தூக்கமே வரலையா ?

 sleep

தூக்கத்துக்கும் உடல்நலத்துக்கும் தொடர்புண்டு என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் தூக்கத்துக்கும் தற்கொலைக்கும் கூட தொடர்பு உண்டு என அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

“படுத்தால் தூக்கம் வர ரொம்ப நேரமாகிறது, தூக்கம் வந்தாலும் நிம்மதியான தூக்கமா இருப்பதில்லை, அதிகாலை மூணு மணிக்கு முழிச்சா அப்புறம் தூக்கமே வரதில்லை….” என புலம்பும் மக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் எனும் உந்துதலுக்கு ஆளாவார்கள் என எச்சரிக்கின்றது இந்த ஆய்வு.

ஆண்டுதோறும் உலக அளவில் சுமார் 88 இலட்சம் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம். ஒவ்வோர் தற்கொலைக்குப் பின்னாலும் பல தற்கொலை முயற்சிகள் இருக்கின்றன. ஒரே முயற்சியில் பெரும்பாலும் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை.

ஒவ்வோர் சாவுக்குப் பின்னாலும் நாற்பது முறை கூட “தற்கொலை முயற்சிகள்” நடந்திருக்கின்றனவாம். இப்படிப்பட்ட தற்கொலை முயற்சிகளுக்கு இந்த தூக்கமின்மையும் ஒரு முக்கியமான காரணமாகிவிடுகிறது.

சரியான தூக்கமின்மை பல்வேறு காரணங்களால் வருகிறது. மன அழுத்தம், உடல் நலமின்மை தொடங்கிய பல்வேறு காரணங்களால் வரும் தூக்கமின்மை தெளிவற்ற மனநிலைக்கு மனிதனைத் தள்ளி, தற்கொலை சிந்தனையைத் தூண்டி விடுகிறது என்பதே மருத்துவர்களின் கூற்று.

இதற்கான உளவியல் காரணங்கள் என்ன என்பது தெளிவாக கண்டறியப்படவில்லை. ஆனால் தற்கொலை சிந்தனைக்கும், தூக்கமின்மைக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பது மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சீரோடோனின் எனும் வேதியல் பொருள் தான் மனதின் தன்மையை நிர்ணயிக்கிறது, அந்த வேதியல் பொருளின் நிலையற்ற தன்மைக்கு இந்த தூக்கமின்மை ஒரு முக்கியக் காரணமாகிவிடுகிறது. எனவே தான் இந்த தற்கொலை சிந்தனைகள் தலை தூக்குகின்றன என்கிறார் மருத்துவர் டானியல் பிரீமென்.

எனினும், தூக்கமின்மையில் தவிக்கும் எல்லோருக்குமே தற்கொலை சிந்தனைகள் வரவேண்டுமென்பதில்லை. உலகெங்கும் தற்கொலை சிந்தனை கொண்டவர்களை விட தூக்கமின்மையால் தவிக்கும் மக்கள் மிக அதிகம் என்பது கவனிக்கத் தக்கது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தூக்கம் மிகவும் இன்றியமையாயது என தொடர்ச்சியாய் ஆய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. நிம்மதியான தூக்கத்துக்கு நேரம் ஒதுக்குவதும், அதற்காக மனதை இலகுவாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவேண்டும் என்பதும் கவனிக்கவேண்டிய செய்திகளாகும்.

11 comments on “தூக்கமே வரலையா ?

  1. ரொம்ப நல்ல பதிவு சேவியர் 😀

    //என்ன அப்புறம் என் காலேஜ்ல , ஆபீஸ் ல தூங்குன தப்புன்னு சொல்ரன்களோ//

    அது தூங்குற இடம் இல்ல 😛
    பதிவு வீட்டுல தூங்குரத பத்தி நண்பா 😀

    Like

  2. Pingback: தூக்கமே வரலையா ? « SEASONSNIDUR

  3. For everything the relative work idone and executed ,there will be ok.The morning wake ,pray, physical exercise,path, breakfast,then office work ,lunch a few seconds break ,work ,return to home ,walking ,small exercise,play or enjoyment with family and night dinner ,rest a few minutes ,then sleep will be a harmony function .of body .But IT field it affects to some extent.At any cost,we have to sleep.by DK.

    Like

Leave a comment