வாழும் வரலாறு கமல்ஹாசனின் திரைப்படங்கள் தீர்க்கத் தரிசி போல செயல்படுகின்றன என்று கூறி விளக்கமளிப்பது போல வந்த மின்னஞ்சல் மிகவும் சுவாரஸ்யமானது… படியுங்கள்
1978ல் சிவப்பு ரோஜாக்கள் வெளியானது. மனநிலை பாதிக்கப்பட்ட சில்மிஷக் கொலைகாரர் போல அவருடைய கதாபாத்திரம் அமைந்திருந்தது, அடுத்த ஆண்டு சைக்கோ ராமன் பெண்கள் பலரைக் கொலை செய்ததற்காய் கைது செய்யப்பட்டான்
1988ல் சத்யா படத்தில் வேலையில்லாத இளைஞராக நடித்தார், அடுத்த இரு ஆண்டுகள் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது ( அப்போ மட்டும் தானா ? )
1992ல் தேவர் மகன் வெளியானது அடுத்த ஆண்டு தென்மாவட்டங்களின் சமூகத்தினரிடையே பிரச்சனையும் தலைவிரித்தாடியது.
1994ல் கமல் மகாநதி படத்தில் பைனான்சியர் ஏமாற்றும் பிரச்சனையைச் சொன்னார். 1996ல் பல பைனான்ஸ் நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி விட்டு ஓடின,
ஹேராம் படம் 2000 ல் வெளியானது. இந்து முஸ்லீம் பிரச்சனை கோத்ரா வடிவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடந்தது.
அன்பே சிவம் படத்தில் சுனாமி என்னும் வார்த்தை பயன்படுத்தினார் 2003ம் ஆண்டு. அடுத்த ஆண்டு சுனாமி வந்து பேரழிவைத் தந்தது,
வேட்டையாடு விளையாடு 2006 ல் வெளியானது சீரியல் கில்லர்ஸ் வில்லன்கள் பற்றி, படம் வெளியாகி மூன்று மாதத்திற்குப் பின் நோய்டா கொலைகாரன் சிக்கினான்.
அடுத்த படத்துல என்ன வேஷம் கமல்ஜி ?