Awesome Chennai Flood Song by SPB, Chitra , Bombay Jaysree & many others.

An Excellent Song By S. P. Balasubramanyam, K.S. Chitra , Bombay Jayashri , Tippu , Harini , Sunitha Sarathy , N.S.K. Ramya , Timmy Madhukar , Pooja , Aalap Raju , Stephen J Renswick & Beryl Natasha

 

Lead Music By : Augustin Ponseelan.

Chennai Flood

 

மழையே இன்னும் ஈரம் போதலையோ
கண்ணீரை வாங்கிப் போனாயோ

மழையே உந்தன் கோபம் தீரலையோ
தண்ணீரால் யுத்தம் செய்தாயோ

தீவிரவாதக் கூட்டம் போல்
ஊரை சுற்றி வளைத்தாயே

ஆதரவில்லா எம்மவரை
நீருக்குள்ளே புதைத்தாயே

அழவோ தொழவோ விழியில் நீரில்லையே

*

கனவே நீயும் கலைந்தே போனாயோ
தண்ணீரில் கரைந்தே போனாயோ

கூரை கூட நீரைத் தீண்டியதோ
பசியோடு ஜீவன் வாடியதோ

இருளான நேரமிது
ஆயிரம் நேசம் நீள்கிறது

தவியாய் தவிக்கிற இதயத்தில்
வேற்றுமை இன்றி வாழ்கிறது

நிஜமோ கனவோ மனமே கேட்கின்றதே

*
மனதில் இரக்கம் பிறந்து விட்டால்
உதவும் கரங்கள் முளைத்து விடும்
கரங்கள் ஒன்றாய் இணைந்து விட்டால்
இரவில் கூட விடியல் வரும்
மழையும் ஓர் நாள் ஓய்ந்து விடும்
வெள்ளம் விரைவாய் வடிந்து விடும்
கண்ணீர் துடைக்கும் கரமிருந்தால்
தண்ணீர்த் துயரம் முடிந்து விடும்
மறைந்தே கிடந்த மனிதத்தை
மீண்டும் திறந்தது மழை தானோ
தொலைந்தே கிடந்த நேசத்தை
தேடித் தந்ததும் மழை தானோ

*

எங்கள் உயிரே சென்னை
எங்கள் உறவே சென்னை
எங்கள் உணர்வே சென்னை
நீ எழுந்திடு

எங்கள் உயிரே சென்னை
எங்கள் உறவே சென்னை
எங்கள் உணர்வே சென்னை
தடை தாண்டிடு

Lyric : Xavier

 

 

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s