ஃ
உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை இழக்கத் துவங்குகிறார்கள் என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று டச் அறிவியலார்களால் வெளியிடப்பட்டுள்ளது.
மாறி வரும் உணவுப் பழக்கங்களாலும், பரம்பரை குணாதிசயங்களினாலும் உடல் எடை அதிகரித்து வருவது இன்று ஒரு சர்வதேசப் பிரச்சனையாக இருக்கிறது. வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்த இந்த சிக்கல் தாராளமயமாக்கலில் தயவாலும், பீட்சா, கோக் போன்ற உணவுப் பழக்கங்களினாலும் இன்று இந்தியாவிலும் வேர்விட ஆரம்பித்திருக்கிறது,
இந்த உடல் எடை அதிகரிப்பு பல விதங்களில் இன்னல்களை உண்டாக்கி வருகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கைச் சூழலைப் பரிசளிக்கும் இந்த இன்னல் இப்போது தாய்மைக்கே வேட்டு வைப்பதாக தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியான செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஏற்கனவே உடல் எடை அதிகமாய் உள்ள தாய்மார்களுக்கு பிரசவ காலத்தில் பல சிக்கல்கள் வரும் வாய்ப்பு உண்டு எனவும், தாய்மார்களின் உடல் எடைக்கும் குழந்தைக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு எனவும் சில ஆராய்ச்சிகள் தங்கள் முடிவுகளை வெளியிட்டிருந்தன.
இப்போது கருத்தரிப்பதிலேயே சிக்கல் என்னும் புதிய ஆராய்ச்சி உண்மையிலேயே பெண்களை, அதிலும் குறிப்பாக அதிக எடை நோயினால் அவதிப்படும் பெண்களை பெருமளவில் உளவியல் ரீதியான பாதிப்புக்கு உட்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அதிக எடை சிக்கலினால் அவதிப்படுபவர்கள் மீண்டும் உடல் எடையைக் குறைத்தால் அவர்களால் மீண்டும் தாய்மை அடையும் வாய்ப்பு அதிகரிக்கும் எனும் தகவல் சற்று ஆறுதலாய் இருக்கிறது.
அதிக எடை எனும் சிக்கல் உருவாக்கும் இன்னல்களைக் குறித்து தினமும் வரும் தகவல்கள் நம்மை விழிப்புடன் இருக்கச் செய்வதுடன், அடுத்த தலைமுறையை சரியான பாதையில் அழைத்துச் செல்ல நமக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவும் செய்கிறது என்பதை கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடித்தால் இத்தகைய சிக்கல்கள் நம்மை அணுகுவதில்லை என்பதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கை நலமாகும்.
உடல் நலம் பேணுதல் என்பது பள்ளியில் சிறு வயதில் இருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டிய ஓண்று. உடற்பயிற்சியும் அப்படித்தான். கருத்தரிப்பதிலேயே சிக்கல்ல் என்பது கவலை கொள்ள வைக்கிறது.
LikeLike