ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.

இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.

அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு. முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை.

இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது. உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.

முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

39 மறுமொழிகள்

  1. தமிழன் சொன்னது,

    மே 12, 2008 இல் 6:54 பிற்பகல்

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

  2. Mangalore Siva சொன்னது,

    மே 12, 2008 இல் 7:04 பிற்பகல்

    ம். என்னத்த சொல்ல :(

    போட்டோ சூப்பர்.

  3. vijaygopalswami சொன்னது,

    மே 12, 2008 இல் 7:56 பிற்பகல்

    கண்ணை மூடிக்கிட்டு போக வேண்டியதுதான். வேற என்ன பண்றது. இந்தியாவிலேயே இண்டீரியர் கிராமம் ஏதாவது இருந்தா சொல்லுங்க அங்க போயி செட்டிலாயிடுறேன்.

  4. சேவியர் சொன்னது,

    மே 12, 2008 இல் 8:02 பிற்பகல்

    //ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே//

    ஆவது பெண்ணாலே
    அழிவது கண்ணாலே :)

  5. சேவியர் சொன்னது,

    மே 12, 2008 இல் 8:02 பிற்பகல்

    //ம். என்னத்த சொல்ல

    போட்டோ சூப்பர்.

    //

    பாத்து… !!! உடம்புக்கு ஏதாச்சும் ஆகப்போவுது !! :)

  6. சேவியர் சொன்னது,

    மே 12, 2008 இல் 8:03 பிற்பகல்

    //கண்ணை மூடிக்கிட்டு போக வேண்டியதுதான்//

    உன்னால முடியாது தம்பி :)

  7. தாஜ் சொன்னது,

    மே 12, 2008 இல் 8:34 பிற்பகல்

    நல்ல எச்சரிக்கை, இருந்தாலும் 1400 ஆண்டுகளுக்கு முன்பு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெண்கள் அடைகள் விசையத்தில் எச்சரிக்கையாக இரூக்க வேண்டும் என்று கூறினார்கள். அது இன்று அறிவியல் ஆராய்ச்சியால் நிருபிக்கப்பட்டுல்லதை மனசாட்சியுள்ளவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.

  8. பெயரிலி சொன்னது,

    மே 12, 2008 இல் 10:37 பிற்பகல்

    //தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.//

    இந்த வரி எனக்கு பிடிக்கல… பாக்கரதுக்கு தானே அப்படி இப்படினு போடுறாங்க… பாக்காம போன எப்படி… இத பார்த்து சலிச்சு போயிதான் பார்கலனு… துணிய குறைச்சுட்ட என்னத்துக்காவரது…

  9. விக்னேஸ்வரன் சொன்னது,

    மே 12, 2008 இல் 10:39 பிற்பகல்

    //தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.//

    இந்த வரி எனக்கு பிடிக்கல… பாக்கரதுக்கு தானே அப்படி இப்படினு போடுறாங்க… பாக்காம போன எப்படி… இத பார்த்து சலிச்சு போயிதான் பார்கலனு… துணிய குறைச்சுட்ட என்னத்துக்காவரது…

    (சாரி ஆரம்பத்தில் பெயர் போட மறந்துட்டேன்)

  10. நிமல் - NiMaL சொன்னது,

    மே 13, 2008 இல் 12:15 மு.பகல்

    நீங்கள் இந்த போட்டோ போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்….!
    :P

  11. பொதிகைத் தென்றல் சொன்னது,

    மே 13, 2008 இல் 6:05 மு.பகல்

    ஆடை கலாசாரத்தின் சீரழிவின் விளிம்ம்பில் இருக்கும் உலகிற்கு ஒரு நல்ல ஆலோசனைப் பதிவு.8 ம் நூற்றாண்டிலே இதை போல் ஆடை குறைப்பு இருந்த தாக கர்நாடக “பேலுர்,ஹலபேடு,பதாமி,பட்டக்கல் “சிற்பங்கள் கதை சொல்லுகிறன. ஆடை மாற்றம் ஒரு சுழற்சி யென சமுக பார்வையாளர் கள் கருதுகின்றனர்

  12. இப்னு பஷீர் சொன்னது,

    மே 13, 2008 இல் 8:32 மு.பகல்

    //அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது.//

    பெண்களின் ஆடைக்குறைப்பு ஆண்களை பாதிக்கிறது என்பது புதியதொரு தகவல்! பெண்களை கண்ணியமாக ஆடை அணியச் சொல்லும் இஸ்லாம் ஆண்களை அன்னியப் பெண்களை நோக்குவதை விட்டும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளும்படியும் கட்டளையிடுகிறது. இது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களின் நன்மைக்கும்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
    பதிவிற்கு நன்றி.

  13. சேவியர் சொன்னது,

    மே 13, 2008 இல் 10:19 மு.பகல்

    //இருந்தாலும் 1400 ஆண்டுகளுக்கு முன்பு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெண்கள் அடைகள் விசையத்தில் எச்சரிக்கையாக இரூக்க வேண்டும் என்று கூறினார்கள்//

    உண்மை !!! பல மதங்கள் இந்த போதனையைக் கொடுத்துள்ளன என்பதை வரலாறு குறித்து வைத்துள்ளது !

  14. சேவியர் சொன்னது,

    மே 13, 2008 இல் 10:20 மு.பகல்

    //இத பார்த்து சலிச்சு போயிதான் பார்கலனு… துணிய குறைச்சுட்ட என்னத்துக்காவரது//

    ஓ.. அப்படி ஒண்ணு இருக்கா ? :)

  15. சேவியர் சொன்னது,

    மே 13, 2008 இல் 10:21 மு.பகல்

    //நீங்கள் இந்த போட்டோ போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்….! //

    மன்னிச்சுக்கோங்க… இதை விட ஆபாசமா போட விரும்பவில்லை :D

  16. சேவியர் சொன்னது,

    மே 13, 2008 இல் 10:24 மு.பகல்

    //பெண்களை கண்ணியமாக ஆடை அணியச் சொல்லும் இஸ்லாம் ஆண்களை அன்னியப் பெண்களை நோக்குவதை விட்டும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளும்படியும் கட்டளையிடுகிறது. இது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களின் நன்மைக்கும்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
    //

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பஷீர் ! மதங்கள் சொல்வதை மக்கள் எங்கே கேட்கறாங்க ? “பெண்ணை இச்சைப் பார்வையுடன் பார்க்கும் ஆண் விபச்சாரப் பாவம் செய்கிறான்” என்கிறது கிறிஸ்தவம். ஆனால் கிறிஸ்தவ நாடுகள் தான் பாலியல் பாவத்தில் முன்னணியில் நிற்கின்றன !!!

  17. சேவியர் சொன்னது,

    மே 13, 2008 இல் 10:28 மு.பகல்

    //ஆடை கலாசாரத்தின் சீரழிவின் விளிம்ம்பில் இருக்கும் உலகிற்கு ஒரு நல்ல ஆலோசனைப் பதிவு.8 ம் நூற்றாண்டிலே இதை போல் ஆடை குறைப்பு இருந்த தாக கர்நாடக “பேலுர்,ஹலபேடு,பதாமி,பட்டக்கல் “சிற்பங்கள் கதை சொல்லுகிறன. ஆடை மாற்றம் ஒரு சுழற்சி யென சமுக பார்வையாளர் கள் கருதுகின்றனர்//

    கருத்துக்களுக்கு நன்றி பொதிகைத் தென்றல் !

  18. அபூ ஸாலிஹா சொன்னது,

    மே 13, 2008 இல் 11:04 மு.பகல்

    மீண்டுமொரு தரமான நல்ல பதிவை வழங்கியுள்ளீர்கள். பதிவிற்குத் தொடர்பானதாக இருந்தாலும், படத்தினைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    “பெண் விடுதலை!” என்ற இஸ்லாமிய உடை தொடர்பான (http://islamicdress.blogspot.com/) ஒரு வலைப்பதிவில் இதனை பதிக்க விரும்புகிறேன். நன்றி!

  19. சேவியர் சொன்னது,

    மே 13, 2008 இல் 11:08 மு.பகல்

    நன்றி அபூ ஸாலிஹா.

  20. நல்லடியார் சொன்னது,

    மே 13, 2008 இல் 12:11 பிற்பகல்

    பெண்களை முகம்,கைகள் தவிர அந்நிய ஆண்களிடம் உடலழகைக் காட்ட வேண்டாம் எனச் சொன்னதோடு ஆண்களையும் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறு இஸ்லாம் சொன்னதை பழமைவாதம், ஆணாதிக்கம் என்றெல்லாம் வியாக்கியானம் பேசியவர்கள், அதையே ஏதாவது அமெரிக்க அல்லது ஐரோப்பிய பல்கலைக் கழகம் ஆய்வு செய்து சொன்னால் புதுமையாகத் தெரிகிறது!

    பதிவில் சொல்லப்பட்ட விசயத்தை மேற்கத்திய விஞ்ஞானிகள் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அனுபவ ரீதியாகவே ஆடைக்குறைப்பு, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதைக் காண்கிறோம்.

    மேலோட்டமாக இஸ்லாம் வலியுறுத்திச் சொன்னதை இன்றைய ஆய்வுகள் மெய்ப்படுத்தினால் மகிழ்ச்சியே.ஆய்வு குறித்த சுட்டியை இடவும். பதிவிற்கு தகவலுக்கும் மிக்க நன்றி.

  21. K Sampath சொன்னது,

    மே 14, 2008 இல் 4:34 பிற்பகல்

    This is true. Today their dress code becomes limitless.

  22. K Sampath சொன்னது,

    மே 14, 2008 இல் 4:39 பிற்பகல்

    I am first hand visitor to totally tamil sites and above all your xavi is the first one. I will come whenever time permits me. Thanks for your right journery of sourcing excellent articles from net ocean and posting it for the public. I pray for your successful net journey at all time.

  23. சேவியர் சொன்னது,

    மே 15, 2008 இல் 10:38 மு.பகல்

    மனமார்ந்த நன்றிகள் சம்பத் சார். http://xavi.wordpress.com எனும் எனது இலக்கிய வலைத்தளத்துக்கும் ஒரு முறை வந்து செல்லுங்கள் :)

  24. லதானந்த் சொன்னது,

    மே 17, 2008 இல் 7:47 பிற்பகல்

    ஆம்பளையும் பொம்பளயும் சமம்கிறதால எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிப்போடறேன்! ஆம்பளைங்களும் ஆடைக் கொறைப்பச் செஞ்சு அவிங்க உரிமைய நெல நாட்டோணும்! நாயந்தானே நாஞ் சொல்லுறது?

  25. vijaygopalswami சொன்னது,

    மே 17, 2008 இல் 8:19 பிற்பகல்

    ///
    உரிமைய நெல நாட்டோணும்!
    ///

    ஆப்பிசர், உசிர குடுத்தாவது நெல நாட்டோனும். சொல்லிப் போட்டேன். (யாரு உசிருன்னு பெறக்கால பேசிக்காலாம்)

  26. வருண் சொன்னது,

    மே 18, 2008 இல் 7:21 மு.பகல்

    //ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே//
    எதைச் சொல்ல.

  27. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 11:25 மு.பகல்

    //ஆம்பளையும் பொம்பளயும் சமம்கிறதால எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிப்போடறேன்! ஆம்பளைங்களும் ஆடைக் கொறைப்பச் செஞ்சு அவிங்க உரிமைய நெல நாட்டோணும்! நாயந்தானே நாஞ் சொல்லுறது//

    ஃபாரஸ்ட் ஆபீசர் சொன்னா சரியா தான் இருக்கோணும் :)

  28. சுபாஷ் சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 5:13 பிற்பகல்

    ////ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே//

    ஆவது பெண்ணாலே
    அழிவது கண்ணாலே :) //

    :) )))

  29. குடுகுடுப்பை சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 8:53 பிற்பகல்

    இந்த ஆராய்சியை பெண் ஆராய்சியாளர்களும் செய்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரி இருந்து இருக்கலாம்.

    எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.

  30. குடுகுடுப்பை சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 8:55 பிற்பகல்

    நம்முடைய குறைகளுக்கு அடுத்தவரை சுட்டிக்காட்டும் ஒரு சுயநலமே இது.

  31. buruhani சொன்னது,

    செப்டம்பர் 13, 2008 இல் 7:45 பிற்பகல்

    அப்படி எல்லாம் அழகு காட்டலைனா யார் தான் பார்க்கமுடியும்

    பெண்னை

  32. bhuvana சொன்னது,

    செப்டம்பர் 15, 2008 இல் 3:15 பிற்பகல்

    Pothuvaga ella pengalailum thavaru solla mudiyathu.
    Intha world la nalla pengalum, irukkanga ok va.

  33. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 16, 2008 இல் 12:29 பிற்பகல்

    //Pothuvaga ella pengalailum thavaru solla mudiyathu.
    Intha world la nalla pengalum, irukkanga ok va.

    //

    கண்டிப்பா !!! பொதுவா எல்லா பெண்களுமே நல்ல பெண்கள் தான் ;)

  34. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 16, 2008 இல் 12:30 பிற்பகல்

    //அப்படி எல்லாம் அழகு காட்டலைனா யார் தான் பார்க்கமுடியும்

    பெண்னை

    //

    பெண்கள் எப்பவுமே அழகுதான் ;)

  35. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 16, 2008 இல் 12:42 பிற்பகல்

    //நம்முடைய குறைகளுக்கு அடுத்தவரை சுட்டிக்காட்டும் ஒரு சுயநலமே இது.//

    :)

  36. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 16, 2008 இல் 12:42 பிற்பகல்

    //////ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே//

    ஆவது பெண்ணாலே
    அழிவது கண்ணாலே :) //

    :) )))
    //

    அதானே :)

  37. கலா சொன்னது,

    மார்ச் 31, 2009 இல் 6:27 பிற்பகல்

    உண்மையிலும் உண்மை, ஆனால் ஆசிய கலாச்சாரம் முதலில் இதை கூறி விட்டது. ஆனாலும் சாறி ரொம்ப செக்சியான உடை இல்லையா?

  38. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 10, 2009 இல் 10:32 மு.பகல்

    //உண்மையிலும் உண்மை, ஆனால் ஆசிய கலாச்சாரம் முதலில் இதை கூறி விட்டது. ஆனாலும் சாறி ரொம்ப செக்சியான உடை இல்லையா?

    //

    இல்லியா பின்னே !

  39. akash சொன்னது,

    ஏப்ரல் 10, 2009 இல் 9:34 பிற்பகல்

    mail


மறுமொழியொன்றை வழங்குக