இது தாண்டா டூ வீலர் !

 

twoகொஞ்ச தூரத்துல இருக்கிற கடைத் தெருவுக்குப் போகவேண்டும். ஆனால் கார் எடுத்துக் கொண்டு செல்ல முடியாத ஒரு நிலை. சின்னதா ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்குமே என மனதுக்குள் சிந்தனை ஓடும்.

நகர் முழுதும் வாகன நிறுத்தம் ஒரு மிகப்பெரிய சவால். வண்டி சின்னதா இருந்தா நிறுத்தியிருக்கலாம் என புலம்பல் தெறிக்கும்.

எரிபொருள் பர்சை எரித்து விடுகிறது, கொஞ்சம் செலவு குறைவான வண்டி இருந்தால் நன்றாக இருக்குமே என பெருமூச்சு வழியும்.

இந்த அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதற்குரிய ஒரு புது வகையான இருசக்கரக் கார் ஒன்று வரப்போகிறது.

பக்கத்து தெருக்களில் சுற்றவும், அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று வரவும் , அதிக தூரமற்ற இடங்களுக்கு பயணிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படும் இந்த வாகனம் மின் சக்தியில் இயங்கப்போகிறது என்பதும், சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதது என்பதும் சிறப்பு அம்சங்களாகும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். உயர் ரக சமநிலைத் தொழில் நுட்பம் _mg_6017இருசக்கரத்தில் இந்த வாகனம் நிலைகொள்ளவும் வேகமாய் இயங்கவும் துணை செய்கிறது.

உயர் கணினி தொழில் நுட்பத்தில் தயாராகவுள்ள இந்த வாகனம், விபத்துகள் ஏற்படும் சூழலைத் தவிர்க்கக் கூடிய ஆற்றல் படைத்ததாக இருக்குமாம்.

அளவில் சிறிய வியக்க வைக்கக்கூடிய வடிவத்தில் குறைந்த செலவில் ஓடும் இந்த வாகனத்தின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் ஒரு கார்வாங்கும் விலையில் இந்த வாகனம் மூன்று நான்கு வாங்கலாம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

oneசெக்வே மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த வாகனம் விற்பனைக்கு வர இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம் !

வியப்பூட்டும் முதல் கணினி

இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.

இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணினி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலமை இன்று நிலைபெற்று விட்டது எனலாம்.

இன்றைக்கு இப்படி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகச் சிறிய அளவில் நமது பைகளில்  அமைதியாய் துயிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவம் எப்படி இருந்தது ? அதன் பின்னால் நிகழ்ந்த பல்லாண்டு கால உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.

கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும்.  அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.

அந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.

1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி இந்த முதல் கணினி தன்னை நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் முளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.

பேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இருவருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் நிஜம்.

முட்டை ஸ்பெஷல் : அசைவம் அல்ல !!!

முட்டை கிடைச்சா என்ன செய்வோம் ? வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கிப் போட்டு சூடா ஒரு ஆம்லெட், கொஞ்சமா பெப்பர் தூவி அப்படியே லபக்குவோம்.

 சரி அதுக்கு பொறுமையில்லேன்னா, சுடுதண்ணீரில் போட்டு அவித்து  விழுங்குவோம். இல்லேன்னா ஆஃப் பாயில். பயில்வான் பக்கிரிகளெனில் கோழி இறக்கி வைத்த சூட்டோடு சூடாக பச்சையாகவே உடைத்து வாயில் ஊற்றுவார்கள்.

கிராமத்தில் தவிட்டுக்கு இடையேயும், சாம்பலுக்கு உள்ளேயும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் முட்டை அடைகாக்கவும் அவ்வப்போது அனுப்பப்படும். அப்புறம் ? 

பள்ளி நாட்களில் முட்டை ஓட்டின் மீது கரி கொண்டு மீசை வரைந்து விளையாடுவது ஒரு கலை. இதைத் தவிர முட்டையை வைத்து என்னதான் செய்து விட முடியும் ? என நினைப்பவர்களை வியக்க வைக்கிறார் இவர்.

அதீத கவனத்துடன் முட்டைகளை ஒவ்வொன்றாய் அடுக்கி….


கரணம் தப்பினால் மரணம் … இல்லை இல்லை கவனம் தப்பினால் ….

வாவ் !!!! முட்டை நாட்டைப் பிரதிபலிக்குமா !!!!

இல்லை நோட்டைப் பிரதிபலிக்குமா ?

ஆடையா ? அப்படீன்னா என்ன ?

உலகெங்கும் காடுகளை நாகரீக மனிதன் அழித்து வருவதால் பல பழங்குடி இனமே அழியும் அபாயம் இருக்கிறது என கவலை தெரிவிக்கிறார் உலக பழங்குடியினர் பாதுகாப்புக் குழுவான Survival International குழுவின் இயக்குனர் ஸ்டீபன் கோரி.

 

இதுவரை வெளி உலகத்தோடு சற்றும் தொடர்பே இல்லாத சுமார் நூறு பழங்குடி இனமாவது உலகில் நிச்சயம் உண்டு என அடித்துச் சொல்கிறார் அவர். இவற்றில் பாதி இனம் பிரேசில் மற்றும் பெரு நாட்டை ஒட்டிய பகுதிகளில் இருப்பதாக கருதப்படுகிறது.

 

உலகின் அடர்ந்த காடான அமேசான் காட்டுப் பகுதியின் மேல் பறந்த ஒரு விமானத்திலிருந்து வியப்பூட்டும் ஒரு பழங்குடி இனத்தைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தில் காணப்படும் மக்கள் உடலெங்கும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணம் பூசியபடி வானத்தைப் பார்த்தபடி நிற்கின்றனர்.

விலங்குகளை மட்டுமே வேட்டையாடிப் பழக்கப்பட்ட இவர்கள் வானத்தில் பறந்த விமானத்தைக் கண்டு மிகப்பெரிய பறவை என நினைத்திருக்களோ, அல்லது அழிக்க வந்த சாத்தான் என நினைத்தார்களோ தெரியாது ஆனால் தங்களிடமிருந்த அம்பையும் வில்லையும் எடுத்து விமானத்தின் மீது எய்யத் தயாராகிவிட்டனர்.

 

இந்தக் காட்சி ஒன்றே இந்த பழங்குடியினர் வேறு எந்த இடங்களோடும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதன் ஆதாரமாகும். விலங்குகளைப் பிடிப்பதற்குரிய கவனத்துடன் குனிந்த நிலையில் அதீத எச்சரிக்கை உணர்வுடன் சிலர் வானத்தைப் பார்ப்பதும் இந்த புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.

 

Survival International  குழுவின் ஜோஸ் கார்லோஸ் எனும் உறுப்பினர் இதுகுறித்து, நாகரீகம் எனும் பெயரில் நாம் செய்து வரும் தன்னலமான செயல்களினால் இத்தகைய ஒரு பூர்வீக இனமே பாதிப்புக்கு உள்ளாவது வருத்தத்துக்குரியது, என குறிப்பிடுகிறார். இத்தகைய பழங்குடியினருக்கு இருக்கும் வாழும் உரிமையை நாம் அவர்களுடைய வாழ்க்கைச் சூழலை சேதப்படுத்தாமலும், வாழும் சூழலை அழிக்காமலும் இருப்பதன் மூலம் நிலைநாட்டவேண்டும் வேண்டும் எனவும் இந்த குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகக் கட்டிட வரலாற்றில் முதன் முறையாக….

சுழலும் கட்டிடம்

 

 

 

 

 

 

 

“அசையாம நல்ல ஸ்டாங்கா இருக்கணும்பா கட்டிடம் “ என்பது தான் இதுவரை நாம் கேட்ட வாசகம். இந்த வாசகத்தை அர்த்தமிழக்கச் செய்யப்போகிறது துபாயில் உருவாக இருக்கும் புதிய கட்டிடம் ஒன்று.

எண்பது மாடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் ஒவ்வோர் மாடியும் நிலையாக இல்லாமல் சுற்றக் கூடிய வகையில் அமையப் போகிறதாம்.

இந்த சிந்தனையின் பின்னால் இருக்கும் ரொட்டேட்டிங் டவர் டெக்னாலஜி கம்பெனியின் நிறுவனர் டேவிட் ஃபிஷர் , வாழ்க்கையே நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கிறது, கட்டிடம் மட்டும் நிலையாய் இருப்பது ஏன் என தத்துவக் கிச்சுக் கிச்சையும் மூட்டுகிறார்.

வலிமையான காங்கிரீட் மையத்திலிருந்து இந்த மாடிகள் சுழலுமாம். ஒரு மாடியை நீங்கள் வாங்கினால் அந்த மாடியை உங்கள் விருப்பம் போல அசைத்துக் கொள்ளலாமாம்.

வெயில் முகத்தில் அடிக்கிறது என்றால் மாடியை கொஞ்சம் அந்தப் பக்கமாகத் திருப்பிக் கொள்ளலாம். ஏதோ சத்தம் கேட்கிறதே என்று நாம் ஓடத் தேவையில்லை, வீட்டை கொஞ்சம் சுற்றவிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த கட்டிடத்துக்குத் தேவையான முழு மின் தேவையையும் அந்தக் கட்டிடமே சூரிய ஒளியிலிருந்து தயாரித்துக் கொள்ளும் வகையில் இந்த கட்டிடம் தயாராகப் போகிறது என்பது சுவாரஸ்யச் செய்தி.

நீச்சல் குளம், தோட்டம் என வசதிகள் இருப்பதுடன் காரையும் தங்கள் மாடிக்குப் பக்கத்திலேயே கொண்டு பார்க் செய்யவும் வசதி செய்யப்படுமாம்.

ஆனால், வீட்டுக்குத் தேவையான தண்ணீர் பைப் களை எப்படி மாட்டுவது என்பதில் தான் பெரிய சிக்கலே இருக்கிறதாம். ஆனாலும் அதற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன என்கிறார்கள்.

355 மில்லியன் பவுண்ட் செலவில் இந்தக் கட்டிடம் கட்டப்பட இருக்கிறதாம். அமெரிக்காவின் 9/11 புகழ் இரட்டைக் கோபுர தலைமைப் பொறியாளர் லெஸ்லி ராபட்சன் தான் இந்த திட்டத்தின் தொழில்நுட்ப வழிகாட்டியாம்.

கட்டிடம் எல்லா பெரிய கட்டிடங்களையும் போல பாதுகாப்பாய் இருக்கும் !  கவலையே வேண்டாம் என்கிறார் டேவிட் ஃபிஷர். வாங்க விருப்பமுடையோர் அணுகலாமாம். !

குசேலன் : படங்கள், தகவல்கள், ராஜதந்திரங்கள்

தசாவதாரச் சுனாமி கொஞ்சம் தணிந்த உடன் ஆரம்பித்திருக்கிறது குசேலர் ஆட்சி. இ-மெயிலில் வந்த இந்தப் படங்களைப் பார்த்தபோது முதலில் தோன்றியது ஒன்று தான். “தலைவரை இளமையா காட்ட ஷங்கரால் மட்டுமல்ல, வாசுவாலும் முடியும்”

தெலுங்கு படத்தின் பெயரை குசேலடு என்பதிலிருந்து Kathanayukudu என்று மாற்றியிருக்கிறார்களாம் ! ஏதோ பக்த குசேலடு என்று ஒரு படம் ஏற்கனவே தெலுங்கில் இருக்கிறதாம்.

தசாவதாரம் அலை அடித்துக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து குசேலனை அவலுடன் இறக்கி விட்டது யாருடைய ராஜ தந்திரமோ ? 

ஹீரோ – ஹீரோயின் படத்தைத் தான் முதலில் போட வேண்டும் எனும் திரை தர்மத்தின் படி…முதலில் பசுபதி – மீனா 🙂

(படத்தைக் கிளிக்கினா பெருசா பாக்கலாம் )

 

 

ஏலியன்ஸ் – கிட்டே டி.வி.டி பிளேயர் இருக்குமா ?

 
செவ்வாயில் இறங்கிய பீனிக்ஸ் – புகைப்படங்களை அனுப்பி அசர வைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அங்கே ஒரு டி.வி.டியையும் இறக்கி வைத்திருக்கிறதாம்.

ஏலியன்ஸ் யாராவது வந்து பார்த்தால்… அடடே.. ஒரு நல்ல டி.வி.டி இருக்கே இதுல என்ன படம் ஓடுதுன்னு அவங்களோட ரீஜியன் ப்ஃரீ டி.வி.டி  போட்டுப் பார்த்து தெரிஞ்சுக்கலாமாம்.
ரொம்ப முக்கியமான தகவல்களும், கூடவே மகா அறுவை படங்களான “Mars Attack”, War of teh Worlds  எல்லாமே அந்த டி.வி.டி. ல இருக்கிறதாம்.

ஏலியன்ஸ் க்கு மிகவும் பரிச்சயமான 🙂 ஆங்கில மொழியில் எல்லா தகவல்களும் சொல்லப்பட்டிருக்கிறதாம்

செவ்வாய் குறித்த நமக்குத் தெரிந்த விஷயங்கள் எல்லாம் இதில் இருக்கிறதாம்.

உலகம் அழியப்போகிறது என்று சொன்ன செவ்வாய் சிறுவனின் பேட்டி இருக்கிறதா தெரியவில்லை !

இந்த டி.வி.டி பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கக் கூடிய வகையில் சிறப்பாய் தயாரிக்கப் பட்டிருக்கிறதாம்.

எலியன்ஸ் சார்… டி.வி.டி பிளேயர் இல்லேன்னா ஒரு பறக்கும் தட்டு பிடிச்சு வால்மார்ட் வாங்க, சேல் போயிட்டிருக்கு !

 

நடுங்க வைத்த நிமிடங்கள்.

ஆப்பிரிக்கன் சஃபாரி போயிட்டிருக்கீங்க, திடீர்ன்னு ஒரு பெரிய யானை உங்க காருக்கு முன்னாடி வந்து நின்னா எப்படி இருக்கும். அப்படியே அது ஜூராசிக் பார்க் டைனோசர் மாதிரி உத்துப் பாத்து உறுமினா ?

அப்படி ஒரு அனுபவத்தைச் சந்தித்த அண்ணன் தங்கை தான் இவங்க. ஸ்விஸ் பார்ட்டிங்க இந்த பெல்ட்ரேம் & ஆஞ்சலா. அவ்ளோ தான் இந்த ஓல்ஸ்வேகன் கார் அப்படியே அப்பளமாகப் போகுது, அந்த அப்பளத்துக்குள்ளே நாம இரண்டு பேருமே பர்கர் பன்னாகப் போகிறோம் என்று நடுங்கித் தான் போனார்கள்.

எஞ்சினை ஆஃப் செய்து விட்டு அமைதியாக மரணமா, இல்லை மறு ஜென்மமா என ஆறு நிமிடங்கள் திக் திக் என இருந்தவர்களை விட்டு விட்டு அமைதியாகச் சென்று விட்டதாம் அந்த ஆஜானுபாகுவான யானை. மெதுவாக ஒரு அழுத்து அழுத்தியதோடு சரி.

கேரள யானைங்க மட்டும் தான் போட்டுப் புரட்டிப் புரட்டி எடுக்குமோ ?

உங்கள் காதலிக்குப் பரிசளிக்க…

காலையில இருந்தே கடைகளில் ஏறி இறங்கித் தேடினேன் ஒண்ணுமே கிடைக்கல. உன்னை விட சிறப்பா எதுவும் என் கண்ணுக்குப் படாததனால எதுவுமே வாங்கல. உன்னோட ஒப்பிடும்போ பிரபஞ்சம் கூட அழகுப் பஞ்சமடி. இப்படியெல்லாம் கதை விட்டுட்டு உங்க விரல்ல ஒண்ணே கால் கிராம்ல ஒரு மோதிரம் போடறாரா உங்க காதலர் ?

அவர் கிட்டே போய் “உங்களுக்கு இனிமே அந்த கஷ்டம் எல்லாம் இல்லை. இதோ இந்த மிக்கி மவுஸ் பொம்மையை மட்டும் வாங்கிக் கொடு போதும்ன்னு” சொல்லுங்க.

முழுவதும் பவுனினால் செய்யப்பட்ட இதன் எடை ஒரு கிலோ. செய்தவர் ஜப்பானின் கின்ஸா டனக்கா.