“இலங்கையில் தனது அதிகாரத்தை நிறுவ மஹிந்த ராஜபக்சே செய்த முறையற்ற பல நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் நூல். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் நரகமாக இருப்பதையும், அங்கே மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக நிகழ்வதையும் ராகபக்சே செய்த படு மோசமான போர்க்குற்றங்களையும், தனது அக்கிரமமான நடவடிக்கைகளை நியாயப்படுத்த அவர் செய்யும் ராஜ தந்திரங்களையும், எல்லாவற்றுக்கும் அடிப்படையாக ராஜபக்சேவின் சுயநலம் இருப்பதையும் இந்நூல் சற்றும் மிகையின்றிப் படம் பிடித்துக் காட்டியுள்ளது – தினமணி, நூல் விமர்சனம் “
ராஜபக்சே எனும் பெயரே தமிழர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக நிலைபெற்றிருக்கிறது. தமிழர்கள் என்றில்லை, மனித நேயத்தை மனதில் கொண்டு இயங்கும் எந்த ஒரு மனிதனுக்குமே அந்தப் பெயர் அலர்ஜியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. மஹிந்த ராஜபக்சேவின் இளமைக் காலம் முதல் அவருடைய சமீபத்திய முகம் வரையிலான மாற்றங்களை படம் பிடித்துக் காட்டும் முயற்சியே இந்த நூல். ராஜபக்சே எனும் தனி மனிதனை மையமாகக் கொண்டு அவருடைய செயல்களையும், சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் இந்த நூல் அலசுகிறது.
வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள், படித்தால் கருத்துத் தெரிவியுங்கள்.
விலை : 130 ரூபாய்கள்
பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16
9600086474
91-44-43534303/ 43534304
You must be logged in to post a comment.