ஆத்துக்காரர்(ரி) அல்வா பார்ட்டியா ? கண்டுபிடிக்கலாம் !

 

என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம் தான். ஆனா நிலமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப் கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியையே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல ! ஆனா சந்தேகப்படலாமா வேண்டாமான்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.

  1. உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல்லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் !
  2. 

  3. பாத்ரூம் போனா கூட செல்போனும் கையுமா போறாரா. கீழேயே வைக்காம எப்பவுமே கையில செல்போனை வெச்சிருக்காரா ? ஐயா எங்கயோ மாட்டியிருக்கலாம் வாட்ச் பண்ணுங்க
  4. என் கணவன் இப்பல்லாம் ரொம்ப திருந்திட்டாரு. கண்ணாடி முன்னாடி தான் ரொம்ப நேரம் நிக்கறாருன்னு பெருமையா நினைக்காதீங்க அம்மணி ! இது ரெட் சிக்னல்.
  5. அடிக்கடி பிரண்டைப் பாக்கணும், ஆபீஸ் அவுட்டிங், நைட் ஷிப்ட், லேட் வர்க் இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு சொல்றாரா உங்கள் கணவன் ? கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் இது !
  6. உங்களுக்குப் பிடிக்காத ஹாபி எல்லாம் அவருக்குப் புடிக்குதா ? ஏதோ பண்ணட்டும்னு விட்டுடாதீங்க. ஒரு அரைக் கண் இருக்கட்டும்.
  7. “சாரி.. வயிறு சரியில்லை”, “சாரி… ரொம்ப பசிச்சுது வெளியே சாப்பிட்டேன்” ன்னு அடிக்கடி சொல்றாரா ? உஷார் உஷார் !
  8. அடிக்கடி இ-மெயில் அட்ரசை எல்லாம் மாத்தறாரா ? வீட்டுக் கம்ப்யூட்டர்ல தினமும் “ஹிஸ்டரி, குக்கீஸ் எல்லாம் அழிச்சுடறாரா ? சேட் விண்டோஸ் எல்லாம் சுத்தமா இருக்கா ? ம்.. …ஹூம்.. சம்திங் ஃபிஷ்ஷி ! 
  9. நீங்க ஏதாச்சும் கேட்டா ரொம்ப விறைப்பா பதில் சொல்றாரா ? சொன்ன பதிலுக்கு உங்க முக பாவம் எப்படி இருக்குன்னு கவனிக்கறாரா ? முகத்துல எக்ஸ்பிரஷன் சரியில்லையா ? உள்ளுக்குள்ள மணி அடிக்கட்டும் !
  10. ஒரு வார்த்தைல சொல்ல வேண்டிய பதிலுக்கு பத்து நிமிசம் பேசறாரா ? கொஞ்சம் பாஸ்டா சவுண்டா பேசறாரா ? ஐயாவுக்கு மனநிலை கொஞ்சம் தடுமாற்றம்ன்னு புரிஞ்சுக்கோங்க.
  11.  நீங்கள் கேட்கும் கேள்விக்கு ரொம்ப தூரமாய் நின்று பேசுகிறாரா ? இல்லேன்னா ரொம்ப ரொம்ப கிட்டே வந்து பேசறாரா ? இல்லேன்னா எதையோ அடுக்கி வைத்துக் கொண்டே பேசுகிறாரா ? நிலமை கொஞ்சம் டவுட் புல் தான் !
  12. திடீரென தனிமை தேடுகிறாரா ? அவருடைய செல்போன் பில், பேங்க் டீட்டெயில்ஸ், இமெயில் பாஸ்வேர்ட் எல்லாம் இடம் மாறுகிறதா ! கணக்கில் வராமல் பணம் செலவாகிறதா ? ஐயையோ… விஷயம் சீரியஸ் !  
  13. பொண்ணுங்களோட செண்ட் வாசனை, லிப்ஸ்டிக் இத்யாதி வகையறாக்கள்  நாம சொல்லியா தெரியணும் ? எத்தனை சினிமா பாத்திருப்போம் ! கவனிங்க.

கடுப்பாகாதீங்க ஆண்களே…..  பெண்களுக்கும் இது பொருந்தும் ! 

நன்றி : விகடன்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

பி(கி)ல்லி சூனியம் !

 tipton-portrait

அமெரிக்காவிலுள்ள ஒக்லஹாமாவில் 1914ல் பிறந்தார் இசைக்கலைஞர் பில்லி டிப்டன். சிறு வயதிலேயே அவருக்கு இசையில் ஆர்வம் அதிகம். அவருடைய இளம் வயதிலேயே பெற்றோர் டைவர்ஸ் வாங்கி கொண்டு கிளம்பி விட்டார்கள். அதனால் உறவினர் ஒருரிடம் ஐக்கியமாகி வளர்ந்தால் பில்லி. அதற்குப் பின் அவருடைய பெற்றோரைக் குறித்து அவரும் அதிகமாய் அலட்டிக் கொள்ளவில்லை.

இசை ஆர்வம் அவருக்குள் கொழுந்து விட்டு எரிய ஜாஸ் பயின்றார். பின்னர் சாக்ஸபோன், அது இது என இசையில் வளர்ந்தார். ஊரிலுள்ள சிறு சிறு இசைக் குழுக்களில் முதலில் பாடினார். கொஞ்சம் கொஞ்சமாக இசை அவரை உயர்த்தியது. பின் ஓரளவு பிரபலமான இசைக் குழுக்களுடன் இணைந்து ஊர் சுற்றினார். சென்ற இடங்களிலெல்லாம் நல்ல பெயர் கிடைத்தது. கே.எஃப்.எக்ஸ்.ஆர் எனும் ஒரு இசைக்குழுவையே ஆரம்பித்து நடத்துமளவுக்கு வளர்ந்தார்.

அடுத்த கட்டமாக இசை ஆல்பங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். அவருடைய ஸ்வீட் ஜோர்ஜியா பிரவுண் மற்றும் பில்லி டிப்டன் பிளேஸ் ஹை ஃபை ஆன் பியானோ இரண்டும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. அப்புறமென்ன ஆல்பம் தயாரிப்புகள் தொடர்ந்தன. இவருக்கு நிறைய பெண் ரசிகர்கள் இருந்தார்கள். பல பெண்களுடன் “நெருக்கமாக” வாழ ஆரம்பித்தார். அதனால் இவரை ஒரு “பெண் பித்தன்” என்று கூட மக்கள் நினைத்தார்கள். ஒரு வழியாக 1960 கிட்டி கெல்லி எனும் பெண்ணுடன் வாழ்க்கையில் செட்டில் ஆனார். தம்பதியர் ஜான், ஸ்காட் மற்றும் வில்லியம்ஸ் என மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தனர். பிள்ளைகளெல்லாம் “இவரு ரொம்ப நல்ல டாடி” என்று சொல்லுமளவுக்கு ஒரு நல்ல தந்தையாகவும் வாழ்ந்தார்.billybet

1989ல் தனது 74வது வயதில் பில்லி டிப்டன் இறந்தார். அப்போது தான் வெளிவந்தது உலகை அதிர்ச்சியூட்டும் ரகசியம். பில்லி டிப்டன் உண்மையில் ஆண் அல்ல ! ஒரு பெண் ! உலகமே வியந்தது. அவர் சுற்றித் திரிந்த பெண் தோழிகளெல்லாம் வியந்தனர். அவருடைய ரசிகர்கள், பிள்ளைகள், மனைவி எல்லோருமே அதிர்ந்தனர் !!! பத்திரிகைகளெல்லாம் முதல் பக்கத்தில் வியப்பு காட்டின.

பெண்களிடம் ரகசியம் நிற்காது என யாருப்பா சொன்னது ?