பனிப் பூக்கள், குளிர் காற்றில்…

< இசையில் இணைப்பது உங்கள் கையில் >

பனிப்பூக்கள் குளிர்காற்றில்
பறக்கின்ற வேளை
இடையர்களும் இமைசாய்த்து
துயில்கின்ற மாலை

விண்ணிலே மீனொன்று
வால் நீட்டக் கண்டு
மென்மனசு இடையர்கள்
போனார்கள் மிரண்டு

இது வானம் ஒன்று பூமிக்கு வருகின்ற தேதி
வானதூதர் வந்தங்கு சொன்னார் அச் சேதி.

0

மன்னர் குல மெத்தைகள் பலநூறு உண்டு
தூதர் சேதி சொன்னதுவோ ஆயர்களைக் கண்டு.
ஆவின் குடில் ஆலயமாய் மாறியதை வியந்து
அரசர் குல ஆணிவேரும் ஆடியது பயந்து.

வென்று விட வந்தவரைக் கொன்றுவிடக் கட்டளை – அது
மீனொன்று கடல்குடிக்க ஆசைப்பட்ட கற்பனை

0

சாந்தமுகம் சாய்ந்து கொள்ள சிரித்தது பசுக்கொட்டில்
காந்தமுகம் பாய்ந்து வந்து அமர்ந்தது மனக் கட்டில்.
ஞானியரின் கைகளிலே மூன்று வகைப் பரிசு
மூவொரு தேவனவர் பிறப்பே மிகப் பெரிசு.

வென்று விட வந்தவரைக் கொன்றுவிடக் கட்டளை – அது
கதிரவனைத் தின்றுவிட குயில் கொண்ட கற்பனை

0

அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

4 மறுமொழிகள்

  1. Jayarathina Madharasan சொன்னது,

    December 23, 2010 இல் 1:21 மு.பகல்

    கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல் வாழ்த்துக்கள்.

  2. jawfeer -Irakkamam சொன்னது,

    December 23, 2010 இல் 8:25 பிற்பகல்

    கிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்.
    irakkamam

  3. சேவியர் சொன்னது,

    ஜனவரி 2, 2011 இல் 9:26 பிற்பகல்

    நன்றி இரக்கமம்…

  4. சேவியர் சொன்னது,

    ஜனவரி 2, 2011 இல் 9:26 பிற்பகல்

    நன்றி நண்பர் மாதரன் :)


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 128 other followers