அந்த ஹாஸ்பிடல் போனா பணத்தையெல்லாம் புடுங்குவாங்க, இந்த ஹாஸ்பிட்டல்ல போனா வேணும்னே டெஸ்ட் எடுக்க சொல்லுவாங்க தேவையில்லாத சர்ஜரியெல்லாம் சஜஸ்ட் பண்ணுவாங்க. இப்படிப்பட்ட புலம்பல்களைக் கேட்காதவர்கள் இருக்க முடியாது. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.
பல மருத்துவமனைகள் நோயாளிகளின் மருத்துவக் காப்பீட்டுக்குத் தக்கபடி பணம் வசூலிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. பணத்தைக் காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கின்றன என்பதால் நோயாளிகள் அதைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் அதே நேரத்தில் அந்த பணத்துக்காகவே அரை நோயாளியை ஆபரேஷன் பெயரில் முழு நோயாளியாக்கி விடுவது கொடுமையில்லையா ?
பெரும்பாலான மக்கள் ஒரு மருத்துவர் சொன்ன விஷயம் சரிதானா என்பதை இன்னொரு மருத்துவரிடம் கேட்டு சரிபார்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெரிய அளவிலான சர்ஜரிகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ இந்த சரிபார்த்தலை தவறாமல் செய்கிறார்கள்.
இந்த செகன்ட் ஒப்பீனியன் என்பது மிகவும் சிரமமான விஷயம். ஒரு தெரிந்த டாக்டர் இருந்தால், அவர் நல்லவராக இருந்தால், திறமை சாலியாக இருந்தால் மட்டுமே பெரும்பாலும் இந்த செகன்ட் ஒப்பீனியன் பயனளிக்கும். இல்லையேல் சிக்கல் மேலும் பெரிதாகி விட வாய்ப்பு உண்டு. காலவிரயம், பண விரயம், உழைப்பு விரயம் என பல விரயங்களும் இதில் உண்டு.
மருத்துவமனைகளில் பெரிய நோய்களுக்காக அட்மிட் ஆகும் மக்களில் 90 சதவீதம் பேருக்கும் தங்களுக்குத் தரப்படும் சிகிச்சை சரியானது தானா எனும் சந்தேகம் உண்டு என்கிறது ஒரு புள்ளி விவரம். தங்கள் டாக்டரை கடவுளாக நம்பியோ, தங்கள் கடவுளை டாக்டராக நம்பியோ அவர்கள் மருத்துவ சிகிச்சைக்குள் செல்கின்றன. இப்படி அரைகுறை நம்பிக்கையோடு மருத்துவமனையில் செல்பவர்கள் விரைவில் குணமாவதில்லை என்பது உளவியல் பாடம்.
இன்றைக்கு எல்லாமே ஆன்லைன் மூலமாக சாத்தியப்பட்டிருக்கிறது. காலையில் குடிக்கும் காபி முதல் இரவில் போர்த்தும் போர்வை வரை எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே வாங்கி விடுகிறோம். வங்கி எங்கே இருக்கிறது என்பதையே மறக்குமளவுக்கு பணப் பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் இடம் மாறிவிட்டன. இப்போது புதிதாக மருத்துவத்துறையும் அதில் இணைந்திருப்பது மருத்துவ நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.
“ஆன்லைன் செகன்ட் ஒப்பீனியன்” மருத்துவத் துறைக்குள் நுழைந்திருக்கும் ஒரு புதிய வரவு. மருத்துவ அறிக்கைகள், பரிசோதனைகள் சார்ந்த சந்தேகங்களை ஆன்லைன் மூலமாகவே தெளிவுபடுத்திக் கொள்ளும் முறை தான் இது.
ஒரு டாக்டர் தருகின்ற மருத்துவ அறிக்கைகளை ஆன்லைனில் அப்லோட் செய்து, அதன் இரண்டாவது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவதுடன் நின்று விடாமல் மீண்டும் பல நிலை ஆலோசனைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். ஸ்மார்ட் போனில் அந்த அப்ளிகேஷனை நிறுவி நமது சந்தேகங்களை தேவையான நேரத்தில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ஹெல்த்சானா நிறுவனம் அத்தகைய மெடிகல் செகன்ட் ஒப்பீனியன் பணியில் தெளிவான கட்டமைப்பும், விரிவான தொடர்புகளும், தொலைநோக்குப் பார்வையும் என தனது வேர்களை ஆழமாய் மருத்துவத் துறைக்குள் நுழைத்திருக்கிறது.
மருத்துவமனைக்கு ஓடி, டாக்டரின் அப்பாயின்ட்மென்டைப் பெற்று, சாயங்காலம் வரை காத்திருந்து மன உளைச்சலடையும் சூழல் இனி இல்லை.
நேரடியாக இந்த வலைத்தளத்தில் நுழையுங்கள். ரிப்போர்ட்களை ஸ்கேன் செய்தோ, அல்லது ஸ்மார்ட் போனில் போட்டோ எடுத்தோ அப்லோட் செய்யுங்கள். டாக்டர்களின் லிஸ்டைப் பாருங்கள். உங்களுக்குத் திருப்தியான ஒருவரை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான். டாக்டர் உங்களுடைய ரிப்போர்ட்களைப் பார்த்து விட்டு “செகன்ட் ஒப்பீனியன்” சொல்வார்.
இந்த டாக்டருக்கு உங்கள் இன்சூரன்ஸ் பணத்தின் மீது கண் இல்லை, உங்களை கட்டாய அறுவை சிகிச்சைக்குள் அழைத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. எனவே ‘உள்ளது உள்ளபடி’ ஒரு முடிவைச் சொல்வார். இவரும் அறுவை சிகிச்சை அவசியம் என்றால் நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அல்லது அங்கேயே மூன்றாவதாக வேறொரு டாக்டரிடமும் நீங்கள் அபிப்பிராயம் பெற்றுக் கொள்ளலாம்.
முக்கியமான ‘உயிர்போகும்’ பிரச்சினைகளில் மூன்று நான்கு மருத்துவர்களிடம் உங்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்பது கூட வெகு எளிதில் இங்கே சாத்தியமாகிறது.
ஒருவேளை எல்லோரும் ஒரே பதிலைச் சொன்னால், “சரி, டாக்டர் சரியாத் தான் சொல்லியிருக்கார். ஆபரேஷன் பண்ணுவோம் ” என உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை முரண்பட்ட பதில் இருந்தால் என்ன செய்வது ?
அதற்காக அவர்கள் செய்திருக்கும் யுத்தி வியக்க வைக்கிறது.
ஹெல்த்சானாவின் ‘உயர்மட்ட மருத்துவர் குழு” இந்த ரிப்போர்ட்களையெல்லாம் பரிசோதிக்கும். அதில் நான்கைந்து பிரபல மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவருமாகச் சேர்ந்து ஒரு பொதுவான முடிவெடுத்து பதில் கொடுப்பார்கள்.
ஹெல்த்சானாவின் பணிகளை கூட்டிக் கழித்து ஒரு நாலு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அமெரிக்காவிலோ, லண்டனிலோ, ஜெர்மனியிலோ இருக்கும் ஒரு நோயாளி சென்னையிலோ, நெல்லையிலோ இருக்கும் தன்னுடைய ஃபேவரிட் மருத்துவரின் அபிர்ப்பிராயத்தை வாங்குவது ஒன்று.
ஆயிரம் தான் இருந்தாலும் “நேரடியா டாக்டர் கிட்டே பேசறது மாதிரி வருமா ?” என்பவர்களுக்காக உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் டாக்டர்களுடன் நேரடியாகப் பேசும் வசதி இன்னொன்று.
என்னோட மருத்துவ ரிப்போர்ட்ஸ் எல்லாம் குப்பை மாதிரி கெடக்கு என புலம்பும் மக்களுக்கு, டிஜிடலைஸ் செய்து முழு மருத்துவ வரலாற்றையும் கையில் கொடுத்து விடுவது மூன்றாவது.
பயணம் செய்பவர்களுக்கான மருத்துவ ஆலோசனை, அதற்கான மருத்துவ அறிக்கைகள், இத்யாதிகள் எல்லாம் சேர்த்து “எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெக்கார்ட்” உருவாக்கித் தருவது நான்காவது. தெரியாத நாட்டில், புரியாத சூழலில் ஏதேனும் நோய் வந்தால் சட்டென நமது வரலாற்றை வினாடிகளில் புரட்டிப் பார்த்து சிகிச்சை அளிக்க இவை உதவும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்றைக்கு இத்தகைய மெடிகல் செகன்ட் ஒப்பீனியன் நிறுவனங்கள் மீது தங்கள் பார்வையைச் செலுத்தியிருக்கின்றன. குறிப்பாக ஐ.டி துறையில் ஊழியர்களுக்கு மெடிகல் செகன்ட் ஒப்பீனியன் தேவைகள் அதிகரித்திருக்கின்றன. சின்ன வயதிலேயே மன அழுத்தத்தில் பல உயிரிழப்புகள் நேர்வதால் இத்தகைய மருத்துவ சேவைகள் அவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாகின்றன.
இதைக்குறித்து சென்னையிலுள்ள மருத்துவர் செங்குட்டுவன், கார்டியாலஜிஸ்ட் கூறுகையில்
“ஹெல்த்சானா போன்ற நிறுவனங்களின் பயன்பாடுகளை இனிமே தவிர்க்க முடியாது. மருத்துவம் உயிர் சம்பந்தப்பட்டது, அலட்சியமா இருக்க முடியாது. ஒண்ணு போனா இன்னொண்ணு வராது. சோ, ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். மெடிகல் செகன்ட் ஒப்பீனியன் ரொம்ப நல்ல விஷயம். நாலு இடம் விசாரிச்சு தான் நாம எதையுமே பண்றோம். மருத்துவத்துலயும் அது இருக்கிறதுல தான் ரொம்ப நல்லது. ” என்றார்.
கோயமுத்தூர் மெடிக்கல் காலேஜ் டாக்டர்: முத்துக்குமரன் ரங்கராஜன், கேஸ்ட்ரோஎன்ட்ரோலாஜிஸ்ட் கூறுகையில்
“எல்லாரோட மெடிகல் ஹிஸ்டரியும் கைல இருக்கணும். திடீர்னு பேஷன்ட் மயக்கமாயிட்டாருன்னா டாக்டருக்கு நோயாளியோட கண்டிஷனைக் கண்டுபிடிக்க டைம் ஆகும். அதுவே கையோட மெடிகல் ரிப்போர்ட் டிஜிடல் வடிவில இருந்தா வெரி சிம்பிள். உயிரைக் காப்பாத்தற வாய்ப்பு அதிகரிக்கும். ஹெல்த்சானா(Healthsana.com) ஒரு அற்புதமான முயற்சிங்கறதுல சந்தேகமில்லை” என்றார்.
தொழில்நுட்பங்களால் நோய்கள் அதிகரிக்கின்றன. நோய்களை தொழில்நுட்பம் நீக்குகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது இது தானோ !!!
ஃ
You must be logged in to post a comment.