அரசியல் சதுரங்க விளையாட்டு பரபரப்புக் கட்டத்தை எட்டியிருப்பதை சென்னையின் மூலை முடுக்கெங்கும் காண முடிகிறது.
தேமுதிக இப்படி ஒரு பெரிய கட்சியாக உருவெடுக்கும் என யாரும் நினைத்திருக்கவில்லை. வீசோ வீசென்று அவரை நோக்கி எல்லா விதமான வலைகளும் வீசப்படுகின்றன.
விஜயகாந்துக்கு பல கவலைகள் இருக்கின்றன.
ஒன்று, திமுக, அதிமுக – போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன். வைத்தால்…., ,என்றெல்லாம் வீர வசனங்களைப் பேசியதால் தான் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. கூட்டணி வைத்தால் அந்த இமேஜ் பாதிக்கப்படலாம் என்பது ஒரு குவார்டர் கவலை.
ஒருவேளை கூட்டணி வைக்காமல் போனாலும் வாக்குச் சதவீதம் குறைந்து போய் சிக்கல் உருவாகலாம் என்பது ஒன்னொரு ஆஃப் கவலை.
எனினும் இந்தக் கவலைகளையெல்லாம் விட மிகப்பெரிய ஃபுள் கவலை விஜயகாந்துக்கு இருக்கும் கடன்.
சுமார் 750 கோடி வரை ஒரு தனி நபரிடமே கடனாய் வைத்திருக்கிறாராம் விஜயகாந்த். அப்படியானால் அந்தக் கடனை கொஞ்சமேனும் அடைக்க ஏதாவது வழி செய்ய வேண்டுமே !
7 இடங்களும் 600 கோடி ரூபாய்களும்
வேண்டும்.
என்பது தான் தேமுதிக தரப்பிலிருந்து திமுக வுக்கு அனுப்பப்பட்ட செய்தியாம். அதாவது பா.ம.க வுக்கு 6 இடங்கள் திமுக ஒதுக்கினால் தனக்கு அதை விட ஒரு இடம் அதிகமாய் ஒதுக்கி ஏழு இடங்கள் வேண்டும் என கேப்டன் கர்ஜித்தாராம்.
கூடவே அந்த 600 !!! கோடி !!!! தமிழனுக்கு “வாக்கு” தான் முக்கியம் !!!! கொஞ்சம் கொஞ்சமாச்சும் கடனை அடைக்கணும்ல! !
திமுக தரப்போ, காங்கிரசைக் கூப்பிட்டு பெருசுங்களா உங்களுக்கு 15 சீட் !
அதுல நீங்க எப்படி வேணும்னாலும் பேசிக்கோங்க. வேணும்னா தேமுதிக க்கு 7 குடுத்துட்டு நீங்க 8 இடத்துல போட்டியிட்டாலும் எனக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை என புள்ளி வைத்துவிட்டதாம்.
எனினும், அரசியலில் புள்ளிகள் மாறுவதும், நீள்வதும் அழிவதும் எல்லாம் சகஜமாச்சே. பா.ம.க திமுகவில் சேர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் (அன்பு மணி சும்மா விடுவாரா என்ன ? ) தேமுதிகவுக்கு அதைவிட அதிக இடங்கள் தருவது சாத்தியமில்லை என்பது திமுகவின் வாதம். பாவம் காங்கிரஸ் தான் இதில் மாட்டிக் கொண்டு டவலுக்குக் கீழே விரல் பிடித்துக் கொண்டிருக்கிறது.
ஆமா, வை.கோ ன்னு ஒரு தலைவர் இருந்தாரே.. அவர் என்ன ஆனார் என்றேன் அப்பாவியாய் ஒரு அரசியல் பிரமுகரிடம்
“யாரு ? உண்ணாவிரதம் இருக்கிற பெருசுகளுக்கு ஜூஸ் குடுத்துட்டு இருப்பாரே அவரா ?” என்ற அவரது கேள்விக்குப் பின் நான் ஏதும் கேட்கவும் இல்லை.
அவர் எதுவும் சொல்லவும் இல்லை.
You must be logged in to post a comment.