிறதே தவிர, பிற இலக்கியங்கள் ஓவியத்தைத் தாங்கிப் பிடிப்பது குதிரைக் கொம்பு.

சுந்தரபுத்தன் அவர்களுடைய “வண்ணங்களின் வாழ்க்கை” நூல் ஓவியர்களைக் கௌரவப் படுத்த தமிழில் வந்திருக்கும் ஒரு அத்தி பூத்த நிகழ்ச்சி. இந்த அத்தி சட்டென பூத்து விடவில்லை. அவர் புதிய பார்வையில் பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஒவ்வோர் இதழிலிலும் ஒவ்வோர் பூவாகப் பூத்தது. வீர சந்தானம் முதல், மார்கு ரத்தினராஜ் வரையிலான ஐம்பதுக்கு மேற்பட்ட ஓவியர்களை இவர் சந்தித்து உரையாடி அவர்களுடைய அனுபவ செழுமைகளையும், ஓவியப் பார்வைகளையும் இலக்கியமாக்கியிருக்கிறார்.

ஓவியர்களின் வாழ்க்கை, அவர்களுடைய ஆனந்தத்தின் துலாக்கோல், வண்ணங்களின் ஸ்பரிசங்களால் அவர்கள் அடையும் பரவசம், ஓவியத்தின் உள்முக தரிசனம் என அவர்களுடைய் பார்வைகள் கவிதைகளாய் நீள்கின்றன.

தோழமை பூபதி இதை ஒரு முழு தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். பூபதி அவர்கள் இந்த நூலைக் கொண்டு வந்திருப்பதற்கு இன்னொரு காரணம், அவருக்கும் ஓவியத்துக்கும் இருக்கும் ஆத்மார்த்த பிணைப்பு. இன்னும் விளக்க, ஓவியர் புகழேந்தியின் தம்பி தான் இவர் எனும் சுருக்க அறிமுகம் தரலாம்.

அமெரிக்காவில் பணியிடங்களில் தங்கள் குழந்தைகளின் கிறுக்கல் ஓவியங்களை அதிகபட்ச அன்போது சுவரில் தொங்கவிட்டு அழகுபார்க்கும் பெற்றோர்கள் அதிகம். ஓவியத்தின் மீதான ஈடுபாடு அல்ல அதன் காரணம். ஓவியர்களின் மீதான அபரிமிதமான பாசமே. அத்தகைய ஒரு பாசமும், கரிசனையும், அங்கீகாரமும் நமது ஓவியர்களுக்கும் வழங்கப்படவேண்டும் எனும் ஒரு சிந்தனை கீற்றை இந்த வண்ணங்களின் வாழ்க்கை நூல் பற்ற வைக்கிறது

தோழமை வெளியீடு, 94443-02967

விலை : 150/-

2 மறுமொழிகள்

  1. ரிசாத் சொன்னது,

    மார்ச் 2, 2010 இல் 5:03 மு.பகல்

    ஆஹா
    இந்த புத்தகத்தை பற்றிய உங்கள் பதிவு அற்புதமாக உள்ளது..

  2. சேவியர் சொன்னது,

    மார்ச் 12, 2010 இல் 8:26 பிற்பகல்

    நன்றி ரிசாத் !


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 128 other followers