சைமண்ட்ஸ் vs நிர்வாண கங்காரு :)

சைமண்ட்ஸ் க்கு போதாத காலம் போலிருக்கிறது. நிர்வாணமாய் தன்னை நோக்கி ஓடி வந்த பார்வையாளரை பவுண்டரிக்கு விரட்டுகிறார்.

இவரு நல்லவரா ? கெட்டவரா ?

sym2.jpg

பார்வையாளரை சைமண்ட்ஸ் அடித்தது ஏதோ ஒரு 4.3 படி குற்றமாம். என்ன பண்றாங்கன்னு பாப்போம் 🙂

sym.jpg

விடுங்க சைமண்ட்ஜி,ஹர்பஜம் மேல இருக்கிற கோபத்தை இப்படியா காட்டறது ?

sym0.jpg
அப்புறம் ஹர்பஜனைப் பார்த்து கூட ஒரு கங்காரு ஆடைகளைக் கழற்றி விட்டு ஓடி வந்தது.

இனிமே யாரும் நீ என்ன “கழற்றினே” என்று ஆஸ்திரேலியர்களைப் பார்த்து கேட்காதிருக்கக் கடவது !

ஹர்பஜனும், குரங்கு சர்ச்சையும்.

harbhajansingh1.jpg

(குரங்கு இப்படிச் சொறியாதே ! )

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கணக்கா, ஹர்பஜன் என்ன செய்தாலும் அதை ஒரு பெரிய பிரச்சனையாகவே ஆக்கிக் கொண்டிருக்கின்றன ஆஸ்திரேலிய பத்திரிகைகள்.

நேற்று ஹர்பஜன் சொறிந்ததைக் கூட குரங்கு பாஷை காட்டினான் என்று புலம்பித் தள்ளியிருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய மீடியாவுக்கு தங்கள் அணியைப் பற்றிப் பேச இப்போது ஒன்றுமில்லாமல் போய்விட்டது போல, எனவே அடுத்த அணியினரின் நடவடிக்கைகளை துரத்தித் துரத்தி கண்காணித்துக் கொண்டிருக்கின்றன.

ஹர்பஜன் குழப்பத்தில் இருக்கிறார். இனிமேல் சொறிவது, இருமுவது, தும்முவது, தின்பது, தூங்குவது, அதுக்கு இதுக்கு போவது எல்லாவற்றுக்கும் ஆஸ்திரேலிய மீடியாவிடமும், ஐ.சி.சி யிடமும் அனுமதி பெற வேண்டும் போலிருக்கிறது.

ஒவ்வொன்றாய் செய்து காட்டி, இது குரங்கு மாதிரி இல்லையே ? இது சைமண்ட்ஸ் மாதிரி இல்லையே என்று உறுதி படுத்திக் கொண்டு தான் செய்ய வேண்டும் போலிருக்கிறது.

ஹர்பஜன், எங்கெங்கே கேமரா இருக்குன்னு தெரியல.. அதனால, எதுக்கும் வீட்டுக் கதவு சன்னலையெல்லாம் நல்லா சாத்தி வெச்சுக்கோங்க. குறிப்பா வீட்டு பாத் ரூம் கதவு !!

கிரிக்கெட் வார்த்தைப் போர் : ஒரு அலசல்

cricket.jpg

கிரிக்கெட் விளையாட்டு ஒன்றும் தேசிய முக்கியத்துவம் கொடுத்து பேசப்படவேண்டிய விஷயம் இல்லை தான் எனினும் மக்களிடையே கிரிக்கெட் ஒரு போதையாகப் பரவியிருப்பதும், கோடிக்கணக்கான பணம் புரள்வதும், ஊடகங்களின் பிரதான செய்தியாக மாறியிருப்பதும் கவலை கலந்த கவனிப்புக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

விளையாட்டு எனும் எல்லையைத் தாண்டி கிரிக்கெட் இரண்டு நாட்டின் தன்மான பிரச்சனையாக உருவாகியிருப்பது இதன் மீதான கவனத்தை அதிகரித்திருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டல்ல, அது அரசியலாகிவிட்டது இப்போது என்பதை நிகழ்வுகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

சில விஷயங்கள் புரியவேயில்லை !

கிரிக்கெட் விளையாட்டில் வார்த்தை விளையாட்டுகள் சகஜம் என்று சொல்லும் ஆஸ்திரேலிய அணியினரால் இந்தியர்களின் வார்த்தை விளையாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏன் ?

இதன் உண்மையான காரணம் அவர்களுடைய இரத்தத்தில் ஊறியிருக்கிறது. தங்களை உயர்வாகவே மதிக்கும், அல்லது ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களை இழிவாகவே மதிக்கும் போக்கு அவர்களை விட்டு வெளியேறுவதில்லை.

இதனால் தான் தங்களுடைய வெறுப்பை பல்வேறு விதமாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

தங்களை விட வயது குறைவான பந்து வீச்சாளர்களிடம் தோல்வியடையும் போது அவர்களுக்குள்ளே இருக்கும் ஈகோ எனும் அரக்கன் அசுரத்தனமாக வெளிப்படுகிறது.

இது தான் வேறு விதமாக வார்த்தைகளில் வெளிப்படுகிறது. அவர்கள் நாட்டிற்கு விளையாடச் சென்ற அணியினர் என்னும் குறைந்தபட்ச மரியாதை கலந்த கவனிப்பு கூட அவர்களிடம் இல்லாதது அவர்களுடைய கலாச்சாரத்தின் மீது கேள்வியாய் எழுகிறது.

இந்தியர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமானால் ஒரு ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த அம்பயரை நியமிக்கலாம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் சொல்லியிருப்பதே அவர்களுடைய மன ஓட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஆஸ்திரேலிய வீரர்களின் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் இந்திய வீரர்களின் செயல்களைப் பெரிதுபடுத்தும் நடுவர்களே இருக்கிறார்கள் என்பதை ஒருவகையில் அவர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையே இது பூடகமாய் படம் பிடிக்கிறது.

இன்னொரு விஷயம், எதிரணி வீரர்களை மன ரீதியான உளைச்சலுக்கு உள்ளாக்காமல் வெற்றி பெற ஆஸ்திரேலியர்களுக்குத் தெரியாதா என்பது தான்.

செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் கவன சிதறடிக்கும் நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. கிரிக்கெட்டில் இது மிக அதிக அளவில் நடைபெறுகிறது.

“என்னை ஆட்டமிழக்கச் செய்து பார்” என்றோ, “அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டுவேன் பார் “ என்றோ சவால் விட்டால் பரவாயில்லை. ஆனால் அதை விடுத்து வீரர்களின் குடும்ப உறவினர்களை திட்டுவதும், பாலியல் ரீதியான அருவருக்கத் தக்க வசனங்களைப் பேசுவதும் தான் கிரிக்கெட் வார்த்தை விளையாட்டெனில், மன்னிக்கவும் இதை விடக் கேவலமான ஒரு அணுகுமுறை இருக்க முடியாது. அது எந்த அணியாக இருந்தாலும் சரி.

ஆஸ்திரேலியர்கள் இந்தியர்களை நோக்கி பேசுவதையெல்லாம் பாராட்டாக இந்தியர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவார்த்த சிந்தனையை உதிர்த்திருப்பவர்கள், அதே மன நிலையுடன் பிற அணி வீரர்களின் வார்த்தைகளை ஆஸ்திரேலிய அணியினரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துதல் அவசியம்.

இஷந்த் ஷர்மாவிற்கு பத்தொன்பது வயது தான் ஆகிறது என்பதற்காக சீனியர் வீரர்களின் அவமதிப்புகளையெல்லாம் தலை வணங்கி பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை.
திருமண வயது 21 என்பது போல, திட்டுவதற்கும் திட்டை வாங்குவதற்குமான வயது வரம்பை அரசாங்கமும் நிர்ணயித்திருக்கவில்லை.

“தீய களை” என்பது போன்ற அர்த்தத்தில் ஹர்பஜனை ஹேடன் விமர்சித்திருப்பது அவருடைய சொந்தக் கருத்து என கருத முடியுமெனில், எதிர் விமர்சனங்களையும் அதே மனநிலையுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவருக்கும், அந்த அணியினருக்கும் வேண்டும்.

இன வெறி வார்த்தைகளை இந்தியர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, இப்போது இனவெறி குற்றச்சாட்டு எழவில்லையே இந்தியா வாயை மூடிக்கொள்ளட்டும் என்று நக்கலாய் கூறியிருப்பது ஏதேனும் ஒரு வகையில் இந்திய அணியை இழிவுபடுத்தவேண்டும் என்பதையே காட்டுகிறது.

விளையாட்டை சீரியசாகப் பார்த்து, சீரியசான விஷயங்களை விளையாட்டுத் தனமாய் விட்டு விடும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் எழுந்துள்ள இந்த சர்ச்சை உண்மையில் வெறும் வார்த்தை சம்பந்தப்பட்டதல்ல.

காலம் காலமாக இழிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மானிட குலம் எழ முயலும்போது எரிச்சலைடையும் உயர் நிலையிலுள்ளவர்களின் மனநிலையின் வெளிப்பாடே !

பொழச்சு போங்க மிஸ்டர். Hogg

hogg.jpg

Hogg :- ஏம்பா கும்ளே.. எதுக்கு என்மேல குடுத்த கம்ப்ளெயிண்டை வாபஸ் வாங்கினே.

kumble :- அட போப்பா.. இந்த இண்டர்நெட் காரங்க தொல்லை தாங்க முடியல. சைமண்ட்ஸ் சை ஒரு குரங்காவே மாத்திட்டாங்க. இப்போ
எங்களை நீ என்ன திட்டினேன்னு வெளியே சொன்னா, எங்க நிலம தான் ரொம்ப மோசம். நீ பாட்டுக்கு 3 மேட்ஸ் ரெஸ்ட்
எடுத்துட்டு போயிடுவே. இதுக்கு வாபஸ் வாங்கறது பெட்டர்.

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்…

har_sa.jpg
கடந்த இரண்டு மூன்று நாட்களாக எந்த ஆங்கில நியூஸ் சானலை திருப்பினாலும் இந்திய இளைஞர்களின் கோபமான பேச்சுகளும், பேட்டிகளும், நேர்காணல்களும் என அல்லோலகல்லோலப் பட்டுப் போனது கிரிக்கெட் விவகாரம்.

ஸ்டீவ் பக்னர் இந்தியர்கள் விளையாடும் போது தவறான தீர்ப்புகளையே வழங்குகிறார், ஹர்பஜன் மீதான தடை நீடிக்கப் பட்டே ஆகவேண்டும் என்றெல்லாம் மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸ் களிலும் இந்தியர்கள் ஒரு சுதந்திரப் போராட்ட வேகத்தில் உரை நிகழ்த்தினார்கள்.

கிரிக்கெட், இந்தியர்களுக்கு உணவு, உடை, உறைவிடத்தை விட முக்கியமாகிப் போய் விட்டது என்பதையே கொடும்பாவி எரிப்புகளும், கோப ஆர்பாட்டங்களும் வெளிப்படுத்தின.

எங்கேயாவது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார்களா தெரியவில்லை. தினத்தந்தி படித்தால் தான் அந்த விஷயம் தெரியும்.

நிறவெறிக்கு எதிராக கடுமையாகப் போராடும் இந்தியா இதை அனுமதிக்காது என ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தனர் எல்லா சானல்களிலும், யாரோ ஒருவர்.

இத்தனை ஆவேசப்படக் கூடிய அளவுக்கு இந்த நிகழ்வு விஸ்வரூபமெடுத்ததற்கு இந்தியா இரண்டாவது டெஸ்டில் தோற்று விட்டது என்பதே முக்கியமான காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆஸ்திரேலியர்களின் சுப்பீரியாரிடி காம்ப்ளஸ், மற்றும் கிரிக்கெட்டில் காலம் ககலமாய் நிகழ்ந்து வரும் பிரிவினை பேதங்களும் யாரும் அறியாததல்ல.

என்னதான் இருந்தாலும், ஒரு விளையாட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் இவ்வளவு முக்கியத்துவப் படுத்தப்பட வேண்டியது தானா ?

நிறவெறிக்கு எதிரானவர்கள் என்று பிரகடனப் படுத்திக் கொள்வதற்காக இத்தனை பிரயர்த்தனம் செய்ய நமக்கு உண்மையிலேயே அருகதை இருக்கிறதா ?

பல்லாயிரம் மக்களை மதரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் கொன்று குவித்த நிகழ்வுகள் நம் கண்முன்னே நிகழ்ந்த போதோ, அதற்குக் காரணமானவர்களை பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியபோதோ ஊடகங்கள் இத்தனை ஆவேசப்பட்டனவா ?

பழங்குடியினருக்கு எதிராகவோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவே நடக்கும் வர்க்கபேத போராட்டங்களை முழுக்க முழுக்க ஓர் சமூக அக்கறையுடன் ஊடகங்கள் முழங்கியிருக்கின்றனவா ?

இன்றும் கூட நிகழும் ஆலய எரிப்புப் போராட்டங்களையும், அதை நியாயப்படுத்தும் அறிக்கைகளையும் இந்த ஊடகங்கள் நடுநிலையோடு விமர்சிக்கின்றனவா ? அல்லது அலசுகின்றனவா ?

ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்கோ, ஷில்பா ஷெட்டிக்கோ அல்லது ஐஸ்வர்யா ராயின் குடும்பத்துக்கோ மட்டுமே முக்கியத்துவம் தருவது தான் ஊடகங்களின் பணியா ?

கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்ந்ததால் பெரிது படுத்தப்படும் இந்த சம்பவம் வேறு விளையாட்டுகளில் நிகழ்ந்திருந்தால் ஒரு சிறு பெட்டிச் செய்தியோடு தானே முடிந்து போயிருக்கும்.

வர்த்தகத்தைத் தாண்டி எதையும் சிந்திக்காத ஊடகங்கள் இருக்கும் வரை இந்த நிலை மாறும் என்று சொல்ல முடியாது.

போராட்டங்களின் மூலமாக இந்தியா புனிதமான கைகளைக் கொண்டிருக்கிறது என்று உலகிற்குச் சொல்வதாக ஊடகங்கள் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் இப்படிச் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா?. ஊடகங்கள் மேல் நோக்கியே பார்க்காமல் சற்று கீழ்நோக்கியும் பார்த்தல் நலம்.

கடைசியில் கிரிக்கெட் விளையாட்டிலும் பணம் தான் விளையாடப் போகிறது. இந்தியா விளையாடாது என்று அறிவித்தால் அந்த நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

எனவே இந்தியா விளையாடும், ஐசிசியோ, பிசிசியோ எதுவாய் இருந்தாலும் கடைசியில் எடுக்கும் முடிவு விளையாட்டைத் தொடர்வதாகவே இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. காரணம் விளையாட்டின் மீது நீங்களோ நானோ கொண்டிருக்கும் ஆர்வமல்ல.

பணம் ! வியாபாரம். அவ்வளவே !!!

ஹர்பஜன் : நடந்தது என்ன ?

har_sa.jpg

சச்சின் : பாஜி.. என்னதான் நடந்தது. உண்மையிலேயே நீ சைமனை குரங்கு ன்னு திட்டினியா என்ன ?

ஹர்பஜன் : நஹி. டெண்டுல்கர்ஜி. எல்லாரையும் நான் ஜி போட்டு மரியாதையா பேசறது போல அவனையும் “சைமன் ஜி” ன்னு சொன்னேன். அது அவனுக்கு “சிம்பன் ஜி” ன்னு கேட்டிருக்கு என்ன பண்ண ?