லண்டனிலிருந்து இயங்கி வரும் டி.பி.பி என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் ஜெர்மனியிலிருந்து ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவரும் வெற்றிமணி பத்திரிகை இணைந்து “ஜல்லிக்கட்டு”க்கு ஆதரவாக ஒரு பாடலை வெளியிட்டிருக்கின்றனர்.
இசை : சஞ்சே சிவா
பாடல் : சேவியர்
வா
கைகள் ஒன்றாய் சேர்ந்திடலாம்
சீறி வரும் போதும்
சூழ்ச்சியை அழிப்போம்
வா
வீரம் கூடிடலாம்
மெல்ல மெல்ல கொல்லும்
வஞ்சனை அறுத்திடலாம்
வா
மண்ணோடு சேர்ந்திடவா
தமிழ் மண்ணை அள்ளித் தான்
நெற்றியிலே பூசிலாம் வா
வா
ஏறினை தழுவிட வா
மீறி மீறி நாளும்
சீறிட வா
ஜல்லிக்கட்டு
எங்கள் இன உரிமை என சொல்லு
ஜல்லிக்கட்டு
எங்கள் பிறப்புரிமை என நில்லு
ஜல்லிக்கட்டு
அது ஆயிரம் காலப் பழசென சொல்லு
*
பாலைக் குடித்த
தமிழ்ப் பாசத்தினைக் காட்டு
காளை அவிழ்த்து
தான் வீரத்தினைக் கூட்டு
சீறும் புயலென
துள்ளி வரும் திமிலினை பாத்து
சின்ன சிங்கமென
திமிறினைக் காட்டு
ஜல்லிக்கட்டுதான்
வீர விளையாட்டு
வெல்லும் உந்தன் மன வீரத்தினைக் காட்டு
தோள் தாழுமோ
வான் வீழுமோ
நாலாயிரம் ஆண்டைய
பண்பாடும் சாயுமோ ?
சங்கத்துத் தமிழனின்
அங்கத்தில் திரியுற
தில்லெனும் சொல்லே
ஜல்லிக்கட்டுதான்
வில்லென நிமிந்திடும்
அம்பென சீறிடும்
தமிழனின் திமிரது
ஜல்லிக்கட்டு தான்
ஜல்லிக்கட்டு
துள்ளிக்கிட்டு
தள்ளிக்கிட்டு
ஜல்லிக்கட்ட வா
மாட்டுகொம்பில்
சல்லி கட்டி
மல்லுக்கட்ட வா
வீரம் ஈரம்
நெஞ்சில் கொண்ட
செந்தமிழா வா
தூக்கம் விட்டு வா
காளை தோளை தட்ட வா !
அறத்தினை காத்தது
தமிழினம் தான்
திறத்தினை காட்டிய
தமிழினம் தான்
வெறுப்பினை நீக்கிய
தமிழினம் தான்
கண்டம் விட்டுத் தாண்டினாலும்
ஜல்லிக் கட்ட வா !
அலை கடலினை
குடிச்சிட நினைச்சா
பெரும் புயலினை
பிடிச்சிட நினைச்சா
அடை மழையினை
துடைச்சிட நினைச்சா
முடியுமா முடியுமா
உன்னால முடியுமா !!
எமதணுவிலும் கலந்திட்ட கலைடா
எவர் தடுப்பினும் மீறிடும் நிலைடா
ஜல்லிக்கட்டு தான்
களமாடிடும் கலைதான்
விழுப்புண்களும் விலை தான்
இது எங்களின் நிலை தான்