எகிப்தில் மக்கள் தொகை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறதாம். கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை இருபது விழுக்காடு அதிகரித்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் இந்த மக்கள் தொகை இரண்டு மடங்காகியிருக்கிறது !!!
இருபத்து மூன்று வினாடிகளுக்கு ஒரு குழந்தை என்னும் விகிதத்தில் எகிப்தில் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக அரசு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
1882ம் ஆண்டு சுமார் ஏழு மில்லியனாக இருந்த மக்கள் தொகை இப்போது எழுபத்து ஏழு மில்லியன் !
மூன்றில் ஒருபாகம் மக்கள் பதினைந்து வயதுக்குக் கீழே உள்ளவர்கள். தற்போது குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வும் செயல்பாடும் எகிப்தில் பரவலாக இருக்கின்றன. இதன் மூலம் குடும்ப சராசரி நபர்களின் எண்ணிக்கை 4.65 லிருந்து 4.18 ஆக குறைந்திருக்கிறது.
வருடத்திற்கு ஐந்து இலட்சம் திருமணங்களும், அறுபதாயிரம் மணமுறிவுகளும் இங்கே நிகழ்கின்றன.
எகிப்தை அச்சுறுத்தும் ஒரு பிரச்சனை கல்வியறிவின்மை. பத்தாண்டுக்கு முன்பு முப்பத்து ஒன்பது சதவீதமாக இருந்த கற்றோரின் எண்ணிக்கை, தற்போது இருபத்து ஒன்பது எனுமளவுக்கு மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
தமிழ்
நன்றி,
ஆன்டனி ஜெரால்டு
LikeLike
Hi:
You are telling this like Chief Minister in Mudhalvan..
4.65 to 4.18 -> is really a improvement or what?
Long long way to go still…
Sathya
LikeLike
படித்ததைச் சொல்கிறேன் அவ்வளவே 🙂
LikeLike
கல்வியறிவு குறைவதும் மக்கட்தொகை கூடுவதும் ஒரு நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும்
LikeLike