முட்டை கிடைச்சா என்ன செய்வோம் ? வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கிப் போட்டு சூடா ஒரு ஆம்லெட், கொஞ்சமா பெப்பர் தூவி அப்படியே லபக்குவோம்.
சரி அதுக்கு பொறுமையில்லேன்னா, சுடுதண்ணீரில் போட்டு அவித்து விழுங்குவோம். இல்லேன்னா ஆஃப் பாயில். பயில்வான் பக்கிரிகளெனில் கோழி இறக்கி வைத்த சூட்டோடு சூடாக பச்சையாகவே உடைத்து வாயில் ஊற்றுவார்கள்.
கிராமத்தில் தவிட்டுக்கு இடையேயும், சாம்பலுக்கு உள்ளேயும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் முட்டை அடைகாக்கவும் அவ்வப்போது அனுப்பப்படும். அப்புறம் ?
பள்ளி நாட்களில் முட்டை ஓட்டின் மீது கரி கொண்டு மீசை வரைந்து விளையாடுவது ஒரு கலை. இதைத் தவிர முட்டையை வைத்து என்னதான் செய்து விட முடியும் ? என நினைப்பவர்களை வியக்க வைக்கிறார் இவர்.
அதீத கவனத்துடன் முட்டைகளை ஒவ்வொன்றாய் அடுக்கி….
கரணம் தப்பினால் மரணம் … இல்லை இல்லை கவனம் தப்பினால் ….
வாவ் !!!! முட்டை நாட்டைப் பிரதிபலிக்குமா !!!!
இல்லை நோட்டைப் பிரதிபலிக்குமா ?
முட்டைய வச்சி என்னனலாம் பண்றாங்க? !!!
LikeLike
வேலை இல்லாத மாமியார் பூனைய பிடிச்சி சிரைத்தாளாம்
:))))))
LikeLike
அம்மாடியோவ், ரெம்ப அழகாயிருக்கு. ரெம்ப பொறுமை தான்.
பாத்தவுடனே பசியெடுத்திருச்சி.
LikeLike
முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை உண்மைதான்
LikeLike
soooooooooooooooooooper appu
LikeLike
அருமை… அவரது பொறுமையும் கலை உணர்ச்சியும் பாராட்ட வைக்கிறது…
கல்லிலே கலை வண்ணம் கண்டார்… என்கிற பழைய பாடலை ரீமிக்ஸ் பண்ணி முட்டையில் கலை வண்ணம் கண்டார்… என்று பாடலாம்….
முட்டையை வைத்து ஓவியம் படைத்தவருக்கு ஒரு சபாஷ்…
மஹாலக்ஷ்மி.
LikeLike
அவர் கோழி முட்டை மட்டும் இல்லாமல் வாத்து, அன்னம், காடை போன்ற பறவைகளின் முட்டையும் உபயோகித்து இருக்கிறார்.
LikeLike
//வேலை இல்லாத மாமியார் பூனைய பிடிச்சி சிரைத்தாளாம்//
கூட வந்த மாமனார் அதை துரத்திவிட்டு சிரித்தாராம்.
வாக்கியத்தை பாதியில் முடிகாமல் விட்டால் சாமி கண்ணை குத்திவிடும். தட் இஸ் டூ பேட் மேன். நாவ் ஐ சேவ் யூ.
LikeLike
//முட்டைய வச்சி என்னனலாம் பண்றாங்க? !!!
//
அதானே !
LikeLike
//வேலை இல்லாத மாமியார் பூனைய பிடிச்சி சிரைத்தாளாம்
:))))))//
இதற்குரிய பதிலை பின்னூட்டப் புலி விக்கி போட்டிருப்பதால் வெறுமனே ஒரு ஸ்மைலி மட்டுமே என்னிடமிருந்து 🙂
LikeLike
//அம்மாடியோவ், ரெம்ப அழகாயிருக்கு. ரெம்ப பொறுமை தான்.
பாத்தவுடனே பசியெடுத்திருச்சி.//
இந்தக் கவனமும், பொறுமையும், நிதானமும் மிக மிக மிக அரிது !!! அசத்தல் 🙂
LikeLike
//முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை உண்மைதான்//
உண்மை !!!
LikeLike
//soooooooooooooooooooper appu//
வருகைக்கு நன்றி ஸ்ரீ..
LikeLike
//அருமை… அவரது பொறுமையும் கலை உணர்ச்சியும் பாராட்ட வைக்கிறது…
கல்லிலே கலை வண்ணம் கண்டார்… என்கிற பழைய பாடலை ரீமிக்ஸ் பண்ணி முட்டையில் கலை வண்ணம் கண்டார்… என்று பாடலாம்….
//
சூப்பர் 🙂
LikeLike
//அவர் கோழி முட்டை மட்டும் இல்லாமல் வாத்து, அன்னம், காடை போன்ற பறவைகளின் முட்டையும் உபயோகித்து இருக்கிறார்.//
சரி… இப்போ என்னதான் சொல்ல வரே ?
LikeLike
//சாமி கண்ணை குத்திவிடும்.//
மாமி கண்ணைக் குத்தாம இருந்தா சரி !
LikeLike
எவ்வளவு அழகான கைவேலை.எவ்வளவு பொறுமை வேணும்.
படங்களை அருமையாகத் தந்திருக்கிறிங்க.
//வேலை இல்லாத மாமியார் பூனைய பிடிச்சி சிரைத்தாளாம்//
அதை ரசிக்கத் தெரியாம ஒருத்தர் என்ன சொல்லியிருக்கார்.ரசிக்கக்கூட பொறுமையில்லாதவங்க.
//வாக்கியத்தை பாதியில் முடிகாமல் விட்டால் சாமி கண்ணை குத்திவிடும். தட் இஸ் டூ பேட் மேன். நாவ் ஐ சேவ் யூ.//
அண்ணா விக்கி திருந்திட்டார் போல.நிதானமா கவனிச்சிருக்கார்.
எத்தனை விதமான முட்டைகள் வைச்சு வீடு கட்டியிருக்காங்கன்னு.
அப்போ முட்டை சைவம்ன்னா வெள்ளிக்கிழமைல சாப்பிடலாமா?
LikeLike
//அப்போ முட்டை சைவம்ன்னா வெள்ளிக்கிழமைல சாப்பிடலாமா?//
அது என்னங்க வெள்ளிக்கிழமை… வெள்ளிக்கிழமை சைவம் மட்டும் சாப்பிடனம்னு வெள்ளிக்கிழமை இராமசாமிக்கு எக்ரிமெண்டு போட்டு கொடுத்திருக்கிங்களோ…
LikeLike
இல்ல அசைவம்னு சொன்ன முட்டை சாப்பிடுவதை விட்டுட போறிங்களா…
இத படிச்சிட்டு டென்ஷன் ஆகாதிங்க… ஏன்னா இன்னிக்கு வெள்ளிக்கிழமை…
LikeLike
arumai arumai
LikeLike
//அதை ரசிக்கத் தெரியாம ஒருத்தர் என்ன சொல்லியிருக்கார்.ரசிக்கக்கூட பொறுமையில்லாதவங்க.
//
நம்மால முடியலையேங்கற ஆதங்கமா இருக்கும்… விட்டுடுங்க 😀
/அப்போ முட்டை சைவம்ன்னா வெள்ளிக்கிழமைல சாப்பிடலாமா?//
அதென்ன வெள்ளிக்கிழமை ? வியாழக்கிழமை கூட நிறைய பேர் சாப்பிடறதில்லையே ( மத்தவங்களுக்கு முன்னாடி )
LikeLike
//அது என்னங்க வெள்ளிக்கிழமை… வெள்ளிக்கிழமை சைவம் மட்டும் சாப்பிடனம்னு வெள்ளிக்கிழமை இராமசாமிக்கு எக்ரிமெண்டு போட்டு கொடுத்திருக்கிங்களோ//
முட்டை சைவம் ன்னு எப்பவோ மக்கள் முடிவு பண்ணிட்டாங்களே !!!
LikeLike
//இல்ல அசைவம்னு சொன்ன முட்டை சாப்பிடுவதை விட்டுட போறிங்களா…
இத படிச்சிட்டு டென்ஷன் ஆகாதிங்க… ஏன்னா இன்னிக்கு வெள்ளிக்கிழமை
//
முட்டை எனக்கு மிகவும் பிடித்தமான உணவு 😀
LikeLike
//arumai arumai//
வருகைக்கு நன்றி விவேக். உங்கள் பாராட்டு கலைஞனைச் சென்றடைவதாக !
LikeLike
Vanakam Xevier
“முட்டை எனக்கு மிகவும் பிடித்தமான உணவு ”
my school days I got many like egg shape mark :-((
when I eat egg means it comes my mind that remember :-)))
Puduvai siva.
LikeLike
இல்லை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது… முட்டையின் உள் சிறு புள்ளியைப் போல் இருக்கும் இரத்தக் கருவை ஊசி வைத்து எடுத்துவிடுவார்கள். உயிர் ஜனிக்காத பொருளாக மாற்றியதால் முட்டை சைவன் என்கிறார்கள். ஆனால் அதில் இருந்தக் கரு சாகடிக்கப்பட்டிருக்கிறது. பிறகு எப்படி சைவமாகும்.
நான் சிறுவனாக இருக்கும் போது என் தாத்தா தினமும் காலையில் நாட்டுக் கொழி முட்டையை வேக வைத்துக் கொடுப்பார். அரைவேக்காடாக இருக்கும் முட்டையில் மிளகும் லேசான உப்புப் போட்டு சாப்பிட சூப்பரா இருக்கும்.. ஹூம்ம்ம் அதுலாம் ஒரு காலம்… இப்போதெல்லாம் நாட்டுக் கோழி முட்டை கிடைக்கவே சிறமமாக இருக்கு…
LikeLike
பாரேன்! அவனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு
LikeLike
ஐயையோ விக்கி இப்போ என்ன செய்யலாம்.இன்னைக்கு வெள்ளிக்கிழமை.சேவியர் அண்ணா முட்டை சைவம்ன்னு சொன்னாரா காலேல.நான் கத்தரிக்காயும்கருவாடும் குழம்புவச்சு முட்டையும் அவிச்சு குழம்புக்குள்ள வெட்டிப் போட்டு சமைச்சிட்டு போனேன்.இன்னைக்கு நான் அசைவம் சாப்பிட மாட்டேன்.இப்போ வந்து பாத்தா நீங்க சொல்றீங்க முட்டை அசைவம்ன்னு.
வேலையால வந்து சாப்பிட்ட அப்புறம்தான் கனிச்சேன்.இப்போ என்ன செய்யலாம்.முட்டை சைவம்ன்னு சொன்ன சேவியர் அண்ணாதான் பரிகாரம் சொல்லணும்.முட்டை அசைவம்ன்னு சொன்ன விக்கிக்கு நன்றி.இனி வெள்ளிக்கிழமைல முட்டை சாப்பிட மாட்டேன்.விக்கி நீங்களும் இப்போ எல்லாம் நிறைய நல்ல விசயங்கள் சொல்றீங்க.
LikeLike
பொறுமைக்கு எல்லையே இல்லை என்பதற்கு உதாரணமோ!
LikeLike
Nice shots.
Simply superb…
🙂
LikeLike
//my school days I got many like egg shape mark :-((
//
Many Egg Shape ன்னா 100 ஆ தான் இருக்கணும் !!! அதுல தான் இரண்டு முட்டை வரும் !!! இதெப்படி ?
LikeLike
/அரைவேக்காடாக இருக்கும் முட்டையில் மிளகும் லேசான உப்புப் போட்டு சாப்பிட சூப்பரா இருக்கும்.. //
ஆஹா…. ஞாபகப் படுத்தி வுட்டீங்களே பாஸ் !
LikeLike
//பாரேன்! அவனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு
//
ஆமா… ஆமா… 😉
LikeLike
//நான் கத்தரிக்காயும்கருவாடும் குழம்புவச்சு முட்டையும் அவிச்சு குழம்புக்குள்ள வெட்டிப் போட்டு சமைச்சிட்டு போனேன்.இன்னைக்கு நான் அசைவம் சாப்பிட மாட்டேன்.இப்போ வந்து பாத்தா நீங்க சொல்றீங்க முட்டை அசைவம்ன்னு.
வேலையால வந்து சாப்பிட்ட அப்புறம்தான் கனிச்சேன்.இப்போ என்ன செய்யலாம்.முட்டை சைவம்ன்னு சொன்ன சேவியர் அண்ணாதான் பரிகாரம் சொல்லணும்///
சோ… கருவாடு உங்களைப் பொறுத்தவரைக்கும் சைவம், முட்டை தான் அசைவமா ? இதுக்கு நான் பரிகாரம் பண்ணணுமா ?
அந்த கருவாட்டுக் குழம்பை எனக்கு அனுப்புங்க முதல்ல 😀
LikeLike
//பொறுமைக்கு எல்லையே இல்லை என்பதற்கு உதாரணமோ!
//
இருந்தாலும் ரொம்பவே வியக்க வைத்த நுணுக்கமான கவனம்ம்ம்…
LikeLike
//Nice shots.
Simply superb//
நன்றி பென்ஸ்..
LikeLike
so quite egg
LikeLike
Mihavm porumai, mihamiha arumai.
LikeLike