A Love Song ! Rayil

காத்திருக்கும்
என் மனம் துடிக்கும்
அவன் எங்கே
இன்னும் காணலையே
தடதடக்கும்
ரயில் பரபரக்கும்
என் உயிரும்
வந்து சேரலையே

ரயிலும் போகும்
இதயம் நோகும்
காதலன் நினைப்பில் கலங்குறேனே

இரு
இரும்பில் ஓடும்
ரயிலில் வாடும்
வருகை பார்த்து ஏங்குறேனே
*

அட‌
தாமதிப்பேனோ
கண்ணே
உன் முன்பே வருவேனே ?
அட‌
ரயிலும் போயிடும் முன்னே
நான் உன்னைச் சேர்வேனே
*
நான்
சின்னஞ் சிட்டு
நீ காதல் பட்டு
பின்
சொட்டுச் சொட்டாய் வரைந்தாய்
கன்னம் தொட்டு

நான்
தோளை தொட்டு
நீ வேலை விட்டு
பின்
கட்டிக் கிட்டுக் கிடந்தோம்
வானம் தொட்டு

*

ஆனந்தம் த‌ருமா
சோகமே வருமா ?
மயிலும் அழு திடுமா ?

ஏக்கமும் மிகுமா
தாமதம் தகுமா
ரயிலும் போய் விடுமா ?

நான் குழலாய் கிடந்தேனே
எனை இசையாய் ப‌டித்தாயே
நான் கல்லாய்க் கிடந்தேனே
எனை சிலையாய் வடித்தாயே
*

நொடிகள் மணியென‌
நிமிடமும் தினமென‌
உனக்காய் காத்திருப்பேன்

பயமும் மெலிதென‌
விரல்களும் குளிரென‌
தவிப்பில் காத்திருப்பேன்

நான் தவமாய்க் கிடந்தேனே
எனை வரமாய் அடைந்தாயே
நான் தனியாய் நடந்தேனே
என் உயிராய் இணைந்தாயே

தாயே !

 

இசை : சஞ்சே

வரிகள் : சேவியர்

——————————–

நானாக நானும் இல்லையே

எங்கு சென்ற போதும்

ஏதேதோ எண்ணம் கொல்லும்

 

தாயான தாயும் இல்லையே

இங்கு இந்த நேரம்

நியாயமா….

 

ஆயிரம் ஆயிரம் ஞாபகம் நெஞ்சினில்

நாளுமே நீங்காதே

என் அன்னையே

 

ஆரிரோ பாடிய ஞாபகம் நெஞ்சில்

என்றுமே நீங்காதே

என் அன்னையே

 

*

 

பாசமா நேசமா

உன் பாதம் கட்டிக் கொண்டேன் நான்

வாழவா நான் ஆள‌வா

பசி அள்ளித் தின்றாய் நீ

 

தந்தையா அன்னையா

என் சொந்த பந்தம் எல்லாமே நீ

கந்தையா கண்ணீரா

அந் நாட்கள் சொர்க்கம் தானா ?

 

 

எங்கே

நெற்றி தனைத் தொடும் அந்த விரல்

காண

நெஞ்சம் தவிக்கிறதோ

 

எங்கே

என்னைக் கொஞ்சு கின்ற செல்லக் குரல்

மீண்டும் அது ஒலித்திடுமோ

 

*

 

பஞ்சணை மெத்தையும் வந்திடலாம்

அன்னையின் சேலையைப் போல் வருமா

 

அறுசுவை உணவுகள் வந்திடலாம்

அன்னையின் கைப்பிடி போல் வருமா ?

 

பேர் புகழ் தேசமும் தந்திடலாம்

அன்னையின் வார்த்தையைப் போல் வருமா ?

 

ஆயிரம் நேசங்கள் பூத்திடலாம்

அன்னையின் புன்னகை போல் வருமா ?

 

தாயே

வெற்றி பெற்றேன் நானே

 

என் தாயே

என்னைக் காண வாயேன்.

 

நீயே

எந்தன் ஜீவன் தாயே..

இன்று

நீயும் இல்லா வாழ்க்கை கொல்லுதே

 

Telephonic Interview (தொலைபேசி இன்டர்வியூ) Tips – In Tamil

நேர்முகத் தேர்வில் மிக முக்கியமான கட்டம் டெலிபோனிக் இன்டர்வியூ எனப்படும் தொலைபேசி உரையாடல். அதில் கலந்து கொள்ள சில சூட்சுமங்கள் இருக்கின்றன. அவற்றை எளிமையாய் விளக்குகிறது இந்த வீடியோ !

 

Video

TBB’s New Song , பாடல் : பூம் பூம்

பாடல்     : பூம் பூம்
இசை     : சஞ்சே
பாடல் வரிகள்   : சேவியர் & சஜித் ( ஆங்கிலம் )
குரல்கள்     : எம்.சி ஜீவா, சஜித், டாட்டூ த ராப்பர்.

தயாரிப்பு : TBB Entertainment, London.

பாடல் :

மினு மினு விழியில மிஸ்ஸானேன்
மன்மதக் கலையில பாஸானேன்
கனவில கனவில கிஸ்ஸானேன்
உன்னாலே யூகே டு மதுர – பூம் !

அடிக்கடி இடையில தூசானேன்
தக தக அழகில புஸ்ஸானேன்
உனதிரு இதழில ஜூஸானேன்
யூகே டு மதுர பூம் பூம்

கள்ளூறும் மேனியடி
கதகளி ஆடுமடி
பாத்தாலே போதையேறும்
சோமபானக் கிண்ணமடி

கஞ்சாவும் தோக்குமடி கண்ண பாத்தா – அடி
மூச்சுக்கே மூச்சு முட்டும் முன்ன பாத்தா

விளையாட வா – கொஞ்சம்
கொள்ளையிட வா – உன்
மேனியிலே ஆயகலை கற்றுத் தர வா.

முத்தமிட வா – ஒரு
குத்தமில்ல வா – அட
அச்ச மட நாணமெல்லாம் அழகில்லை வா

ஆங்கிலம்

லட்டான தேகம்
கட்டான மேகம்
எட்டியே நின்னா
கிட்டாது வேகம்

தட்டித் தட்டித் தானே செய்வாங்க சிற்பம்
தட்டாமநீ நின்னா கிட்டாது சொர்க்கம்

பெட்டைம் ஸ்டோரி
கிக்கான சாரி
மூன்லைட் மேனி
வித்தையை காமி

பொத்திப் பொத்தி வெச்சா தாங்காது மேகம்
கட்டிலிலே காலுரெண்டும் தூங்காத நாகம்

TBB – பைரவன் – முகிலே முகிலே

பாடல்     : முகிலே முகிலே
இசை     : சஞ்சே
பாடல் வரிகள்   : சேவியர்
குரல்கள்     : ரோகினி, எம்.சி ஜீவா

ஆல்பம் :  பைரவன் 
http://www.tamilbadboy.com/bhairavan.zip

தயாரிப்பு : TBB Entertainment, London.

 பெண்

முகிலே முகிலே
உனைப்போல் எனை
மிதக்கச் செய்வாயா ?

மழையே மழையே
உனைப்போல் எனை
குதிக்கச் செய்வாயா

அடடா மனம் ஓடுதே
கடிவாளம் உடைத் தோடுதே
அடடா உயிர் தேடுதே
மெய்மறந்தேனே
பெண்

கரையைத் தாண்டும் நதியின் விரலாய்
உடலைத் தாண்டி உயிரோடும்
தரையைத் தீண்டும் பறவை இறகாய்
சத்தம் இன்றி சாய்ந்தோடும்

அடடா காற்றிலே
சிலை யார் செய்ததோ
வருடும் கைகளை
யார் கொடுத்ததோ
மெதுவாய் மெதுவாய் முத்தம் தருதோ

ஆண் :

உன் தேகம் கால் கொண்ட நிலவா
உன் பாதம் பூமிக்கு வரமா
உன் கூந்தல் விரல் நீட்டும் இரவா
நீ தேவ இனமா