
‘உங்க கம்ப்யூட்டர்ல என்னதாண்டா பண்ணுவீங்க ?’ மணிரத்னத்தின் அசோசியேட் இயக்குனராய் பணிபுரியும் நண்பர் ஒருவரிடம் நேற்று பேசிக்கொண்டிருக்கையில் திடீரென இப்படி கேட்டார்.
என்ன விஷயம் சொல்லுங்க என்றேன்.
இல்லே. இவ்ளோ பாதுகாப்பா வெச்சிருக்கிற மேட்டரையே எப்படியோ இண்டர்நெட்ல புடிச்சு போட்டுடறாங்களே அதான் கேட்டேன் என்றார். ஷங்கர் இந்த பாடல்கள் இணையத்தில் உலவும் செய்தி அறிந்து கடும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் இருக்கிறாராம். இருக்காதே பின்னே, பல தினசரி நாளிதழ்கள் இதுதான் வாய்ப்பு என்று பாடல்களை பிரசுரம் செய்து பிரபலமாகியும் விட்டன.
எனவே இது சிவாஜி பட பாடல்கள் தானா என்பதைக் குறித்த சந்தேகம் உள்ளவர்கள் அதை விட்டுவிடுங்கள் இப்போது.
வா..ஜி பாடல் அக்மார்க் எ.ஆர்.ரஹ்மான் முத்திரையுடன் வந்திருக்கிறது.
நெட்டை நிலவே
இரட்டைத் திமிரே..
குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை ந
என கவிஞரின் கற்பனைச் சிதறல்களில் பாடலின் சில்மிஷம் சிலிர்க்க வைக்கிறது. இந்த பாடலை எழுதியது வாலி என்பதை அறிய பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை.
வரிகள் அப்படியே வாலி ரகம்.
சற்றும் விலகாத வாலிபக் கரம் !
—————————————–
பிற்சேற்கை ! :- ஆம்பல் மெளவல் ; வாஜி வாஜி…; புன்னகைத் தேன்குளம் ; செயல் புயல் நானடி ; பொன் வாக்கியமே வாய் வாத்தியமே என்னும் வார்த்தை விளையாட்டுகளைப் பார்த்து வாலி என்று நான் முடிவு கட்டியது தப்பாகிப் போயிருப்பதாக நண்பர் ஒருவர் தொலைபேசிச் சொன்னார். உண்மையில் இந்தப் பாடலை எழுதியது வைரமுத்துவாம்
——————————-
ஃ
பாடல்
ஃ
ஆம்பல் ஆம்பல்
ஆம்பல் ஆம்பல்
ஆம்பல் ஆம்பல்
ஆம்பல் ஆம்பல்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மெளவல் மெளவல்
உன் பூவிழி போர்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
அன்பால் ஆணையிடு
அழுகை சாகவிடு
உன் ஆண் வாசனை
என்மேனியில்
நீ பூசிவிடு
அடி நெட்டை நிலவே
இரட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
ஃ
ஆண்:
ஒரு வெண்ணிலவை
மணக்கும் மன்மதன் நான்
என் தேனிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள் தான்
பெண்
புன்னகைப் பேரரசே
தேன் குளத்துப் பூவுக்குள் குளிப்பீரா ?
புன்னகைப் பேரரசே
தேன் குளத்துப் பூவுக்குள் குளிப்பீரா ?
விடியும் வரை மார்புக்குள் இருப்பீரா
விழிகளுக்குள் சிறு துயில் கொள்வீரா
ஆண்:
பெண்களிடம் சொல்வது குறைவு
செய்வது அதிகம்
செயல் புயல் நானடி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
ஃ
ஆண்:
பொன் வாக்கியமே
வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெழிவுகளில்
வந்து ஒளிந்துகொண்டேன் சுகம் சுகம் கண்டேன்
பெண்:
ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்
பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி
வெண்ணிலவை ஜகதியும் ஆக்கிவிட்டேன்
ஆண்;
அடடடா குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ.
பெண்:
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
ஃ
Like this:
Like Loading...