மாயமாகும் மனிதர்கள் : திகில் தீவு !

disappear.jpg

நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென பேசிக்கொண்டிருக்கும் போதே மாயமாய் மறைந்து விட்டால் எப்படி இருக்கும் ? பயமும், வியப்பும், திகிலும், பிரம்மையும் கலந்த அந்த நிகழ்வை எப்படி விளக்க முடியும்.

அப்படி மனிதர்களை மாயமாய் மறையச் செய்யும் ஒரு தீவே இருந்தால் ? திடுக்கிட வைக்கிறது இந்த கேள்வி. கூடவே ஒரு நல்ல ஹாலிவுட் திகில் படத்தைப் பார்க்கும் பரபரப்பையும் தருகிறது.

கென்ய ருடால்ஃப் ஏரியில் இருக்கிறது ஒரு குட்டி தீவு. என்வையிட்டினெட் தீவு என அழைக்கப்படும் அந்த தீவின் பொருள் “திரும்ப முடியாது” என்பது தான் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.

ஒரு காலகட்டத்தில் நன்றாக, இயல்பாக இருந்த கிராமம் தான் அது. அங்கே இருந்த மக்கள் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என பல தொழில்களை செய்து வந்தனர்.

அவர்கள் அடிக்கடி தீவை விட்டு வெளியே வந்து நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து அவர்களுக்கும் மீன், விலங்குகள் போன்றவற்றை அளிப்பதும் வழக்கமாக இருந்தது.

திடீரென சில நாட்களாக தீவிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என நினைத்த மக்கள் அந்தத் தீவுக்குச் சென்று தகவல் அறிந்து வர விரும்பினார்கள்.

தீவுக்குள் சென்ற மக்கள் அதிர்ந்தனர். அங்கே குடிசைகள் எல்லாம் காலியாய் கிடந்தன. வேட்டையாடப்பட்ட விலங்குகளும், பிடிக்கப்பட்ட மீன்களும் அழுகிப் போய் கிடந்தன. ஆனால் மக்களின் சுவடுகள் கூட மிச்சமில்லை.

என்னவானார்கள் இவர்கள் ? எங்கே போனார்கள் ? எதுவும் தகவல் இல்லை ! பயந்து போன மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினர் தங்கள் இருப்பிடம் நோக்கி. அதன் பின் பறவைகளைத் தவிர யாரும் அந்த தீவில் தங்கள் நிழல்கள் விழ அனுமதிக்கவில்லை.

இப்போது அந்த இடம் சாபத்துக்குள்ளான, மர்மத் தீவாக இருக்கிறது.

அந்த தீவில் யாருமே தங்குவதில்லை, அங்கே தங்குபவர்கள் மாயமாகி விடுவார்கள் எனும் நம்பிக்கை தான் அதன் காரணம். சில கிலோமீட்டர் அகலமே உள்ள அந்த தீவு சபிக்கப்பட்ட தீவாக மக்களிடையே பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அங்கே அப்படி என்ன மர்மம் தான் இருக்கிறது என யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

1935 களில் மார்டின் ஷெஃப்லிஸ் மற்றும் பில் டேசன் இருவரும் விவியன் என்பவருடைய தலைமையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

அந்த தீவில் இருக்கும் ரகசியம் என்ன என்று பார்த்து விடுவோமே என்று கங்கணம் கட்டிக் கொண்டு அந்தத் தீவில் இருவரும் சென்றனர்.

நாட்கள் நகர்ந்தன. போனவர்கள் திரும்பவில்லை. பதினைந்து நாட்கள் பொறுமையுடன் காத்திருந்தவர்களை பயம் பிடித்துக் கொண்டது. உடனே விவியன் பாதுகாவலர் குழுவை அந்தத் தீவுக்கு அனுப்பினார்.

பாதுகாவலர் படை காணாமல் போன இருவரையும் தேடி தீவுக்குள் நுழைந்தது. அக்கு வேறு ஆணி வேறாக தீவை சல்லடை போட்டுத் தேடியும் இருவரும் அகப்படவேயில்லை !

ஆளே இல்லாத ஒரு அமானுஷ்யக் கிராமமாக அது அமைதிக்குள் உறைந்து கிடந்தது.

திடுக்கிட்ட விவியன் அரசு உதவியுடனும், வாகனங்களுடனும் தீவை மீண்டும் ஒருமுறை தலைகீழாய் புரட்டித் தேடினார். ஊஹூம். ஒன்றும் கிடைக்கவில்லை.

தேடப் போனவர்கள் திரும்பி வந்ததே பெரிய விஷயம் என்று பேசிக் கொண்டனர் உள்ளூர் மக்கள்.

இதன் மர்மம் புரியாத உலகம் தலையைப் பிய்த்துக் கொள்கிறது. வேற்றுக் கிரகவாசிகள் கடத்திச் செல்கின்றனர் என்றும், தெரியாத காலச் சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கதைகள் பல சிறகுகளுடன் டிராகுலா வாக விஸ்வரூபமெடுத்துப் பறக்கிறது.

விரிந்து பரந்து கிடக்கும் உலகில் ஏராளமான மலைகளும், தீவுகளும், கடல் பகுதிகளும் மர்மத்தின் கூடாரமாகக் கிடக்கிறது. இன்னும் விஞ்ஞானமோ, பெரும் அறிவியலார்களோ, தத்துவ ஞானிகளோ விளக்க முடியாத வியப்புகளின் கூட்டுத் தொகையாக இருக்கிறது நமது பூமி எனும் அதிசயம்.

துருக்கியில் ஒரு சீவலப்பேரி

யப்பா… எவன்பா அங்கே மீசை மீசைன்னு பேசிட்டு திரியறது ? சீவலப் பேரியா ?
இந்த மீசையை ஒருவாட்டி பாருப்பா, அப்புறம் முடிவு பண்ணு உனக்கு இருக்கிறதுக்குப் பேரு மீசையா ? அதையெல்லாம் வேற முறுக்கணுமான்னு.

meesai.jpg

இவரு பேரு முகமது ரஷித். துருக்கில இப்படித் தான் மீசையை முறுக்கிட்டு திரியறாராம். நீளம் 1.6 மீட்டர்கள் !
இது பக்கத்துல நின்னு போட்டோ எடுக்கணும்ன்னாலே 5 டாலர் கேக்கறாராம்.

பின் குறிப்பு : மீசையை வெச்சு தோசையா வாங்க முடியும் என இனிமேல் யாரும் கேட்காதிருக்கக் கடவது !

world’s most pierced woman இவள் தான் !

என்ன இத்தனை மூக்குத்தி போட்டிருக்கீங்க, காதுல இத்தனை ஓட்டை போட்டிருக்கீங்க, நாக்குல வேற ஏதோ ஒட்டிகிட்டிருக்கு என்று கமெண்ட் அடிக்கும் முன் இதை ஒரு முறை பாருங்கள்.

இனிமே யாரையும் கிண்டலே பண்ன மாட்டீங்க 🙂

ஆமா.. சுவாசிக்கவாச்சும் கொஞ்சம் gap இருக்கா ??

pears.jpg

என்ன பெண்கள் மட்டும் தான் முகத்துல ஏதாச்சும் குத்திக்கணுமா ? எங்களுக்கு உதடு, மூக்கு ஏதும் இல்லையா என்று குத்துக் களத்தில் குதித்திருக்கிறான் நம்ம இந்தியன் Pratesh Baruah .

potti.jpg

2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!

boriska.jpg

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.

திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.

தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோரின் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.

தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனைகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி எல்லோரையும் பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என எச்சரிக்கை செய்யவும் துவங்கினானாம்.

தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச் சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை தூக்கிச் சாப்பிடுகிறது.

லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதையும், அதுகுறித்த படங்களைப் பார்த்து ஏதேனும் கருத்துக்களைச் சொல்வதும் என புல்லரிக்க வைக்கிறான் இந்தச் சிறுவன்.

லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.

இவனுடைய அதிமேதாவித் தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது தவறு என மேதாவித்தனமாக விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு வழியின்றி இப்போது தனியாக படித்து வருகிறானாம்.

உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.

இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.

உலகில் நிகழும் அழிவு நிகழ்வுகளின் போது அவனை மாபெரும் வலியும், பதட்டமும், நிம்மதியின்மையும் அலைக்கழிக்கும் என அவனது தாய் கண்கள் பனிக்க சொல்கிறார்.

மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.

செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.

செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த நிகழ்வுகளையும் மணிக்கணக்காய் பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில் பார்த்தவை என்கிறான்.

பிரமிடுகளைக் குறித்து பேசும்போது, மக்கள் இப்போது நினைப்பது போல Cheops பிரமிடில் இருந்து பழங்கால வரலாறுகள் எதுவும் தெரிய வராது எனவும், அவையெல்லாம் இன்னோர் பிரமிடில் இருக்கிறது ஆனால் அந்த பிரமிட் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அவன் திகைக்க வைக்கிறான்.

செவ்வாயை நெருங்கும் போது ஏன் விண்கலங்கள் எல்லாம் எரிந்து விடுகின்றன என விஞ்ஞானிகளில் தலையைப் பிய்க்கும் கேள்வியைக் கேட்டனர். அதற்கு அவன், இந்த விண்கலங்களில் உள்ள கதிர்களெல்லாம் அவர்களைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் வேறு கதிர்களும், சமிச்ஞைகளும் அனுப்பி அவற்றை அழிக்கின்றனர் என்கிறான்.

விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக படம் வரைந்து பாகங்களைக் குறிக்கிறான் இவன்.

உதாரணமாக,

விண்கலம் ஆறு அடுக்குகளைக் கொண்டது. மேல் பாகம் இருபத்து ஐந்து விழுக்காடு உறுதியான உலோகத்தால் ஆனது. இரண்டாவது அடுக்கு முப்பது விழுக்காடு ரப்பரால் ஆனது. மூன்றாவது அடுக்கு முப்பது விழுக்காடு உலோகத்தாலும், கடைசி அடுக்கு காந்தப் பொருட்களாலும் ஆனது. இந்தக் காந்தத்தில் விசையைச் செலுத்தினால் இந்த விண்கலம் பிரபஞ்சத்தில் எங்கே வேண்டுமானாலும் செல்லும் என்கிறான்.

இவனுடைய அலட்சியமான உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர். ஏனெனில் இவன் பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில் !

ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான் காரணம். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் நம்மை மன்னிக்கச் சொல்லி விண்ணப்பிக்க வேண்டும். என சாத்வீக ஆன்மீகவாதியாகிறான்.

இவன் சொல்வதில் எதை நம்புவது, எதை விடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் பல நிலைகளிலுமுள்ள மக்கள்.

உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் !

இது தான் உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் ! மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கார் கண்காட்சியில் இது பங்குபெறப் போகிறது. பத்து மீட்டர் ஆழத்தில் பத்திரமாய் போகுமாம் இந்த கார் !

one1.jpg

சுவிட்சர்லாந்தின் ரின்ஸ்பீட் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கார் sQuba என்று பெயரிடப்பட்டுள்ளது.

three.jpg

இதே நிறுவனம் தண்ணீரிலும் தரையிலும் அதி வேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத் தக்கது !

two1.jpg

தங்கத்தாமரை மகளே

டோக்கியோவில் ஒரு விளம்பர நிகழ்ச்சிக்காக தங்கத்தாலேயே ஆடை நெய்து அசத்தல் நடை நடந்த அழகி.

gold2_tokyo.jpg

ஆடையில் இருப்பது 365 ஆஸ்திரேலிய தங்க நாணயங்கள்.

gold1_365ausgoldcoins.jpg

போகிற போக்கில் யாராவது அவிழ்த்துக் கொண்டு ஓடி விடக் கூடாது என்பதற்காக கூடவே ஒரு பாதுகாப்பு அதிகாரி !

gold3.jpg

காதலர் தின காட்சிகள் : வித்தியாசமானவை.

இது தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த காதலர் தின ரோஜா.
இதில் 50 காரட் வைரமாலை சுற்றப்பட்டுள்ளது. தற்போது தாய்லாந்திலுள்ள பாங்காக் ஹோட்டல் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

50-carat-diamond-necklace-touted-as-the-worlds-most-expensive-valentines-rose-at-a-hotel-in-bangkok.jpg

இவை ஹாலந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு வர்ண ரோஜாப்பூக்கள்.
இவை உண்மையில் வெள்ளை ரோஜாக்கள், அவற்றின் மீது வானவில் வர்ணம் பூசவேண்டும் எனும் சிந்தனை யாருக்கோ உதயமானதால் இப்போது ஏழு வர்ண ரோஜாவாக உருவெடுத்திருக்கிறது.

imported_from_holland_7clrs.jpg

காதலி பிரிந்து சென்ற துயரத்தில் இருக்கும் காதலன் என்ன செய்யலாம் ? இதோ, இந்த கருப்பு ரோஜாக்களின் ஒன்றை அனுப்பலாம். இந்த காட்சி சீனாவில்.

in_china.jpg

இந்தப் பன்றி தென் இங்கிலாந்தில் உள்ளது. உடலில் இதய வடிவ கருப்பு அடையாளத்துடன் இருப்பதால் இது காதலர் தின சிறப்புப் பன்றியாகி பிரபலமடைந்துள்ளது.

newent-southwestern-england.jpg

மெக்சிகோவில் “Love to Madness” வரை எனும் கண்காட்சியில், ஓவியங்கள் சிற்பங்கள் என காதலைப் பற்றிய ஏராளமான தகவல்கள்.
சிற்பத்தில் இருப்பதைப் பார்த்து சிற்றின்ப வேட்கை கொண்ட காதலர்கள்.

love-to-madness-exhibition_mexico.jpg

சீனாவில் இளம் பெண்களைச் சுண்டியிழுக்கிறதாம் இந்த புதிய காதலர் தின பொம்மைகள். காதல் – பிணைப்பு எனும் வார்த்தைகளே சீன மொழியில் அதன் மீது எழுதப்பட்டுள்ளன.


உண்மைக் காதலர் அனைவருக்கும்
உளமார்ந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா..

ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா கணக்கா, அமெரிக்காவிலுள்ள பயிற்சியாளர் ஒருவர் ஓணான்களை வளர்க்கிறார்.

பல்லி, பாம்பு, பூச்சி என விதவிதமாய் வளர்ப்பது மேலை நாட்டவர்களின் வழக்கம் எனினும், இந்த ஓணான்கள் சற்று வித்தியாசமானவை.

11.jpg

மனிதர்களைப் போல பல வித்தைகளைச் செய்து காட்டுகின்றன, விளையாட்டு சோபாவில் அமர்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுக்கின்றன, விளையாட்டு இசைக்கருவிகளை வைத்து படம் காட்டுகின்றன.

21.jpg

எல்லாம் நல்லது தான் ஆபீசர், இந்தியாவுல இதுகளையெல்லாம் கொண்டு வந்துடாதீங்க. வைத்தியசாலைகளில் எண்ணை தயாரிக்கவும், பசங்களுக்கு ஈக்கில் வைத்து பிடிக்கவும், குறிபார்த்துக் கல்லெறியவும் தான் ஓணான்கள் பயன்படுகின்றன இங்கே.

வேற்றுக்கிரக வாசி வீடியோவில் விழுந்தார் !

alien-2.jpg

வேற்றுக் கிரக வாசிகளைக் குறித்த குழப்பங்களும், கேள்விகளும், ஆச்சரியங்களும் நம்மை எப்போதுமே ஒருவித சிலிர்ப்பு உணர்வுகளுக்குள் இட்டுச் செல்கின்றன.

வேற்றுக் கிரக வாசிகளைப் பார்த்தேன், மங்கலாய்ப் படம் பிடித்தேன் என்றெல்லாம் உலவிய ஆயிரக்கணக்கான கதைகளில் உண்மை இல்லை என்று ஒரு சாராரும், உண்மையே என்று ஒருசாராரும் வாதிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

தற்போது இஸ்தான்புல்லில் வீட்டுக் காவலாளி ஒருவர் எடுத்த வீடியோ ஒன்றில் வேற்றுக் கிரகவாசிகள் இருவரும், அவர்களுடைய, பறக்கும் தட்டும் தெளிவாகத் தெரிவதாக துருக்கியின் UFO தலைவர் Haktan Agdogan யதெரிவித்திருக்கிறார்.

அதற்கு ஆதாரமாக அந்த காவலாளி, Yalcin Yalman, எடுத்த 22 நிமிட வீடியோ ஆதாரத்தையும் வழங்கியிருக்கிறார். !

உண்மையா? பொய்யா என்பது விரைவில் விளங்கிவிடும் !

வேற்றுக் கிரகவாசிகள் குறித்த சிலிர்ப்பூட்டும் கதைகளை சமீபத்தில் மதன் அவர்களுடைய ‘மனிதனும் மர்மங்களும்’ நூல் வாயிலாக படிக்க நேர்ந்தது, ரொம்ப சுவையாகவும், எளிமையாகவும்.

தோழியின் கோஷமும், கோழியின் தோஷமும்.

கோழிகளைக் காப்பாற்றுங்கள் கோஷம் பெர்லினில் இருந்து.

kozhi.jpg

கோழிகளிடமிருந்து காப்பாற்றுங்கள் கோஷம் இந்தியாவிலிருந்து

kozhi3.jpg

ஒண்ணுமே புரியலே உலகத்துல…