காய்கறிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிறப்புக் குணாதிசயம் இருக்கிறது. அதனால் தான் மருத்துவம் காய்கறிகள் உண்பதை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.
ஊக்கப்படுத்துவதுடன் நின்று விடாமல் அதிக சத்துள்ள புதிய காய்கறி இனங்களை உருவாக்குவதிலும் மருத்துவ உலகம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
உருளைக்கிழங்கு, புரோக்கோலி, தக்காளி உட்பட பல காய்கறிகள் ஏற்கனவே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு புதிய இனங்கள் பெறப்பட்டுள்ளன.
அதன் வரிசையில் இப்போது புதிய வகை காரட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரட் வழக்கமான காரட்டை விட அதிக கால்சியம் சத்து உடையதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காரட் வழக்கமான காரட்டை விட 41 விழுக்காடு அதிக அளவில் கால்சியம் சத்தை உடலுக்குத் தருகிறதாம்.
உடலுக்கு அதிக கால்சியம் சத்து கிடைப்பதனால், கால்சியம் குறைபாட்டினால் வரக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு சார்பான பிற நோய்கள் வரும் வாய்ப்பை பெருமளவு குறைக்கிறதாம். பெண்களை முதுமைக்காலத்தில் அதிகமாய் தாக்கும் எலும்பு சார்ந்த நோய்களைத் தவிர்க்க இந்த காரட் பெருமளவில் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆராய்ச்சி இன்னும் பல கட்டங்களை எட்ட வேண்டியிருக்கிறது எனவும் அதன் பின்பே பயன்பாட்டாளர்களை சென்றடையும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த காரட்டைக் குறித்து வரும் செய்திகள் உற்சாகமூட்டும் அதே வேளையில், இதன் மூலம் ஏதும் பக்க விளைவுகள் இருக்குமோ எனும் பயமும் துளிர்விடத் தான் செய்கிறது.
ஃ
பரவாயில்லையே! நல்ல செய்திதான்.
கமலா
LikeLike
🙂 ஆமா அப்படி தான் தெரியுது.
LikeLike
தலைப்பப் பாத்திட்டு நா வெறென்னமோன்னு நெனச்ச்டேன்.
LikeLike