படங்கள் : நாலு பேரு பாக்கணும்ன்னா இப்படித்தான் …

எல்லாரையும் போல இருக்கணும்னு ஏன் நினைக்கிறே ? நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்கலாமே” இந்த வார்த்தையை குத்து மதிப்பா எத்தனை தடவை கேட்டிருப்போம். 

ஒண்ணு மட்டும் வித்தியாசமா இருந்தா எப்படி இருக்கும், சுவாரஸ்யமான இந்த படங்கள் சொல்லக் கூடும்.

நள்ளிரவு மின்னல்

One

ஐந்தில் வளையாதது…

 

Two

மி… த.. பர்ஸ்டு….

 

Six

தூக்கத்துல கொட்டாவி விடற வியாதி உண்டா..

Fine

வெள்ளைப் புறா ஒன்று.. 

Three

அதான்… அதே தான் !

Four

 

தமிழிஷில் வாக்களிக்க…

இது தாண்டா டூ வீலர் !

 

twoகொஞ்ச தூரத்துல இருக்கிற கடைத் தெருவுக்குப் போகவேண்டும். ஆனால் கார் எடுத்துக் கொண்டு செல்ல முடியாத ஒரு நிலை. சின்னதா ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்குமே என மனதுக்குள் சிந்தனை ஓடும்.

நகர் முழுதும் வாகன நிறுத்தம் ஒரு மிகப்பெரிய சவால். வண்டி சின்னதா இருந்தா நிறுத்தியிருக்கலாம் என புலம்பல் தெறிக்கும்.

எரிபொருள் பர்சை எரித்து விடுகிறது, கொஞ்சம் செலவு குறைவான வண்டி இருந்தால் நன்றாக இருக்குமே என பெருமூச்சு வழியும்.

இந்த அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதற்குரிய ஒரு புது வகையான இருசக்கரக் கார் ஒன்று வரப்போகிறது.

பக்கத்து தெருக்களில் சுற்றவும், அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று வரவும் , அதிக தூரமற்ற இடங்களுக்கு பயணிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படும் இந்த வாகனம் மின் சக்தியில் இயங்கப்போகிறது என்பதும், சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதது என்பதும் சிறப்பு அம்சங்களாகும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். உயர் ரக சமநிலைத் தொழில் நுட்பம் _mg_6017இருசக்கரத்தில் இந்த வாகனம் நிலைகொள்ளவும் வேகமாய் இயங்கவும் துணை செய்கிறது.

உயர் கணினி தொழில் நுட்பத்தில் தயாராகவுள்ள இந்த வாகனம், விபத்துகள் ஏற்படும் சூழலைத் தவிர்க்கக் கூடிய ஆற்றல் படைத்ததாக இருக்குமாம்.

அளவில் சிறிய வியக்க வைக்கக்கூடிய வடிவத்தில் குறைந்த செலவில் ஓடும் இந்த வாகனத்தின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் ஒரு கார்வாங்கும் விலையில் இந்த வாகனம் மூன்று நான்கு வாங்கலாம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

oneசெக்வே மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த வாகனம் விற்பனைக்கு வர இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம் !

இந்த நக்கல் தானே வேணாங்கிறது !

imag0067

 

இது அரசியல் காலம்.

இனிமேல் புகைப்பது, சினிமா காரர்களைப் பகைப்பது போன்ற சமாச்சாரங்களெல்லாம் சில நாட்களுக்கு நடக்காது என்பதைத் தெரிந்து தானோ என்னவோ இவ்வளவு ஹாயாக, போர்ட் மேலேயே கையைப் போட்டு புகைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர்.

“என்னங்க… நோ பார்க்கிங்னா, அங்கே வண்டியை நிப்பாட்டுவீங்க ! நோ ஸ்மோக்கிங்னா அங்கே புகை பிடிப்பீங்களா என சிரித்துக் கொண்டே கேட்டேன்” (கொஞ்சம் பயந்து கொண்டு கூட )

அவர் நக்கல் பேர்வழி போல,

“தமிழ் நாடு கெட்டுப் போச்சுங்க. வண்டியை நிப்பாட்டற இடமா பாத்து நோ பார்க்கிங் போர்ட் மாட்டுவாய்ங்க. அதே போல நான் தம் அடிக்கிற இடமா பாத்து இந்த போர்டையும் மாட்டியிருக்காய்ங்க” என்றார் கூலாக !

“யாராச்சும் போன் பண்ணி கம்ப்ளயிண்ட் பண்ணினா என்ன பண்ணுவீங்க ?” என்றேன்

“தம்மு அதுக்குள்ள முடிஞ்சுடும். நான் கிளம்பிடுவேன். நீ இப்போ கிளம்பு காத்துவரட்டும்” என்றார், முறைத்துக் கொண்டே.

திருடனாய் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

சார்… கொஞ்சம் வெளியே வரீங்களா ?

 girlspecs

இன்றைக்கு சிறுவர்கள் பலர் தங்கள் பதின் வயதுகளிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு அலைவதை பார்க்க முடிகிறதல்லவா ? சற்றே பின்னோக்கித் திரும்பிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு முன் கண்ணாடி போட்ட மனிதர்களைச் சந்திப்பதே அபூர்வம் அல்லவா ?

அதெப்படி இன்றைக்கு மட்டும் மிக மிக இளம் வயதிலேயே கண்ணாடி தேவைப்படுகிறது ? இப்படி ஒரு சிந்தனையின் விளைவாக நிகழ்ந்தேறியது ஆஸ்திரேலியாவில் ஒரு ஆராய்ச்சி.

4000 பேரை உள்ளடக்கி, அவர்களுடைய பார்வைக் குறைபாட்டுக்கான காரணங்களை மிக விரிவாக ஆராய்ந்ததில் கிடைத்த பதில் வியப்பூட்டுகிறது.

அதாவது, குழந்தைகள் வீட்டுக்கு வெளியே போதுமான நேரத்தைச் செலவிடாததே இந்த பார்வைக் குறைபாடின் காரணம் என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. மருத்துவ மொழியில் சொல்லவேண்டுமெனில், எட்டு வயதிற்கும் பன்னிரண்டு வயதுக்கும் இடைப்பட்ட பருவத்தில் வளர்ச்சியடையும் மயோபியா சரியான அளவில் இல்லாததே இந்த குறைபாட்டுக்குக் காரணம்.

குழந்தைகள் சிறுவயதில் வெளியே ஓடி விளையாடுவதன் அவசியத்தை இந்த ஆராய்ச்சி அதிர்ச்சியுடன் அறிவிக்கிறது. கண்ணின் கருவிழி சரியான அளவில் இருப்பதற்கும், ஒழுங்கான வடிவில் இருப்பதற்கும் இயற்கை வெளிச்சம் மிக மிக அதிகம் என்பது அந்த ஆராய்ச்சி அடித்துச் சொல்லும் செய்தியாகும்.

சிங்கப்பூரில் 30 விழுக்காடு குழந்தைகளுக்கும் இந்த நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு திடுக் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அங்கே குழந்தைகள் வெளியே அலைவது மிகவும் குறைவு என்பதால் வருவதாம் இந்தப் பிரச்சனை.

வீடுகளில் தொலைக்காட்சியிலும், கணினி விளையாட்டுகளிலும் முழு நேரத்தையும் செலவிட்டு இறுக்கிக் கட்டப்பட்ட அடுக்கு மாடிகளில் குடியிருப்போர் அதிக கவனத்துடன் குறித்துக் கொள்ள வேண்டிய செய்தி இது.

ஏற்கனவே வெயிலில் கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு மிகவும் இன்றியமையானது எனும் ஆராய்ச்சிகள் வெளிவந்திருக்கின்றன. இப்போது, வெளியே சரியான நேரம் செலவிடவில்லையேல் பார்வைக்கே பிரச்சினை என்னும் புது ஆராய்ச்சியும் அத்துடன் சேர்ந்து கொண்டிருக்கிறது.

கிராமங்களில் சுதந்திரமாய் ஓடி விளையாடும் சிறுவர்கள் நல்ல ஆரோக்கியமான பார்வையுடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாய் இருக்கக் கூடும்.

குழந்தைகளின் வாழ்க்கை அறைகளுக்கும் ஒரு நாள்காட்டியைப் போல தொங்குவதற்கானதல்ல, ஒரு பட்டத்தைப் போல வானில் பறந்து திரிவதற்கானது. இயற்கையுடன் இணைந்து வாழ்தலே வலிமையானது என்பதை இந்த ஆராய்ச்சியும் வலியுறுத்துகிறது.

புத்தகப் பிரியர்களுக்கு மட்டும் !!!

 

வெளியூருக்குச் செல்லும்போதெல்லாம் வாசிப்பதற்கென்று நான்கைந்து புத்தகங்கள் எடுத்துச் செல்ல விரும்புவோம். ஆனால் எடை பயமுறுத்தும். கடைசியில் வீட்டில் இருக்கும் புத்தகங்களில் எடை குறைவான நூல்களின் ஓரிரு நூல்களை எடுத்துக் கொண்டு  திருப்தியடைந்து விடுவோம்.

சில புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென ஆர்வம் கொப்பளிக்கும், ஆனால் தெளிவற்ற எழுத்துக்களும், பழைய சிதைந்த எழுத்துக்களும் வாசிக்க விடாமல் தொல்லை படுத்தும்.

கொஞ்சம் வயதானவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், பொடிப் பொடியாய் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை உற்று உற்றுப் பார்த்து வாசிப்பதிலேயே மிச்சமிருக்கும் வயதும் ஓடிப் போய்விடும்.

இத்தனை பிரச்சனைகளும் ஒரே நொடியில் தீர்ந்து விட்டது என்றால் நம்புவீர்களா ?
இனிமேல் நீங்கள் பயணம் போகும் போது ஐநூறு புத்தகங்களை உங்கள் சட்டைப் பையில் சொருகிக் கொள்ளலாம் என்றோ, நூலின் எழுத்துருவை உங்களுக்குப் பிடித்த அளவுக்கு பெரிதாக்கி வாசிக்கலாம் என்றோ சொன்னால் நம்புவீர்களா ?

நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும். சோனி ரீடர் என்றொரு புதிய கருவி வந்திருக்கிறது உங்களை நம்பவைக்க. ஒரு சிறு புத்தகத்தின் அளவே உள்ள இது ஒரு மின்னணுப் புத்தகம்.

இப்போது சந்தையில் பிரபலமாகி வரும் மின் நூல்களை இந்த மின்னணுப் புத்தகத்தில் சேமித்து வைத்தால் போதும். எப்போது வேண்டுமெனிலும் வாசிக்கலாம்.  நூற்றுக் கணக்கான நாவல்களையும், கவிதை நூல்களையும், கட்டுரை நூல்களையும் இதனுள் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பிடித்தமான அளவுக்கு எழுத்துருவைப் பெரிதாக்கிக் கொள்ளலாம். எத்தனை பக்கம் படித்தேன் என ஒவ்வொரு முறையும் குழம்பவும் தேவையில்லை. ஒவ்வொரு முறை இதைத் திறக்கும் போதும் கடந்த முறை எத்தனைப் பக்கங்கள் படித்தீர்கள் என்பதை நினைவில் வைத்திருந்து சரியாய் அதே பக்கத்தில் உங்களைக் கொண்டு செல்லும்.

கணினியில் இந்த வசதிகள் எல்லாம் உண்டு. ஆனால் என்ன, கணினியை நீங்கள் குளியலறையில் கொண்டு சென்று வாசிக்க வசதிப்படாது. செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்லவும் முடியாது. ஆனால் இந்தக் கருவி அப்படியல்ல.

புத்தகம் கிழிந்து போகும் என்ற கவலையும் இந்தக் கருவியில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் புது நூல்களை நுழைக்கவும் செய்யலாம், பழைய நூல்கள் படித்தபின், அல்லது வேண்டாமென தோன்றும் கணத்தில் அழித்துவிடவும் செய்யலாம்.

இந்த புதிய மின்னணு நூல் பிரபலமாகும் என்றும், இது புத்தகப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இனி வரும் காலங்களில் மின் நூல்கள் அதிகம் விற்பனையாகவும், காகித பயன்பாடு குறைந்து காடுகள் காப்பாற்றப்படவும் இத்தகைய கருவிகள் மிகவும் துணை செய்யும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் என்ன, வீட்டுக்கு நண்பர்கள் வரும்போது இது தான் என்னோட புத்தக அலமாரி என நீண்ட அலமாரியையும் அதில் நிரம்பி வழியும் நூல்களையும் காட்டிப் பெருமையடிக்க முடியாது. எங்கேப்பா உன் நூலகம் என யாராச்சும் கேட்டால் சட்டைப் பையிலிருந்து இதை எடுத்து நீட்ட வேண்டியது தான்.

சீன நதியில் என் ஓடம்

அத்தி பூத்தார் போல கிடைத்த ஓய்வு வேளையில் வலைத்தளத்தை நோண்டிக்கொண்டிருந்தேன். சரி நம்ம தளத்தையெல்லாம் யாரெல்லாம் வந்து பாக்கறாங்க, எங்கெங்கே இணைப்பு கொடுத்திருக்கிறாங்க என பார்த்த போது நிறைய வியப்பு காத்திருந்தது.

முதல் வியப்பு  சீனத் தளத்தில்  , ஓவியம் போன்ற சீன எழுத்துக்களின் இடையே “கனியிலே கலை வண்ணம் கண்டார் “ எனும் நமது ஒரு பதிவின் சுட்டியும், பதிவின் சாராம்சமும். 

கவிப்பேரரசு பாணியில சொல்லணும்ன்னா சீன நதியிலும் என் ஓடம்

அதற்கும் நிறைய பேர் பின்னூட்டமிட்டிருந்தார்கள். என்னன்னு தான் புரியல. விவேக் கிட்டே கேட்டா, “ இங்கேயுமாடா ஜிலேபியைப் பிச்சுப் போட்டிருக்காங்க “ என்று கேட்டாலும் கேட்பார்.

சில ஸ்பானிஷ் தளங்களிலிருந்தெல்லாம் அலசல் வலைத்தளத்தின் சில பதிவுகளைப் போட்டிருந்தார்கள். பெரும்பாலும் படம் சார்ந்தவை. (அதை சொல்லணுமா என்ன ? )

Long Live China !

படத்துக்கான விளக்கம் : சீன தளத்தில் நம்ம படைப்பை பிரசுரித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சீன ஒலிம்பிக் படம் ஒன்று J

எங்கே என்ன சாப்பிடலாம் !

சே… நார்த் போக வேண்டியிருக்கு. அங்கே போய் எதைச் சாப்பிடறதுன்னே தெரியலையே என தென்நாட்டு வாசிகளும், சவுத் போனா சோறு, சாம்பார் தவிர வேற என்ன இருக்கு என குழம்பும் வட வாசிகளும் இந்த படத்தை கிளிக்கிப் பாருங்கள்.

 

எந்த ஊருக்குப் போனா, என்ன சாப்பிடலாம் எனும் பட்டியல். சுவாரஸ்யமாய் இருந்ததால் பகிர்கிறேன்.

 

பின் குறிப்பு : எவ்வளவு சாப்பிடலாம் என்பது உங்கள் வயிறையும், பர்சையும் பொறுத்தது

முட்டை ஸ்பெஷல் : அசைவம் அல்ல !!!

முட்டை கிடைச்சா என்ன செய்வோம் ? வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கிப் போட்டு சூடா ஒரு ஆம்லெட், கொஞ்சமா பெப்பர் தூவி அப்படியே லபக்குவோம்.

 சரி அதுக்கு பொறுமையில்லேன்னா, சுடுதண்ணீரில் போட்டு அவித்து  விழுங்குவோம். இல்லேன்னா ஆஃப் பாயில். பயில்வான் பக்கிரிகளெனில் கோழி இறக்கி வைத்த சூட்டோடு சூடாக பச்சையாகவே உடைத்து வாயில் ஊற்றுவார்கள்.

கிராமத்தில் தவிட்டுக்கு இடையேயும், சாம்பலுக்கு உள்ளேயும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் முட்டை அடைகாக்கவும் அவ்வப்போது அனுப்பப்படும். அப்புறம் ? 

பள்ளி நாட்களில் முட்டை ஓட்டின் மீது கரி கொண்டு மீசை வரைந்து விளையாடுவது ஒரு கலை. இதைத் தவிர முட்டையை வைத்து என்னதான் செய்து விட முடியும் ? என நினைப்பவர்களை வியக்க வைக்கிறார் இவர்.

அதீத கவனத்துடன் முட்டைகளை ஒவ்வொன்றாய் அடுக்கி….


கரணம் தப்பினால் மரணம் … இல்லை இல்லை கவனம் தப்பினால் ….

வாவ் !!!! முட்டை நாட்டைப் பிரதிபலிக்குமா !!!!

இல்லை நோட்டைப் பிரதிபலிக்குமா ?

மெல்லினத்தின் காலில் வல்லினம் !!!

அடேங்கப்பா…. இப்படியெல்லாம் கூட பெண்களுக்கு செருப்புகள் உண்டா என வியக்க வைத்த செருப்புகள் இவை….

என்ன பாப்பா,  Iron Box ஐ இடம் மாத்தி கால்ல கட்டிட்டியா ?

இதென்ன ? காலணியா?  இல்லை கால் ஆணியா ?

பாத்தும்மா, பாவப்பட்ட பசங்க ஏதாச்சும் சொல்லிட்டாங்கன்னு கால்ல கிடக்கிறதை கழட்டிடாதீங்க…. அதுக்குப் பதிலா உருட்டுக் கட்டையால அடிக்கலாம். உயிர் பிழைக்க கொஞ்சமாச்சும் சான்ஸ் உண்டு

இதை எங்கயோ பாத்திருக்கேனே.. ஆங்… செருப்பு கடையில் பாதத்தோட சைஸ் பாக்க வெச்சிருப்பாங்க… அதானே இது ?

இவ்ளோ மரம் கிடைச்சா வீட்டுக்கு ஒரு கதவு செய்யலாம் போல !

ஹீல்ஸ் கிளிகள் என்னை மன்னிப்பார்களாக !

பெண்களுக்கும் பிடிக்காத ஐஸ்கிரீம்

பெண்கள் ஐஸ்கிரீம் பிரியர்களாக இருப்பார்கள் என்பது ஆண்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், எப்படிப்பட்ட ஐஸ்கிரீம் பிரியைகளானாலும் இப்படி ஐஸ்கிரீம் சாப்பிட கொஞ்சம் தயங்கித் தான் ஆகவேண்டும் இல்லையா ?