A Love Song ! Rayil

காத்திருக்கும்
என் மனம் துடிக்கும்
அவன் எங்கே
இன்னும் காணலையே
தடதடக்கும்
ரயில் பரபரக்கும்
என் உயிரும்
வந்து சேரலையே

ரயிலும் போகும்
இதயம் நோகும்
காதலன் நினைப்பில் கலங்குறேனே

இரு
இரும்பில் ஓடும்
ரயிலில் வாடும்
வருகை பார்த்து ஏங்குறேனே
*

அட‌
தாமதிப்பேனோ
கண்ணே
உன் முன்பே வருவேனே ?
அட‌
ரயிலும் போயிடும் முன்னே
நான் உன்னைச் சேர்வேனே
*
நான்
சின்னஞ் சிட்டு
நீ காதல் பட்டு
பின்
சொட்டுச் சொட்டாய் வரைந்தாய்
கன்னம் தொட்டு

நான்
தோளை தொட்டு
நீ வேலை விட்டு
பின்
கட்டிக் கிட்டுக் கிடந்தோம்
வானம் தொட்டு

*

ஆனந்தம் த‌ருமா
சோகமே வருமா ?
மயிலும் அழு திடுமா ?

ஏக்கமும் மிகுமா
தாமதம் தகுமா
ரயிலும் போய் விடுமா ?

நான் குழலாய் கிடந்தேனே
எனை இசையாய் ப‌டித்தாயே
நான் கல்லாய்க் கிடந்தேனே
எனை சிலையாய் வடித்தாயே
*

நொடிகள் மணியென‌
நிமிடமும் தினமென‌
உனக்காய் காத்திருப்பேன்

பயமும் மெலிதென‌
விரல்களும் குளிரென‌
தவிப்பில் காத்திருப்பேன்

நான் தவமாய்க் கிடந்தேனே
எனை வரமாய் அடைந்தாயே
நான் தனியாய் நடந்தேனே
என் உயிராய் இணைந்தாயே

பனிப் பூக்கள், குளிர் காற்றில்…

< இசையில் இணைப்பது உங்கள் கையில் >

பனிப்பூக்கள் குளிர்காற்றில்
பறக்கின்ற வேளை
இடையர்களும் இமைசாய்த்து
துயில்கின்ற மாலை

விண்ணிலே மீனொன்று
வால் நீட்டக் கண்டு
மென்மனசு இடையர்கள்
போனார்கள் மிரண்டு

இது வானம் ஒன்று பூமிக்கு வருகின்ற தேதி
வானதூதர் வந்தங்கு சொன்னார் அச் சேதி.

0

மன்னர் குல மெத்தைகள் பலநூறு உண்டு
தூதர் சேதி சொன்னதுவோ ஆயர்களைக் கண்டு.
ஆவின் குடில் ஆலயமாய் மாறியதை வியந்து
அரசர் குல ஆணிவேரும் ஆடியது பயந்து.

வென்று விட வந்தவரைக் கொன்றுவிடக் கட்டளை – அது
மீனொன்று கடல்குடிக்க ஆசைப்பட்ட கற்பனை

0

சாந்தமுகம் சாய்ந்து கொள்ள சிரித்தது பசுக்கொட்டில்
காந்தமுகம் பாய்ந்து வந்து அமர்ந்தது மனக் கட்டில்.
ஞானியரின் கைகளிலே மூன்று வகைப் பரிசு
மூவொரு தேவனவர் பிறப்பே மிகப் பெரிசு.

வென்று விட வந்தவரைக் கொன்றுவிடக் கட்டளை – அது
கதிரவனைத் தின்றுவிட குயில் கொண்ட கற்பனை

0

அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

குசேலன் : பாடல் வரிகளும், விமர்சனமும்

பாடல் : சினிமா சினிமா சினிமா …

எம்ஜியாரு, சிவாஜிகாரு, என்.டி.யாரு ராஜ் குமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இதுபோல் வருமா வருமா

கடவுள்  யாருன்னு யார் பார்த்தா
அதைக் கண்ணில் காட்டுதிந்த சினிமா தான்
கர்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அதைக் கண்ணில் காட்டுதிந்த சினிமா தான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்துக் காட்டுவது சினிமா தான்
அதுக்கு யாரிங்கு சாட்சின்னா
அட வேறு யாரு நம்ம தலைவர் தான்.

மொத்த பூமியையும்
பத்து ரூபா தந்தா
சுத்திக் காட்டுதிந்த சினிமா தான்.

பாரு பாரு பட ஷூட்டிங் பாரு
பலர் வேர்வை சிந்தினாங்க
நூறு கைகள் ஒண்ணு சேரவேணும் ஒரு
சினிமா உருவாக

காபி டீயும் தரும் புரடக்ஷன் பாயும் இங்கே ரொம்ப முக்கியம் தான்
டிராலி தள்ள பவர் லைட்டும் போட வேண்டும் உழைக்கும் வர்க்கம் தான்

மேலும் கீழும் என பேதம் பார்க்க
இங்கு ஏற்றத் தாழ்வு இல்லை
கோடம்பாக்கங்களை கோயிலாக்கும் இந்த சினிமா தொழில் தானே
ஏ குரூப் டான்ஸ் கோரஸ் பாட்டு என குடும்பம் வாழுதப்பா
வந்த பேரை இங்கு வாழ வைக்கும் இந்த சினிமா சினிமா தான்

சூப்பர் ஸ்டார் அதோ பார்
ராஜ யோகமடா சூப்பர் ஸ்டார் நம்ம ஊருக்குள் வந்தாரு
சிங்கம் நான் சிங்கம் தான்
மூக்கு மேல விரல் வைக்கும் வண்ணம் பல வேஷம் போட்டாரு
அவர் உருவம் பாரு எளிமை
அந்த எளிமை தானே அவருக்கு வலிமை
தலை கனத்திடாத தலைவன்
எங்கள் அண்ணன் மட்டும் தான்

ஜப்பானில் பார் சூப்பர் ஸ்டாரு
ஜெர்மனி போனா சூப்பர் ஸ்டாரு
அமெரிக்காவில் சூப்பர் ஸ்டாரு
ஆப்பிரிக்காவில் சூப்பர் ஸ்டாரு

பாட்டாளிகளின் பனியனை கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி
காய்கறி விற்கும் தாய்குலம் தூக்கும்
கூடையில் கூட சூப்பர் சூப்பர் ஸ்டார்.

கடவுள்  யாருன்னு யார் பார்த்தா
அதைக் கண்ணில் காட்டுதிந்த சினிமா தான்

சூப்பர் ஸ்டார் பேரைத்தான்
திரைமீது மக்கள் பார்க்கும் போது விசில் வானைப் பிளக்காதோ
ரசிகர்கள் கூட்டம் தான்
பாலை தேனை கூட்டி
பேனர் மீது கொட்டி வாழ்த்துப் பாடாதோ

அந்தப் படையப்பாவின் படை தான்
இந்த பூமியெங்கும் அணி வகுத்திருக்க
என்றும் மக்கள் மனதை ஆளும்
எங்கள் ஒரே மன்னன் தான்

 
எனக்குத் தோன்றியது :

ரொம்பவே சிலாகித்துப் பேசப்பட்ட இந்த சினிமா சினிமா பாடல் ஏதோ ரஜினியின் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு லோக்கல் ரசிகன் எழுதி ஒட்டிய போஸ்டர் போல இருக்கிறது.
( ரசிகர் மன்ற போஸ்டர் பல வேளைகள் இதைவிட நல்ல கவித்துவமாய் மிளிரும் என்பது வேறு விஷயம். உதா : எவரஸ்ட் யாருக்கு தெரியும் எவர் பெஸ்ட் பாருக்கே தெரியும் )
பல இடங்களில் பாடல் உரையாடல் போல ஊர்கிறது.

எனக்குப் பிடித்த வரி :

பாட்டாளிகளின் பனியனை கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி
இந்தப் பாடலை வாலி எழுதியிருக்கிறார் என நம்ப முடியவில்லை. சுமாரான டியூன், ஒரு தடவைக்கு மேல் கேட்கத் தூண்டவில்லை என்பதே நிஜம்.