நூல் : மஹிந்த ராஜபக்சே – சூழ்ச்சியும் தந்திரமும்

இலங்கையில் தனது அதிகாரத்தை நிறுவ மஹிந்த ராஜபக்சே செய்த முறையற்ற பல நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் நூல். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் நரகமாக இருப்பதையும், அங்கே மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக நிகழ்வதையும் ராகபக்சே செய்த படு மோசமான போர்க்குற்றங்களையும், தனது அக்கிரமமான நடவடிக்கைகளை நியாயப்படுத்த அவர் செய்யும் ராஜ தந்திரங்களையும், எல்லாவற்றுக்கும் அடிப்படையாக ராஜபக்சேவின் சுயநலம் இருப்பதையும் இந்நூல் சற்றும் மிகையின்றிப் படம் பிடித்துக் காட்டியுள்ளதுதினமணி, நூல் விமர்சனம் “

ராஜபக்சே எனும் பெயரே தமிழர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக நிலைபெற்றிருக்கிறது. தமிழர்கள் என்றில்லை, மனித நேயத்தை மனதில் கொண்டு இயங்கும் எந்த ஒரு மனிதனுக்குமே அந்தப் பெயர் அலர்ஜியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. மஹிந்த ராஜபக்சேவின் இளமைக் காலம் முதல் அவருடைய சமீபத்திய முகம் வரையிலான மாற்றங்களை படம் பிடித்துக் காட்டும் முயற்சியே இந்த நூல். ராஜபக்சே எனும் தனி மனிதனை மையமாகக் கொண்டு அவருடைய செயல்களையும், சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் இந்த நூல் அலசுகிறது.

வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள், படித்தால் கருத்துத் தெரிவியுங்கள்.

விலை : 130 ரூபாய்கள்

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

தமிழிஷில் வாக்களிக்க.

பாகிஸ்தானின் பாதுகாப்பு வேடம் கலைந்தது

sl

தீவிரவாதிகளின் தாயகமான பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சர்வதேச அளவில் மாபெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

நெஞ்சிலும், கால்களிலும் குண்டு பாய்ந்த நிலையில் இலங்கை வீரர்கள் இரத்தம் சொட்டச் சொட்ட திகிலுடன் இருந்ததாகத் தெரிவிக்கும் செய்திகள் விளையாட்டு ரசிகர்களை மட்டுமன்றி உலக நலவாழ்வை மதிக்கும் அனைவரையுமே திகைப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதவில்லை என இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் சொல்லி வந்ததையெல்லாம் சகட்டு மேனிக்கு மறுத்து வந்த பாகிஸ்தான் இந்த தாக்குதலில் நிலைகுலைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அயல் நாடுகளைத் தாக்க தனது வீட்டில் வரைபடம் வரைய தீவிரவாதிகளுக்கு வாய்ப்பளித்த பாகிஸ்தான் இப்போது தான் வேட்டியில் விட்ட ஓணானினால் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறது

ஒரு அயல் நாட்டு கிரிக்கெட் குழுவுக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத நிலையில் இருக்கும் பாகிஸ்தான் பரிதாபத்தின் சின்னமாகவே காட்சியளிக்கிறது. பாகிஸ்தானின் விளையாட்டுத் துறை அமைச்சர் இலங்கை அணியுடன் கேட்டிருக்கும் மன்னிப்பே அதற்கான ஒரு சாட்சி.

உலக கிரிக்கெட் குழுக்கள் (பிசிசிஐ) உட்பட தெரிவிக்கும் அதிர்ச்சியும் இரங்கலும் நிலைமையைச் சரிசெய்து விட முடியாது எனினும், பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான உலக நாடுகளின் அணுகுமுறையை இன்னும் தீவிரப்படுத்தும் என நம்பலாம்.

இப்படியா மறப்பார்கள் ?

jail.jpg

“மன்னிக்கணும். தெரியாம உங்கள ஜெயில்ல வெச்சுட்டோம்” என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும் ?

அதையே ஐம்பது வருடம் ஜெயிலில் இருந்த ஒரு நபரிடம் சொன்னால் ??

நம்பவே முடியாதவைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

ஜேம்ஸ் என்னும் நபர் தனது தந்தையை காயப்படுத்திவிட்டார் என்பதற்காக இலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்டார். நடந்தது 1958ம் வருடம். அப்போது அவருக்கு 30 வயது.

அதன் பின் அங்கிருந்து மனநிலை மருத்துவமனைக்கும், இன்னொரு ஜெயிலுக்கும் என அலைக்கழிக்கப்பட்டவரைக் குறித்து அரசாங்கமும், அதிகாரிகளும், உறவினர்களும் எல்லாருமே மறந்து போனார்கள்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவர் மீது இதுவரை விசாரணையே நடக்கவில்லை என்பது தான்.

சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவரைக் குறித்த விவரங்களை சேகரித்தபோது தான் இந்த விஷயமே தெரிய வந்திருக்கிறது.

மன்னிப்புக் கேட்டு அவரை வெளியே விட்டு விட்டார்கள்.

இப்போது அவருக்கு வயது 80 !