செவிலியர் பணி : ஒரு கிறிஸ்தவப் பார்வை

nurse_1
மனிதம் கலப்போம்.

நர்ஸ் ! எனும் ஒற்றை வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களை நாம் கொடுப்பதுண்டு. சிலருக்கு அது ஒரு வேலை. சிலருக்கு அது இலட்சியம். இன்னும் சிலருக்கு அது ஒரு பயிற்சிக் களம். மருத்துவக் கட்டிலில் படுத்திருப்பவர்களுக்கோ அவர்கள் தான் கடவுளின் வாரிசுகள். ஸ்டெதஸ்கோப் போட்ட தேவதைகளே நர்ஸ்கள் என ஒரு வெளிநாட்டுப் பழமொழி கூட உண்டு.

மருத்துவப் பணி என்பது ஒரு மகத்தான பணி என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. எல்லா இடங்களிலும் இவர்களுடைய பணி இருக்கிறது. நர்ஸ் என்றாலே மருத்துவமனை தான் நமது மனதில் வரும். உண்மையில் சுமார் 40 சதவீதம் நர்ஸ்கள் மருத்துவமனைக்கு வெளியே, பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், சமூக பணிகள், ஆய்வுக் கூடங்கள் போன்ற இடங்களில் தான் பணிபுரிகின்றனர்.

நர்ஸ் எனும் பணியை யோசிக்கும் போது “ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்” பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. நவீன கால மருத்துவம் அவருடைய சிந்தனையின் அடிப்படையில் தான் உருவானது. போர்களினால் பாதிக்கப்பட்டவர்களிடையே தான் அவருடைய பணி பெருமளவில் இருந்தது.

1820 க்கும் 1910க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அவர் முழுநேர மருத்துவப் பணி செய்தது வெறும் மூன்று ஆண்டுகள் தான் என்பது வியப்பூட்டுகிறது. “எவ்வளவு காலம் பணி செய்கிறாய் என்பதல்ல, எப்படி பணி செய்கிறாய் என்பதே முக்கியம் என்பதே முக்கியம்” என்பதையே இவருடைய வாழ்க்கை சொல்கிறது. “நீ செய்யும் செயல் எவ்வளவு பெரியதென்பதல்ல முக்கியம், அதில் எவ்வளவு அன்பை நீ செலுத்துகிறாய் என்பதே முக்கியம்” என்கிறார் அன்னை தெரேசா.

வேலைகள் எல்லாமே வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதற்கு தாதியர் பணி ஒரு சிறந்த உதாரணம். வெறும் சம்பளத்தை எதிர்பார்த்து இந்தப் பணியில் சேர்பவர்கள் பணியின் அர்த்தத்தை இழந்து விடுகிறார்கள். நீடிய பொறுமை, இரக்கம், சுயநலமின்மை என பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களே நல்ல நர்ஸாக பணிபுரிய முடியும் என்கிறார் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்.

ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !

1. செவிலியர் பரிவுகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருப்போருக்கு அந்த நேரத்தில் தேவைப்படுவதெல்லாம் நகையோ, பணமோ, வீடோ, காரோ அல்ல. பரிவு காட்டும் இதயம் தான். “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்” எனும் இறைவாக்கு ( கலாத் 6:2 ) நம்மிடம் எதிர்பார்ப்பது இதைத் தான்.

2. செவிலியர்கள் இதயத்தின் ஆழத்தில் இரக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். இரக்கத்தின் வேர்கள் இதயத்தில் தான் மையம் கொள்ளும். வேரற்ற இரக்கம் வெயிலில் காய்ந்து விடும். “இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” எனும் இறைவார்த்தை நினைவுக்கு வருகிறதா ?

3. மகிழ்ச்சியாய் இருக்க வேண்டியது செவிலியர்களின் பண்புகளில் ஒன்று. நோயாளிகள் ஏராளமான சோகத்தை மனதில் சுமந்து திரிபவர்கள். அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் காரணிகளாக செவிலியர் இருக்க வேண்டும். ஒரு புன்னகை, ஒரு உற்சாகமான பார்வை, ஒரு மலர்ச்சியான முகம் இது நோயாளிக்கும் பரவி அவர்களுடைய சுமையைத் தணிக்க உதவும் என்பது உளவியல் உண்மை.

” ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்” எனும் பிலிப்பியர் 4:4 ம் வசனமும், ” மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து: வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” எனும் நீதிமொழிகள் 14:22ம் வசனமும் செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளோடு இணைந்து பயணிக்கிறது.

4. பதட்டப்படாமல் வேகமான முடிவெடுக்கும் திறமை செவிலியர்க்கு அவசியம். நோயாளிகளோடான வாழ்க்கை ஒரு ரயில் பயணம் போல ரம்மியமானதல்ல, அது பாறைமீது காரோட்டுவது போன்றது. கவனம் சிதையாமல் இருக்க வேண்டியதும், தேவையான நேரத்தில் சரியான முடிவை வேகமாய் எடுக்க வேண்டியதும் அவசியம். அதற்கு கடவுளின் ஞானம் தேவை.

“உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்திடல் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்” எனும் இறை வார்த்தைகள் ( யாக்கோபு 1 : 5 ) செவிலியருக்கு ஊக்கம் ஊட்டட்டும்.

5. வார்த்தைகளில் இனிமையும், எளிமையும் இருக்க வேண்டியது இன்னொரு முக்கியமான தேவை. நோயாளிகளின் துயரக் கதைகளைச் சலிக்காமல் கேட்கும் காதுகளும், அவற்றுக்கு எரிச்சல் படாமல் பொறுமையாய் பதிலளிக்கும் மனமும் செவிலியருக்குத் தேவை. ஒரு குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு எரிச்சலடையாமல் பதில் சொல்லும் அன்னையைப் போல அவர்கள் செயல்பட வேண்டும்.

” உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக! ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும்” எனும் கொலோசேயர் 4 : 6 , செவிலியருக்காகவே எழுதப்பட்டது போல இருக்கின்றன.

6. கடின உழைப்பு தேவை. அதை அற்பண உணர்வோடு செய்தலும் வேண்டும். அலுவலக வேலை போல காலை முதல் மாலை வரை எனும் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் செவிலியர் பணி முடிவதில்லை. அது தொடர்ச்சியான ஒரு பணி. அலுவலக எல்லைக்கு வெளியேயும் அதே மனநிலையை நீடித்துக் கொள்ளும் தேவை ஏற்படலாம். உழைக்கச் சலிக்காத இதயம் அவர்களுக்கு வேண்டும்.

“நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல: ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்” ( கொலோ 3 :23 ) எனும் இறைவார்த்தை செவிலியருக்கு ஊக்கமளிக்கும் மருந்து.

7. தன்னலமின்றி பணி செய்ய வேண்டியது செவிலியரின் மிக முக்கியமான பண்பு. பணத்துக்காகவோ, தனது இலாபத்துக்காகவோ இந்தப் பணியைப் பயன்படுத்தும் போது மிகப்பெரிய பாவத்தை அவர்கள் செய்கின்றனர். ஏனெனில் இயலாதோரை வதைப்பவர்களை இறைவன் எதிர்க்கிறார்.” எவரும் தன்னலம் நாடக்கூடாது: மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்” (1 கொரி 10:24) எனும் இறை வார்த்தைகள் செவிலியர் மனதில் எழுத வேண்டிய வார்த்தைகள்.

8. செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான இன்னொரு குணாதிசயம் பணிவு. கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு இது. பணிவை விலக்கும்போது மனிதன் இறை பிரசன்னத்தை விட்டு சாத்தானில் எல்லைக்குள் நுழைந்து விடுகிறான். “முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்குங்கள்” எனும் எபேசியர் 4:2, செவிலியருக்கும் மிகப் பொருத்தமே.

9. நீடிய பொறுமை செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் பதட்டத்தின் படிகளில் அமர்ந்து கொண்டு கேட்கும் கேள்விகளை பொறுமையுடன் எதிர்கொள்வதானாலும் சரி, நோயாளிகளின் உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு பொறுமையுடன் கையாள்வதானாலும் சரி, பொறுமை மிக மிக அவசியம். “பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்: எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்” எனும் நீதிமொழிகள் ஒரு அறிவுறுத்தல்.

10. செபத்தில் நிலைத்திருப்பவராக இருக்க வேண்டும். இறைவனை விட்டு விட்டுச் செய்யும் செயல்கள் எல்லாம் செத்த செயல்களே. செய்கின்ற செயலை இறைவனின் அருளோடு செய்வதில் தான் கிறிஸ்தவ வாழ்க்கையின் மகத்துவமே அடங்கியிருக்கிறது. பிறருக்காக மனம் உருகி செபிப்பதும், யாரையும் காயப்படுத்தாத தினங்களுக்காக செபிப்பதும் செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணமாகும்.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள் (பிலி 4 :6 ) என்கிறது வேதாகமம்.

ஏற்கனவே சொன்னது போல, ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !

செவிலியர் அனைவரும் தங்கள் பணி ஒருவகையில் இறையழைத்தல் என்பது போல ஆத்மார்த்தமாய் செய்தால் மனுக்குலத்தின் மகத்துவங்களாக அவர்கள் நிலைபெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

( Thanks : Desopakari Magazine )

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

 அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.

திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.

“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.  

சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.

அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !

பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.

கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6  சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் !  8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !

“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது !  எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.

“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.

ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட். 

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் ! 

நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?

மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

சேவியர்

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.

திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.

“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.

சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.

அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !

பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.

கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6 சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் ! 8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !

“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது ! எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.

“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.

ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட்.

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் !

நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?

மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

சேவியர்

ரோபோவுக்குள் மனிதன் !

ரோபோவுக்குள் மனிதன் !

அவதார் ! படத்தை அவ்ளோ சீக்கிரம் மறந்திருக்க மாட்டீங்க. மனித உடல் ஒரு இடத்தில் இருக்க மனமும், உயிரும் அப்படியே இன்னொரு நீல நிற உடலுக்குள் தாவும் . அப்படியே பண்டோரா எனும் கிரகத்திலுள்ள மனிதர்களோடு போரிடவும் செய்யும்.

ஒரு வகையில் நமது கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையின் ஹைடெக் வடிவம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இப்போது அந்த அவதார் எனும் பெயரில் ஒரு ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. கான்செப்ட் கூட அதே தான். மனித மூளையை அப்படியே ஒரு ரோபோவுக்கு பொருத்தினால் எப்படி இருக்கும் என்பது தான் சிந்தனை.

இன்னும் பத்தே வருடங்களில் இந்த சிந்தனை செயல் வடிவம் பெற்று விடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இட்ஸ்கோவ், இந்த திட்டத்தின் காரணகர்த்தா. பொதுவாக இத்தகைய ‘பிலிம்’ காட்டும் ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் தான் நடக்கும். அதுவும் இந்த கருவை வைத்துக் கொண்டு ஹாலிவுட்டில் ரோபோ காப், கேப்ரிகா, புல்மென்டல் ஆல்கெமிஸ்ட், ஹோஸ்ட் இன் த செல் என வரிசையாக படங்களை சுட்டுத் தள்ளினார்கள்.

இப்போது இந்த கருவைக் கையில் எடுத்திருப்பது ரஷ்யா என்பது தான் ஒரு வித்தியாசம்.

பிறவிக் குறைபாடு உடையவர்களோ, நிரந்தர ஊனமானவர்களோ, அல்லது சாகக் கிடப்பவர்களோ தங்கள் மூளையை அப்படியே அலேக்காகத் தூக்கி ஒரு ரோபோ தலையில் வைத்து சாகா வரத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்கிறார் இவர்.

அறிவியலின் மிகப்பெரிய கனவுகளின் ஒன்று தான் இத்தகைய மூளை மாற்று சிகிச்சை போன்றவை. இதை அறிவியல் “முழு உடல் மாற்று” என்றும் “ மூளை மாற்று சிகிச்சை” என்றும் அழைக்கிறது. இந்த விஷயத்தில், மூளையை மற்ற நரம்புகளுடன் இணைப்பது படு சிக்கலான விஷயம். இன்றைய நுட்பம் தோற்றுப் பின் வாங்கும் இடங்களில் ஒன்றும் இது தான்.

ஆனால் சமீபத்தில் எலிகளை வைத்து இந்த ஆராய்ச்சி சில சுவடுகள் முன்னேறிச் சென்றது குறிப்பிடத் தக்கது !

மேட்ரிக்ஸ், அவதார் போன்ற திரைப்படங்கள் சொல்லும் “மைன்ட் அப்லோடிங்” அதாவது மனம் மாற்று முறை சாத்தியமானால் விஞ்ஞானத்தின் மிக முக்கியமான மைல் கல் அதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த பத்தாண்டுத் திட்டமாக மூளையை உள்வாங்கிச் செயல்படும் ரோபோவைத் தயாரிக்கும் ஆராய்ச்சிகள் நடக்கப் போகின்றனவாம். அமெரிக்காவிலுள்ள டி.ஏ.ஆர்.பி.ஏ எனும் ராணுவ ஆராய்ச்சி குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என தனது திட்டத்தைச் சொல்கிறார் இட்ஸ்கோவ்.

நூறு விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் இணைந்துப் பணியாற்றப் போகிறார்களாம். இந்த திட்டம் செயல்வடிவம் பெற்றால் விலை மதிப்பற்ற விஞ்ஞானிகள், ஞானிகள், தலைவர்கள் போன்றவர்களின் மூளைகளைத் தாங்கிய ரோபோ மனிதர்கள் அருங்காட்சியகங்களில் வசிக்கக் கூடும் !

விஞ்ஞானம் மிரட்டுகிறது இல்லையா ?

 

நன்றி : தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம்

என்றும் இளமை தரும் டெலோமியர் !!! ஜூவி கட்டுரை

கேன்சர் என்றாலே உலகம் பதறும். அதன் விளைவுகள் அப்படி. உலகில் நிகழும் மரணங்களில் 13 சதவீதம் புற்றுநோயினால் வருகிறது. 2007ம் ஆண்டில் மட்டும் கேன்சரால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 7.6 மில்லியன் ! கேன்சருக்கு மட்டும் ஒரு தீர்வு கிடைத்தால், பல மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு மேஜிக்கல் கண்டுபிடிப்புக்காக உலகம் வழி மேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு நீரூற்றும் கண்டுபிடிப்பு தான் இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசைத் தட்டிச் சென்றிருக்கிறது !

இந்த 1.4 மில்லியன் டாலர் விருதைக் கர்வத்துடன் பெற்றுக் கொண்டவர்கள் மூன்று பேர். எலிசபெத் பிளாக்பர்ன், காரல் கிரைடர் மற்றும் ஜேக் ஸாஸ்டெக். இவர்களில் முதல் இருவர் பெண்கள். 1901ம் ஆண்டு துவங்கி இதுவரை 800 பேருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெண்கள் வெறும் 36 பேர் மட்டுமே ! இரண்டு பெண்கள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்வதும் இது தான் முதல் முறை என்பது கூடுதல் சிறப்பு. சரி, இவர்களுடைய கண்டுபிடிப்பு தான் என்ன ?

குரோமோசோம்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். செல்களிலுள்ள டி.என்.ஏ மற்றும் புரோட்டீனின் ஒழுங்கான வடிவம் என அதைச் சொல்லலாம். குரோமா என்றால் உடல், சோமா என்றால் நிறம் என்கிறது கிரேக்க மொழி. குரோமோசோம்களைக் குறித்து வெளியான ஆராய்ச்சிகள் எக்கச்சக்கம். அந்த குரோமோசோமின் கடைசியில் டெலோமியர் எனும் ஒரு பகுதி இருக்கிறது. விஞ்ஞானிகள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத பகுதி. ஆனால் அது தான் குரோமோசோம்களைக் கண்ட்ரோல் செய்யும் ரிமோட் என்பது தான் இந்தக் கண்டுபிடிப்பு.

ஒரு செல் இரண்டாகப் பிரிவது உடலின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. அப்படி செல்கள் இரண்டாகப் பிரியும் போது அதிலுள்ள குரோமோசோம்களின் மாறாத பிரதி இரண்டு செல்களிலும் இருக்கும். இந்த வால்பகுதியான டெலோமியர் அப்படியல்ல. செல் பிரியும்போதெல்லாம் இந்த டெலோமியரின் நீளம் குறைந்தால் உடல் சட சடவென வயதாகித் தொலைக்கும். ஒருவேளை இந்த டெலோமியர் எப்போதுமே ஒரே நீளத்தில் இருந்தால் ? வேறென்ன என்றும் இளமை தான். கான்சர் செல்களில் இந்த பிரச்சினை தான் வருகிறது. டெலோமியர் எப்போதுமே நீளம் குறைவதில்லை. கான்சரும் அழிவதில்லை.

இந்த டெலோமியரின் சூட்சுமத்தைத் தான் இந்த விஞ்ஞானிகள் உடைத்திருக்கிறார்கள். குரோமோசோம்களின் நீளத்தை நிர்ணயிப்பது டெலோமியர் தான் என்பதில் துவங்கி, இந்த டெலோமியர் எப்படி இயங்குகிறது, என்னென்ன செய்கிறது என்பதையெல்லாம் விலாவரியாக அறிந்து தெளிந்திருக்கிறார்கள். இதிலுள்ள ஒரு என்ஸைம் தான் குரோமோசோம்களை அச்சு அசலாகப் பிரதியெடுக்கிறது. அதைக் கண்டுபிடித்தது தான் இந்த ஆராய்ச்சியின் ஹைலைட். அந்த என்சைமுக்கு இவர்கள் இட்ட பெயர் டெலோமிரேஸ் !

எலிசபெத் பிளாக்பர்ன் னின் பூர்வீகம் ஆஸ்திரேலியா. 1975லேயே அமெரிக்கா போய் செட்டிலாகி, அமெரிக்கப் பிரஜையும் ஆகி விட்டார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் அறிவியலுக்கான இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர். டெலோமிரஸ் பற்றிய முதல் அறிக்கையை அமெரிக்காவில் 1980லேயே வெளியிட்டு விருது வாங்கியவர் இவர். அந்த ஆராய்ச்சியில் படிப்படியான வளர்ச்சி தான் முப்பது ஆண்டுகளுக்குப் பின் இன்று நோபல் பரிசை அவருக்குத் தந்திருக்கிறது.

பிறப்பால் ஆஸ்திரேலியன் என்பதால் ஆஸ்திரேலிய பிரதமர் துவங்கி, கடைகோடி ஆஸ்திரேலியர் வரை எலிசபெத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர். 61 வயதானாலும் இன்னும் அவர் ஒரு ஆஸ்திரேலியன் தான் என சிலாகிக்கின்றனர். இருக்காதா பின்னே, ஆஸ்திரேலியாவிலிருந்து நோபல் பரிசு வாங்கியிருக்கும் முதல் பெண்மணியல்லவா அவர். போகட்டும், கல்பனா சாவ்லாவை நாம் கொண்டாடவில்லையா ?

ஜான் ஹாப்கின் பல்கலைக்கழக காரல் கிரைடருக்கு 48 வயதாகிறது. இவரும் நீண்ட நெடிய வருடங்களாக பிளாக்பெர்ன்னுடன் இந்த ஆராய்ச்சியில் மிக முக்கிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். விருது கிடைத்த ஆனந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் வெளிவே வரவில்லை. 

ஜேக் ஸாஸ்டெக் அமெரிக்காவின் பாஸ்டனிலுள்ள ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுகிறார். 56 வயதாகும் இவர் 1980ம் ஆண்டு முதலே எலிசபெத் பிளாக்பெர்னுடன் இந்த ஆராய்ச்சியில் ஐக்கியமாகியிருக்கிறார்.

ஸ்வீடனின் கரோலின்கா விலுள்ள நோபல் குழுவினர் நோபல் பரிசை வழங்கினார்கள். இந்த கண்டுபிடிப்பு பிரமிப்பூட்டுகிறது. செல்களைக் குறித்த நமது பல தலைமுறை அறிவை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. நமது ஆராய்ச்சிகள் பலவற்றை கலைத்துப் போட்டு புதிதாய் துவங்க வைத்திருக்கிறது. மருத்துவத்தின் பல்வேறு சன்னல்களையும், கதவுகளையும் திறந்து விட்ட மகத்தான கண்டுபிடிப்பு இது. என நோபல் புகழாரம் சூட்டினார்கள்.

கான்சர் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பலரும் இப்போது பழைய ஆராய்ச்சிகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு டெலோமிரஸைக் கவனிக்கத் துவங்கியிருக்கின்றனர். டெலோமியரைக் இஷ்டப்படி ஆட்டுவிக்க ஏதேனும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்பதே இப்போதைய ஹாட் ஆராய்ச்சி. 

காரணம் இருக்கிறது.   கான்சர் செல்களிலுள்ள டெலோமியரை அழித்தால் கான்சர் செல் அழியும். அவ்வளவு தான். கான்சருக்கான மருந்து ரெடி. அறுவை சிகிச்சை ஏதும் இல்லாமலேயே கான்சர் செல்கள் அழிந்து போகும் ! அதையே உல்டாவாக்கினால் இளமைக்கான மருந்து தயார். நல்ல செல்களிலுள்ள டெலோமியர் நீளம் குறையாமல் பாதுகாத்தால் போதும். உடல் வயதாகாமல் அப்படியே இருக்கும். முக்கியமாக, வாழும் காலம் முழுதும் ஆரோக்கியமாய் வாழலாம். 

அனீமியா, அல்சீமர், தோல் நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான வேர் இந்த டெலோமியரில் தான் இருக்கிறது என்கின்றனர். உலகில் உள்ள கொடிய நோய்களில் பெரும்பாலான நோய்களுக்கு டெலோமியரின் சிதைவே காரணமாய் இருக்கலாம் என்பது இப்போதைய மருத்துவ உலகின் நம்பிக்கை. இன்னும் சொல்லப் போனால் மன வளர்ச்சி குறைவாக இருப்பதற்கும் டெலோமியருக்கும் தொடர்பு இருக்கிறதாம். “மன அழுத்தத்தில் இருக்காதே, நோய் வரும், இளமை போகும்” என்பார்கள். அதன் காரணமும் டெலோமியர் தானாம். மன அழுத்தம் டெலோமியரைச் சிதைத்து உடலை நோயிலும், முதுமையிலும் தள்ளி விடுகிறது.

உலகெங்குமுள்ள ஆராய்ச்சியாளர்களையும், மருத்துவர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்த கண்டுபிடிப்பு. இது அஸ்திவாரத்தையே ஆட்டிப் போட்ட அட்டகாச ஆராய்ச்சி என்கிறார் பேராசிரியர் ரோஜர் ரெடல். இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள குழந்தைகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்.

டெலோமியர் என்பது நமது ஷூ லேஸின் முனை போல. முனை போய்விட்டால் ஷூ லேஸ் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்து போகும். முனை ஷார்ப்பாக இருந்தால் ஷூலேஸ் நன்றாக இருக்கும். டெலோமியர் பக்காவாக இருந்தால் செல் ஆரோக்கியமாக, இளமையாக இருக்கும். என அறிவியல் தெரியாதவர்களுக்கு இதை விளக்குகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நோபல் பரிசு எனும் அங்கீகாரம் இந்த ஆராய்ச்சியை பெரிய அளவில் நடத்த உதவும். உலகை உலுக்கும் நோய்களுக்கு இந்த நோபல் ஒரு முடிவைத் தர வேண்டும் என்பதே உங்ளைப் போல எனது விருப்பமும்

நன்றி : ஜூ.வி

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

நூல் பார்வை : பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன ?

 

பாலியல் எனும் வார்த்தையை பலரும் பல விதமான கண்ணோட்டங்களில் அணுகுகின்றனர். சிலருக்கு பாலியல் என்றாலே மிட் நைட் கேள்வி – பதில் நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வரும். கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திலேயே பேசப்படும் “சுய இன்பத்தால ஆண்மை போயிடுமா டாக்டர்” டைப் கேள்விகள் தான் சிலரைப் பொறுத்தவரை பாலியல் விழிப்புணர்வு விஷயங்கள். வார இதழ்களுக்குக் கல்லா கட்டும் முக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

இன்னும் சிலருக்கு பாலியல் என்பது படுக்கையறைப் புரபசர் வாத்சாயனாரின் வழிமுறைகளை விளக்குவது. பாலியல் கல்வி என்றாலே பலரும் பதட்டப்படுவதற்கு இது தான் காரணம். “ஸ்கூல்ல தியரி சொல்லிக் குடுப்பீங்க. பிள்ளைங்க போய் பிராக்டிக்கல் கத்துகிட்டா என்ன பண்றது ?” என்பது சிலருடைய அங்கலாய்ப்பு !

இன்னும் சிலருக்கு பாலியல் என்பது பழுப்பேறிப் போன காகிதத்தில் கடைகளின் உள்பக்கமாய்த் தொங்கும் “சரோஜா தேவிக் கதைகள்”. யாருக்கும் தெரியாமல் வாங்கி, படித்து பொழுதைப் போக்கும் சமாச்சாரம். “எங்கும் நிறைந்திருக்கும். ஆனால் யார் கண்ணுக்கும் தெரியாது” எனும் புதிருக்கு கடவுள் என்பது மட்டுமல்ல விடை. இத்தகைய புத்தகங்களும் தான். இப்போது டெக்னாலஜியும், பிராட்பேண்டும், ஹைடெக் செல்பேசியும் வந்தபிறகு சரோஜா தேவி இ-புக் வடிவம் எடுத்திருக்கிறது. அது ஒன்று தான் வித்தியாசம்.

கடலின் கரையில் அலைகள் அதிகமாய் இருக்கும். ஆனால் அலைகளே கடலல்ல என்பதைச் சொல்லும் நூல்கள் தமிழில் மிக மிக அரிது. அந்த வெற்றிடத்தை கன கட்சிதமாக நிரப்பியிருக்கிறது எழுத்தாளர், சகபதிவர், நண்பர் பத்மஹரி அவர்களுடைய “பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?” எனும் நூல். தேவையற்ற, அதிகம் அலசப்பட்ட விஷயங்களை லாவகமாய்த் தாண்டி பாலியல் குறித்துத் தெரியாத விஷயங்களை அறிவியல் பூர்வமாக அணுகியதில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் ஆசிரியர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். படித்தது உயிரி தொழில்நுட்பவியல். இப்போது ஜப்பானில் பி.ஹைச்.டி க்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதுவும் ஸ்டெம் செல் குறித்த ஆராய்ச்சி. ஏதோ ஒரு நரைத்த தலை பேராசிரியர் அடையவேண்டிய இடத்தை இந்தச் சின்ன வயதிலேயே அடைந்திருக்கும் எழுத்தாளருக்கு, தமிழும் கைவந்திருப்பது தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த பாக்கியம் என்று சொல்லலாம்.

ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காரே, வாசிச்சா புரியுமா ? எனும் சந்தேகத்துடன் தான் இவருடைய எழுத்தை வாசிக்கத் துவங்கினேன். சரளமாய் ஓடித் திரியும் இவருடைய தமிழ் ஒரு இனிய ஆச்சரியம். அறிவியல் விஷயங்களை ஜஸ்ட் லைக் தேட், தமிழில் விதைத்து விட்டுப் போவதில் வெற்றி கண்டிருக்கிறார்.

ஃபீடோ பீலியா எனும் குழந்தைகள் மீதான வன்முறை, கள்ள உறவுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், விலங்குகளோடான உறவுகள் – போன்ற பல விஷயங்கள் இதுவரை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் அலசப்பட்டதில்லை. அல்லது அதுகுறித்துத் தமிழில் நான் வாசித்ததில்லை. பத்மஹரியின் நூல் அந்த பணியை சிறப்பாகச் செய்திருக்கிறது.

முதல் நூலையே பாலியல் சார்ந்து எழுதியிருப்பதில் பாலியல் குறித்த புரிதல் சமூகத்துக்குத் தேவை எனும் அவருடைய அக்கறை புலப்படுகிறது.

தொடரும் அவருடைய நூல்களில் சமூகம் மேலும் பயனடையும் எனும் நம்பிக்கை பலப்படுகிறது !

வாழ்த்துக்கள் ஹரி ! தொடர்க உங்கள் பயணம்.

 

நூல் விலை : 130/; –

கிடைக்குமிடம் :

Blackhole Media Publication Limited,  No.7/1, 3-rd Avenue, Ashok nagar,  Chennai-600 083. India

Cell: (+91) 9600086474, 9600123146

Email: admin@blackholemedia.in

Website: http://blackholemedia.in/

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

ஓவரா ஷாப்பிங் பண்றீங்களா ? ஒரு டேஞ்சர் ரிப்போர்ட் !

 திவாகர் நகம் கடித்துக் காத்திருந்தான். அந்த காபி ஷாப்பில் அவன் மட்டும் தான் தனியே இருந்தான். மற்ற எல்லாருமே ஆளாளுக்கு ஒரு துணையுடன் சில்மிஷக் கதைகளுடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஓரமாய் அமர்ந்திருந்த சிலர் இவனை ஒரு வேற்றுக் கிரக வாசியைப் போல பார்க்க, திவாகர் தனது நகம் கடிக்கும் வேலையை துரிதப்படுத்தினான்.

இன்னும் ரெண்டு வாரத்தில் கல்யாணம். நிச்சயதார்த்தம் முடிந்து நான்கு மாதங்கள் முடிந்திருந்தது . வழக்கமாய் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கும் திவ்யாவின் குரலில் நேற்று ஏகப்பட்ட குழப்பமும் பதட்டமும்.

“திவாகர், நான் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்” திவ்யாவின் குரலில் கொஞ்சம் பதட்டம் இருந்தது.

“என்னாச்சு திவ்யா ? எனி பிராப்ளம் ? “

“எப்படி சொல்றதுன்னு தெரியல, ஆனா முக்கியமான விஷயம் தான். நேர்ல சொல்றேனே”

“இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம். இனிமே என்ன தயக்கம் ? விஷயத்தைச் சொல்லு” திவாகரின் குரல் கொஞ்சம் பிசிறடித்தது.

“கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த விஷயத்தை உங்க கிட்டே சொல்லணும். அதனால தான் நாளைக்கு காபி ஷாப் வர சொல்றேன். வேற எதுவும் கேக்காதீங்க பிளீஸ்.” திவ்யா போனை வைத்து விட்டார்.

திவாகருக்கு இருப்புக் கொள்ளவில்லை. காபி ஷாப்பில் அரை மணி நேரம் முன்னாடியே வந்தவனுக்கு கடிக்கக் கூட போதுமான நகம் இல்லை. என்னவாயிருக்கும் ? திடீரென கல்யாணத்தை நிறுத்தப் போகிறாளா ? ஏதாச்சும் பழைய காதல், கீதல் ன்னு ஏதாச்சும் பூதம் கிளப்பப் போறாளா ? இல்லே வீட்ல ஏதாச்சும் பிரச்சினையா ? இந்தக் கல்யாணம் நடக்குமா ? திவாகரின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் நெல்லை எக்ஸ்பிரஸ் போல தடதடத்த போது திவ்யா வந்தாள்.

எதுவும் பேசாமல் திவாகரின் முன்னால் அமர்ந்த திவ்யாவிடம் கொஞ்சம் பதட்டம் இருந்தது. சென்னை வெயில் ஊற்றியிருந்த நெற்றி வியர்வையை கர்ச்சீப்புக்கு வலிக்காமல் துடைத்துக் கொண்டிருந்தவளை ஏறிட்டான்.

“என்ன திவ்யா ? நீ பாட்டுக்கு என்னென்னவோ சொல்லிட்டு போனை வெச்சுட்டே, இங்க மனுஷன் டென்ஷன்ல தூங்கவே இல்லை தெரியுமா ? சரி, இப்பவாச்சும் சொல்லு என்னாச்சு ?” திவாகர் கேட்டான்.

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். பட், நீங்க அதை எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியாது. நாளைக்கு நமக்குள்ள இதனால எதுவும் பிரச்சினை வரக்கூடாதில்லையா ? அதான் …” திவ்யா இழுத்தாள்.

“எதுன்னாலும் தயங்காம சொல்லு திவ்யா… “

“எனக்கு ஒரு பிராப்ளம் இருக்கு..”

“பிராப்ளம் மீன்ஸ் ? வீட்லயா ? வெளியே யாராவது ?..”

“வீட்லயும் இல்ல, வெளியேயும் இல்ல… பிராப்ளத்துக்குக் காரணமும் நான் தான்”

“ஹே… திவ்யா, போதும். டைரக்டா விஷயத்துக்கு வா. உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லையா ?” திவாகர் நேரடியாகவே கேட்டான்.

“என்ன திவாகர் இப்படி கேக்கறே…” அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவளுடைய கண்களின் சட்டென கண்ணீர் எட்டிப் பார்த்தது. கேட்கக் கூடாத எதையோ கேட்டுவிட்டோம் என திவாகர் சட்டென உதட்டைக் கடித்தான்.

‘ஐ ஆம் சாரி.. டென்ஷன்ல கேட்டுட்டேன்…. விஷயத்தைச் சொல்லு”

“எப்படி சொல்றதுன்னு தெரியல. ஐ ஆம் எ ஷாப்பஹாலிக் திவாகர்” திவ்யா சொல்லி விட்டு டேபிளையே பார்த்தாள்.

“அப்படின்னா ?…”

“எப்பவும் ஷாப்பிங்னு கிளம்பிப் போய் எதையாச்சும் வாங்கிட்டே இருப்பேன் திவாகர்” திவ்யா சீரியசாகச் சொல்ல திவாகர் சத்தமாய்ச் சிரித்தான்.

“ஹேய்… இதச் சொல்லவா இவ்ளோ பீடிகை போட்டே ? எல்லா பொண்ணுங்களுமே அப்படித் தான். தி நகர்ல போய் பாரு. ஷாப்பிங் பார்ட்டிங்க கைலயும், தலைலயும் மூட்டை முடிச்சோட போறதை.” திவாகர் சொல்லி விட்டு மறுபடியும் சிரித்தான்.

“திவாகர், பிளீஸ் பி சீரியஸ். “

“ஓ.கே. ஒகே…. நீ என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோன்னு பயந்துட்டே இருந்தேன். நல்ல வேளை ….. ” திவாகர் சேரில் சாய்ந்து உட்கார்ந்தான், அவனுடைய முகத்தில் நிம்மதி தெரிந்தது.

“நான் ஏதாச்சும் நல்ல ஒரு டாக்டரைப் பாக்கலாம்ன்னு இருக்கேன்” திவ்யா சொன்னாள்.

” பாக்கலாமே ! நம்ம பூபதி அங்கிள் டாக்டர் தானே. அவர் கவுன்சிலிங் எல்லாம் பண்ணிட்டு இருக்காரு. அவர் கிட்டே பேசலாம்….. இதெல்லாம் சப்ப மேட்டர்மா…” திவாகர் உற்சாகமாய்ச் சொல்லிக் கொண்டே காபி ஆர்டர் செய்தான். திவ்யா இன்னும் பதட்டம் தணியாதவளாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாளே திவாகர் திவ்யாவையும் அழைத்துக் கொண்டு டாக்டர் பூபதியின் அறைக் கதவைத் தட்டினார்.

“வாப்பா திவாகர். கமின் திவ்யா. ஐ யாம் வெயிட்டிங் பார் யூ …” பூபதி சொல்லிக் கொண்டே எதிரே இருந்த இருக்கைகளைக் காட்டினார். அவர்களுக்குப் பின்னால் கண்ணாடிக் கதவு பெண்ணின் நாணம் போல மென்மையாய் மூடிக் கொண்டது.

“அங்கிள் நாங்க உங்களோட பிஸி டைமை வேஸ்ட் பண்ண விரும்பல. நேத்திக்கே நான் உங்க கிட்டே எல்லா மேட்டரையும் சொல்லிட்டேன். திவ்யாவோட குழப்பத்தை கிளியர் பண்ண வேண்டியது இனி உங்க பொறுப்பு.. ” திவாகர் சிரித்துக் கொண்டே சொல்ல திவ்யா வெட்கமாய் புன்னகைத்தாள். பூபதி பேச ஆரம்பித்தார்.

திவாகர், நீ நினைக்கிற மாதிரி இது ரொம்ப சின்ன விஷயமும் கிடையாது. அதே போல திவ்யா நினைக்கிற அளவுக்கு உலக மஹா பிரச்சினையும் கிடையாது. இது ஒரு வகையான அடிக்ஷன் அவ்வளவு தான். இதை ஓனியோ மேனியா ன்னு கூட சொல்லுவாங்க. உலகத்துல நூறு பேரை எடுத்துப் பாத்தா அதுல ஐந்து முதல் எட்டு பேருக்கு இந்த பிரச்சினை இருக்கு. ஷாப்பிங் பண்ணிட்டே இருக்கிற மைண்ட் செட்.

வீட்ல போய் பாத்தா அலமாரா முழுக்க எக்கச் சக்கம் புதிய புதிய துணி இருக்கும். ஒரு தடவை கூட போட்டிருக்க மாட்டாங்க. ஏன் அதுல தொங்கிட்டு இருக்கிற விலையைக் கூட கிழிச்சிருக்க மாட்டாங்க. நிறைய செருப்பு வாங்கி வெச்சிருப்பாங்க. கவரை கூட பிரிச்சுப் பாத்திருக்க மாட்டாங்க. சிலரு மேக்கப் பொருட்களா வாங்கிக் குவிப்பாங்க. இன்னும் சிலர் நகைகளா வாங்கி அடுக்குவாங்க. இதெல்லாம் இந்த சிக்கலோட அறிகுறிகள் தான்.

திவ்யா பயப்படறதில அர்த்தமிருக்கு. நாளைக்கு வீட்ல இதனால எந்தப் பிரச்சினையும் வரக்கூடாதில்லையா. இந்த சிக்கல் வந்தா பணமெல்லாம் கரஞ்சு போயிடும். அது வீட்ல சண்டையைக் கூட உண்டாக்கிடும் இல்லையா ?

திவ்யா ஆமோதிப்பது போல தலையாட்ட, பூபதி தொடர்ந்தார்.

இதுல அப்செட் ஆக ஒண்ணுமே இல்லை. இங்கிலாந்து இளவரசி டயானாவுக்கே இந்த நோய் உண்டு. எப்பவும் துணிமணிகளா வாங்கி அடுக்குவாங்க. அவங்களுக்குப் பணத்துக்குத் தான் பிரச்சினையே இல்லையே ! கேக்கணுமா ?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படைல கொஞ்சம் வித்தியாசம் உண்டு. ஆண்கள் மூட் அவுட் ஆகுதுன்னா போய் ஒரு தம் பத்த வைப்பாங்க. ரொம்ப டென்ஷனா இருந்தா ஒரு தம் அடிப்பாங்க. ரொம்ப சோகமா இருந்தா கொஞ்சம் தண்ணி அடிப்பாங்க. இந்த ஷாப்பஹாலிக்ஸ் விஷயமும் கிட்டத் தட்ட அது மாதிரி தான். இந்த பிரச்சினை உள்ளவங்க என்ன பண்ணுவாங்கன்னா, ஷாப்பிங் கிளம்பிடுவாங்க ! மூடு சரியில்லை, போரடிக்குது, மனசுக்கு கஷ்டமா இருக்கு இப்படி என்ன காரணம்னாலும் கடைக்கு ஓடிடுவாங்க.

பெண்களுக்கு மட்டுமில்ல, ஆண்களுக்கும் கூட இந்த நோய் உண்டு. அவங்க கடைல போய் எலக்ட்ரானிக் பொருட்களா வாங்கிக் குவிப்பாங்க. ஆனா 80 முதல் 90 சதவீதம் ஷாப்பஹாலிக்ஸும் பெண்கள் தான்.

“ஏப்ரல் பென்சன்” ன்னு ஒரு உளவியலார் அமெரிக்கால இருக்காரு. அவரு இதைப் பற்றி அருமையா ஒரு புக் எழுதியிருக்காரு. வாய்ப்புக் கிடைச்சா படிச்சுப் பாருங்க. அவர் இந்த பிரச்சினைக்கு எக்கச் சக்க உளவியல் காரணங்களைச் சொல்லியிருக்காரு. தனிமை, மன அழுத்தம், சின்ன வயது ஏக்கம், சின்ன வயது வெறுப்பு இப்படி காரணங்களோட லிஸ்ட் ரொம்பப் பெரிசு.

பூபதி சொல்லிக் கொண்டே போக திவாகர் இடைமறித்தான்.

அங்கிள், நான் கூட அடிக்கடி மொபைல் போன் மாத்துவேன். நிறைய டிவிடி வாங்கிப் போடுவேன். இதெல்லாம் ஷாப்பஹாலிக் அறிகுறிகளா ?

வாங்கறதையும், வாங்காம இருக்கிறதையும் நாமே தீர்மானிச்சா பிரச்சினையே இல்லை. அது நம்ம கட்டுப்பாட்டில இல்லேன்னா தான் சிக்கலே. நான் கொஞ்சம் கேள்வி கேக்கறேன். இதுக்கெல்லாம் ஆமான்னு பதில் சொன்னா, இந்த நோய் இருக்குன்னு அர்த்தம்.

மனசுக்கு ரொம்ப அழுத்தமா இருக்கு, டென்ஷனா இருக்குன்னு ஷாப்பிங் போவீங்களா ?

கடைக்குப் போய் கிடைச்சதையெல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து, ஐயோ தெரியாம வாங்கிட்டேனே ன்னு புலம்புவீங்களா ?

கடைக்குப் போறீங்க, ஏதாச்சும் ஒரு பொருளைப் பாத்தா அதோட விலை என்னவா இருந்தாலும் வாங்கிட்டு வருவீங்களா ? முக்கியமா அந்தப் பொருள் நமக்குத் தேவையே இல்லேன்னா கூட !

வாங்கவே மாட்டேன்னு தீர்மானம் பண்ணிட்டு போற பொருளைக் கூட மனசைக் கட்டுப் படுத்த முடியாம வாங்கிட்டு வந்துடுவீங்களா ?

அலமாரா நிறைய நீங்க போடவே போடாத துணிங்க நிறைஞ்சு இருக்கா ? கணக்கு வழக்கே பாக்காம செலவு பண்ணி தீக்கறீங்களா ?

என்னால ஷாப்பிங் பண்றதை கண்ட்ரோல் பண்ண முடியலேன்னு நீங்களே நினைக்கிறீங்களா ?

இந்த கேள்விக்கெல்லாம் நீங்க “ஆமா” ன்னு பதில் சொன்னீங்கன்னா உங்களை அறியாமலேயே நீங்க ஒரு ஷாப்பஹாலிக் ஆ இருக்கீங்கன்னு அர்த்தம். இல்லேன்னா நோ பிராப்ளம்.

பூபதி சொல்லிவிட்டு திவ்யாவைப் பார்த்தாள். திவ்யாவின் குரல் மெலிதாய் ஒலித்தது

“நீங்க சொல்றது கரெக்ட் டாக்டர். ஏறக்குறைய எல்லாம் எனக்கு இருக்கு…” திவ்யா சொல்லி விட்டு திவாகரைப் பார்த்தாள். திவாகர் அமைதியாய் இருந்தான். திவாகரின் அந்த அமைதி திவ்யாவை கலங்க வைத்தது.

கவலையே படாதே திவ்யா. இதெல்லாம் மனசோட எண்ணம் தான். மனசை நாம கண்ட்ரோல் பண்ண முடியும். இதுல இருந்து வெளியே வரது பெரிய விஷயம் இல்லை. சில வழிகள் இருக்கு அதை நான் சொல்லித் தரேன்.

பர்ஸ்ல டெபிக் கார்ட், கிரடிட் கார்ட், செக் புக் எதுவும் இருக்கக் கூடாது. பொதுவா ஷாப்பிங் போகும்போ என்னென்ன வாங்கப் போறோமோ அதுக்குத் தேவையான பணம் மட்டும் தான் எடுத்திட்டு போகணும். அப்போ நாம நம்ம மனசைக் கட்டுப் படுத்த முடியாட்டா கூட நம்ம பர்ஸ் நம்மைக் கட்டுப் படுத்திடும்.

ஒரு பொருள் வாங்கணும்னு நினைச்சா உடனே வாங்கக் கூடாது. கடைக்காரர் கிட்டே வெச்சுக்கோங்க நாளைக்கு வந்து வாங்கிக்கறேன் ன்னு சொல்லிட்டு கிளம்பணும். ரெண்டு நாள் கழிச்சும் உங்களுக்கு அந்த பொருள் முக்கியம்ன்னு தோணினா, போய் வாங்கலாம்.

இந்த மாசம் இவ்ளோ தான் செலவு பண்ணுவேன்னு எழுதி வைக்கணும். அந்த பட்ஜெட்டைத் தாண்டி எதையுமே வாங்கக் கூடாது. அதுக்கு நீங்க உங்க ஹஸ்பெண்ட் டோட ஹெல்ப்பைக் கேக்கலாம்.

அதே போல நீங்க என்ன வாங்கினாலும் அதை உடனே ஒரு பேப்பர்ல எழுதி வைக்கணும். ஒரு கடலை மிட்டாய் வாங்கினா கூட எழுதுங்க. மாசக் கடைசில நீங்க என்னென்ன வாங்கியிருக்கீங்க, எவ்ளோ செலவு பண்ணியிருக்கீங்க, அதுல எவ்வளவு யூஸ் ஆகியிருக்கு ன்னு திரும்பிப் பாருங்க. உங்க மனசைக் கட்டுப்படுத்த இது ஒரு நல்ல வழி.

என்னென்ன மன நிலையில உங்களுக்கு ஷாப்பிங் போக தோணுதுன்னு கண்டு பிடிங்க. சோகமா, தனிமையா, குழப்பமா, வலியா, ஆனந்தமா, நிராகரிப்பா, கோபமா என்னன்னு கண்டு பிடிங்க. அந்த மனநிலை வரும்போ வேறு ஏதாவது அதை விட சுவாரஸ்யமான விஷயத்துல கவனத்தைச் செலுத்தலாம். உதாரணமா சினிமா பாக்கறது, நண்பர்களைப் போய் பாக்கறது, நாய்க்குட்டி கூட விளையாடறது இப்படி.

ஷாப்பிங் போகும்போ தனியா போறதை விட்டுடுங்க. யாரையாச்சும் கூட்டிட்டு ஷாப்பிங் போங்க. அது நீங்க வாங்கற வேகத்தைக் குறைக்கும்.

பூபதி சொல்லிக் கொண்டே போக, மிகவும் கவனமாய் மனதுக்குள் அனைத்தையும் குறித்துக் கொண்டாள் திவ்யா

எதுவுமே கவலைப் படாதீங்க. இப்படி ஒரு சிக்கல் இருக்கிங்கறதை நீங்க ரெண்டு பேரும் தெரிஞ்சுக்கிறது தான் முக்கியம். இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மனசை வேற விஷயங்களை ஈடுபடுத்தி குறைச்சுக்கலாம். பூபதி சொல்லி முடிக்க திவாகர் புன்னகைத்தான்.

திவாகரின் புன்னகையைப் பார்த்ததும் திவ்யாவின் மனசுக்குள்ளும் உற்சாகம் முளை விட்டது.

“ரொம்ப நன்றி அங்கிள்…. கிளம்பறோம்” சொல்லி விட்டு பூபதியைப் பார்த்தான் திவாகர்.

“கிளம்பறீங்களா ? ஏதாவது அவசர வேலை இருக்கா ? “

“ஆமா அங்கிள் ஷாப்பிங் போணும்” திவ்யா சொல்ல பூபதி திடுக்கிட்டார்.

“என்ன மறுபடியும் ஷாப்பிங்கா ?”

“இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம் இருக்குல்லயா, இன்னும் கல்யாண டிரஸ் கூட வாங்கல” திவாகர் சிரித்தான்.

“சிரிக்கிறதெல்லாம் இருக்கட்டும். இன்னிக்கு செலவாக்கற கணக்கையும் மறக்காம எழுதி வையுங்க” பூபதி சீரியஸாய் ஜோக்கடிக்க, சிரித்துக் கொண்டே கிளம்பினார்கள் திவாகரும், திவ்யாவும்

Thanks : Pennae Nee

TO VOTE…..

ஜூனியர் விகடன் : அதிர வைக்கும் நோய் !

Tanya2

உலகிலேயே இவள் மட்டும் தான் இப்படி என அதிர்ச்சியுடன் ஆரம்பிக்கின்றனர் மருத்துவர்கள். என்ன மருத்துவம் பார்த்தாலும், என்ன ஆபரேஷன் செய்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறாள். இவளுடைய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த இன்றைய தேதியில் உலகில் மருந்தே இல்லை என்கின்றனர்.

அமெரிக்காவிலுள்ள நிவேடாவில் வசிக்கும் ஆன்கஸ் தான்யா வுக்கு வயது வெறும் 30. இளமைத் துள்ளலுடம் உற்சாகமாய் இருக்கவேண்டிய வயதில், அறைகளுக்குள் சோர்ந்து போய் கிடக்கிறாள். காரணம் சட சடவென வளரும் அவளுடைய உடல். இப்போது அவளுடைய உயரம் ஆறரை அடி ! எடை சுமார் 215 கிலோ.

பதினெட்டாவது வயதில் அழகாக ஐந்து அடி எட்டு இன்ச் எனும் வசீகர அளவில் இருந்தவள், சடசடவென வளந்து தனது முப்பதாவது வயதில் ஆறு அடி ஆறு இஞ்ச் எனுமளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். கடந்த பன்னிரண்டு வருடங்களில் மட்டும் இவளுடைய வளர்ச்சி 10 இன்ச்கள் ! இது விபரீத வளர்ச்சி ! உலகிலேயே முப்பது வயதில் இந்த உயரமும் எடையும் கொண்ட ஒரே பெண் இவர் தான் !

இவளுக்கு வந்திருக்கும் நோயின் பெயர் அக்ரோமேக்லியா. அதாவது ஹார்மோன்கள் கன்னா பின்னாவென வளர்வது. என்ன செய்தாலும் இதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாது. சராசரியாய் 250 ஹார்மோன்கள் இருக்க வேண்டிய இடத்தில் தான்யாவுக்கு இருப்பது 3000 !

சிறு வயதில் சாதாரணமாய் தான் இருந்திருக்கிறாள். டீன் ஏஜில் தான் இந்த திடீர் வளர்ச்சி ஆரம்பமாகியிருக்கிறது. செருப்பு Tanya_Beforeவாங்கி வருவாள், அடுத்த மாதமே அது சின்னதாகிவிடும். வாங்கி கொண்டு வரும் ஆடைகள் சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாமல் போய்விடும். அதிர்ச்சியும், குழப்பமும், கவலையும் ஒட்டு மொத்தமாக அவளைச் சூழ்ந்து கொண்டது அப்போது தான்.

பதின் வயதில் அழகாய் இருக்க வேண்டும் எனும் எண்ணம் இயல்பாகவே இளம் பெண்களுக்குள் அலைபாயும். அழகாய் இல்லாவிட்டலும் அளவாய் இருந்தேயாக வேண்டும் என நினைக்கும் வயது அது. தான்யாவுக்கு இரண்டும் போய்விட்டது. அதிகப்படியான வளர்ச்சியினால், அழகையும், களையையும், உற்சாகத்தையும் ஒட்டு மொத்தமாக இழந்து விட்டாள்.

இந்த சிக்கல் போதாதென்று உடலும் பெண்மைக்குரிய தன்மைகளை விட்டு முரட்டுத் தனமான ஆண் தோற்றமாய் மாறிவிட்டது. இனிமையாய் இருந்த குரலில் திடீரென ஒரு கரகரப்பும் வந்து சேர்ந்து விட்டது. அடுக்கடுக்காய் வந்த அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவளைப் பார்த்து கிண்டலடித்து விட்டு கழன்று கொண்டான் உயிராய்ப் பழகிய காதலன் !

எப்படியாவது தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என தான்யாவின் அம்மா கேரன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்தார். பல டாக்டர்களைப் பார்த்தார்கள். பல சோதனைகளைச் செய்தார்கள். கடைசியில் அவளுடைய மூளையில் திராட்சைப் பழ அளவுக்கு ஒரு கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்தக் கட்டிதான் இவளுடைய வளர்ச்சிக்கான காரணமாய் இருக்கலாம் என அவர்கள் நம்பினர். ஆனால் இவ்வளவு பெரிய கட்டியை மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்வதெல்லாம் சாத்தியமில்லை என பின்வாங்கினர்.

கேரன் சோர்ந்து போகவில்லை. அமெரிக்கா முழுதும் தேடி ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்தார்கள். கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அப்பாடா, ஒரு வழியாக எனது சிக்கல் தீர்ந்தது என மகிழ்ந்தாள் தான்யா. ஆனால் அந்த மகிழ்ச்சி tranya3நீடிக்கவில்லை. அவள் தொடந்து வளர்ந்தாள்.

சரி உடலிலுள்ள கொழுப்பை ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவோம் என களத்தில் இறங்கினார்கள். பயனில்லை. மருந்துகள் மூலம் உடலிலுள்ள ஹார்மோன்களின் அளவை மூவாயிரத்திலிருந்து ஆயிரமாகக் குறைக்கப் பார்த்தார்கள். வண்டி வண்டியாய் மருந்துகள் சாப்பிட்டும் ஒன்றும் சரியாகவில்லை.

பல டாக்டர்கள் இவளை ஒரு குரங்காகப் பாவித்து பல சோதனை மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். என்ன செய்தும் உடல் மட்டும் பிடிவாதமாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது சரியாக நடக்கவும் முடியாமல் வீட்டுக்குள் வீல் சேரில் அடைபட்டிருக்கிறார்.

தன்னுடைய சொந்த ஊரிலுள்ள மக்களே தன்னை அன்புடன் நடத்தவில்லையே எனும் கவலை அவளுக்குள் நிரம்பியிருக்கிறது. மக்கள் பிறரைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இப்படி வளர்ந்ததில் என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்கள் ? நான் என்ன விருப்பப்பட்டா வளர்கிறேன் எனும் அவரது குரலில் ஆதங்கம் வழிகிறது.

“இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் தான் நீ உயிரேடு இருப்பாய்” என ஒரு டாக்டர் சொல்லி எட்டு மாதங்களாகிவிட்டது. இதுவரை மருத்துவத்துக்காகச் செலவிட்ட தொகை மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய். ஒரு பிரயோசனமும் இல்லை. மிச்சமிருப்பது நம்பிக்கை மட்டுமே !

கடந்த மூன்று மாதங்களாக புதிதாக ஒரு டாக்டர் இவளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். பல மருந்துகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்து தான்யாவின் வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். என்னுடைய வளர்ச்சியை கடவுள் போல வந்திருக்கும் இந்த டாக்டர் தடுத்து நிறுத்துவார். நானும் சாதாரண மனுஷியாக உலவுவேன் என கண்களில் கனவுகளுடனும், கண்ணீருடனும் கூறுகிறாள் தான்யா !

நலம் பெற வாழ்த்துவதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும் நாம் ?

ஃ 

தமிழிஷில் வாக்களிக்க…

எனது ஜூ.வி கட்டுரை

Michael-Jacksonமைக்கேல் ஜாக்ஸனின் இசை தான் ஓயாது என்று நினைத்தால், அவரது மரணம் குறித்த சர்ச்சைகளும் இப்போதைக்கு ஓயாது என்றே தோன்றுகிறது. என் தம்பி மைக்கேலை பணத்துக்காக கூட இருந்தவர்களே கொலை செய்து விட்டார்கள் என கண்ணீரும் கம்பலையுமாய் அவருடைய சகோதரி லே டோயா சில நாட்களுக்கு முன் கொளுத்திப் போட்ட திரி, சரவெடியாய் ஆங்காங்கே வெடித்துக் கொண்டிருக்கிறது.

போதாக்குறைக்கு மைக்கேல் ஜாக்ஸனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நீண்ட மௌனம் காப்பது பலருடைய மனதில் தீவிர சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. ஏதோ பிரம்ம ரகசியம் போல போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மூடி வைக்கப்பட்டிருந்தாலும் அதிலுள்ள மிக முக்கியமான தகவலை மைக்கேலின் நீண்டகால நண்பரான டெரி ஹார்வி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

மைக்கேலின் மரணத்துக்குக் காரணம் அவரது உடலில் அளவுக்கு அதிகமாய் செலுத்தப்பட்டிருந்த புரோபோஃபோல் என்னும் மருந்து தான் என்கிறது குடும்பத்தினர் செய்த இரண்டாவது “போஸ்ட்மார்ட்ட” ரிப்போர்ட். இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், மைக்கேலின் மரணம் ஒரு கொலை தான். இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இன்னும் சில தினங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினரால் கைது செய்யப்படுவார்கள் என பகீர் தகவலை வெளியிடுகிறார் அவர்.

டிப்ரிவேன் தயாரிப்பாக வரும் இந்த மருந்து அறுவை சிகிச்சை நேரத்தில் நோயாளிகளை மயக்கமடையச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதை ஆபரேஷன் தியேட்டருக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இந்த மருந்தைப் பயன்படுத்துவது சட்ட விரோதம். ஆனால் மைக்கேல் மரணமடைவதற்குச் சற்று நேரத்துக்கு முன் அவருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டிருந்தது என்கிறது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் !

அப்படிப் பார்த்தால் மைக்கேலின் வீட்டில் வைத்து மைக்கேலுக்கு அந்த மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது என்பது தானே பொருள் ? ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே அனுமதிக்கப்படாத மருந்து மைக்கேலின் வீட்டில் எப்படி வந்தது ? அதை அவருக்குப் பரிந்துரைத்தது யார் ? கொண்டு வந்து கொடுத்தது யார் ? என அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டு தீவிரமாய் களத்தில் குதித்திருப்பது நீங்கள் நினைப்பது போல அமெரிக்கப் போலீஸ் அல்ல ! டி.இ.எ எனப்படும் டிரக் என்ஃபோர்ஸ்மெண்ட் அட்மினிஷ்ட்டிரேஷன் ( Drug Enforcement Administration) அமைப்பு.

அவர்களுக்கு இதில் என்ன அக்கறை என கேட்கிறீர்களா ? அமெரிக்காவில் எங்கெங்கே சட்ட விரோதமாக மருந்துகள் உலவுகிறதோ அங்கெல்லாம் குதித்து விசாரிப்பது தான் டி.இ.எ வின் தலையாய கடமை. அந்த விஷயத்தில் இவர்கள் எஃப்.பி.ஐ க்குப் பக்க பலமாய் இருக்கிறார்கள். “அமெரிக்காவில் போலி மருந்துகள் தடைசெய்யப்பட்டன, திருப்பி அனுப்பப்பட்டன, அழிக்கப்பட்டன” என்றெல்லாம் அடிக்கடி வரும் செய்திகளுக்குப் பின்னால் கடுமையாய் உழைப்பவர்கள் இந்த டி.இ.எ அமைப்பினர் தான். 1973ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் காலத்தில் துவங்கப்பட்டு இன்றைக்கு வெகுவாய் வளர்ந்திருக்கிறது இந்த அமைப்பு.

இவர்கள் மைக்கேல் மரணத்தின் பின்னணியை அலசக் களமிறங்கியிருப்பது மைக்கேலின் குடும்பத்தினருக்குப் புதுத் தெம்பைக் கொடுத்திருக்கிறது. மைக்கேலின் மரணம் ஒரு கொலை எனும் கண்ணோட்டத்தில் தான் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என குரல் எழுப்புபவர்களில் மைக்கேல் குடும்பத்தினரை விட இப்போது இவர்கள் தான் தீவிரமாய் இருக்கிறார்கள்.

கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், குற்றவாளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் போட்டியின்றிப் பெறுபவர்கள் இரண்டு டாக்டர்கள். ஒருவர் மைக்கேலின் பர்சனல் டாக்டர். கான்ராட் முர்ரே. இன்னொருவர் மைக்கேலின் தோல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த ‘டெர்மட்டோலஜிஸ்ட்’ டாக்டர். அர்னால்ட் கெவின். இவர்களைத் தவிர மூன்றாவதாக இன்னும் ஒருவர் இந்த குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார் அவர் பெயர் விரைவில் தெரியவரும் என்கிறார் டெரி ஹார்வி.

விஷயம் கேள்விப்பட்டதும் டாக்டர் முர்ரே பதட்டமடைந்து “ஐயோ… நான் மைக்கேலின் உடலில் புரோபோஃபோல் மருந்தைச் செலுத்தவே இல்லை. எனக்கும் மைக்கேலின் மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்னை நம்புங்கள்” என புலம்பித் தள்ளியிருக்கிறார். “இன்னொரு முறை உங்களை விசாரிக்க வேண்டும் வாருங்கள்” என காவல் துறை அணுகியபோது, இப்போதைக்கு முடியாது என தனது வக்கீல் மூலமாக மறுத்து போலீஸ் கண்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் வார்த்திருக்கிறார்.

மைக்கேலின் கழுத்திலும், உடல் முழுவதும் சரமாரியாய் இருந்த ஊசி குத்திய தடங்கள் ஏதோ ஒரு மாபெரும் மர்மத்தை உள்ளுக்குள் ஒளித்து வைத்திருப்பதாகவே கருதுகின்றனர் மைக்கேலின் குடும்பத்தினர்.

டாக்டர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்படும், அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என தகவல்கள் காட்டுத் தீயாய்ப் பரவினாலும், லா என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகள் இதை மறுக்கிறார்கள். அப்படியெல்லாம் சட்டென ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. இப்போதைக்கு டாக்டர்களிடம் கேட்கப்பட்டிருப்பது விரிவான மருத்துவ அறிக்கைகள் மட்டுமே. யாரையும் இதுவரை சந்தேகப்பட்டு விசாரிக்கவில்லை. ஒன்றிரண்டு டாக்டர்கள் என்றல்ல, மைக்கேலுக்கு வைத்தியம் பார்த்த எல்லா டாக்டர்களிடமும் விரிவான அறிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன. எல்லா அறிக்கைகளையும் ஆராய்ந்து பார்த்த பின்பு தான் அடுத்த கட்ட விசாரணைக்கான முடிவு எடுக்கப்படும்.

ஒருவேளை டாக்டர்கள் மீது விசாரணை வந்தாலும் கூட அது கொலைக் குற்றம் எனும் கண்ணோட்டத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. மருந்தை மருத்துவமனைக்கு வெளியே பயன்படுத்தியது, வேறு பெயர்களில் வாங்கியது, அளவுக்கு அதிகமாய் பயன்படுத்தியது போன்ற வழக்குகளின் கீழ் தான் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்கின்றனர் அவர்கள்.

இந்த லா என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகளின் பேச்சை முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் வெஸ்னா மாராஸ் எனும் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஒருவர். இது போன்ற பல வழக்குகளுக்காக வாதாடிய அனுபவமுடையவர் அவர். டாக்டர்கள் சில மருந்துகளை பரிந்துரைப்பதும், அதன் மூலம் சில சிக்கல்கள் எழுவதும் சகஜமே. அதை பெரிய கிரிமினல் வழக்குகளாய் பார்க்க முடியாது என்பதும் உண்மை தான்.

ஆனால் மைக்கேலின் வழக்கில் ஒரு மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. மைக்கேலுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது புரோபோஃபோல் எனும் மருந்து. அதைப் பயன்படுத்த “அனெஸ்டீஷியன்ஸ்” க்கு மட்டுமே அனுமதி உண்டு. ஒருவேளை டாக்டர் முர்ரே அந்த மருந்தை மைக்கேலின் வீட்டில் பயன்படுத்தியிருந்தால், அவர் அனெஸ்டீஷியனாய் இல்லாத பட்சத்தில் இது ஒரு கொலை வழக்காக மாறும் சாத்தியம் உண்டு என்கிறார் அவர்.

எது நடந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் ஹாலிவுட் அதிரடித் திரைப்படம் போல காட்சிகள் பட் பட்டென மாறி விடாது. விசாரணைகள் முடியவும், சில முடிவுகள் வெளியே தெரிய வரவும் சில பல ஆண்டுகள் கூட ஆகலாம் என்கிறார் அவர்.

மைக்கேலின் மரண விவகாரம் இப்படி இருக்க, மைக்கேல் ஜாக்சனைக் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் அடங்கிய பயோகிராபி ஒன்று அமெரிக்காவில் சக்கை போடு போடுகிறது.

மைக்கேல் ஒரு ஹோமோ ! அவருக்கு தோழிகள் கிடையாது ஆனால் நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. அவர்களைக் “குஷி”ப்படுத்துவது மைக்கேலுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் பெண்களைப் போல உடையணிந்து வெளியே செல்வார். இவருக்காகவே சாதாரண மேன்ஷன்களில் காத்திருக்கும் ஆண்களுடன் உல்லாசமாய் இருப்பார் என மைக்கேலின் அந்தரங்கத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறது இந்த நூல்.

“Unmasked: The Final Years of Michael Jackson “ எனும் இந்த வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயான் ஹால்பர் தான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறேதும் இல்லை என அடித்துச் சொல்கிறார். மைக்கேல் தொடர்பு வைத்திருந்த பல ஆண்களை எனக்குத் தெரியும். ஆண்களுடன் உறவு வைக்கும் போது “இதோ… பாப் உலக மன்னன் உங்கள் லாலிபாப்பை….” என்று தான் ஆரம்பிப்பார் என மஞ்சள் பத்திரிகை ரேஞ்சுக்கு விவரிக்கிறார் மனுஷன்.

மைக்கேலின் ஆண் நண்பர்கள் பலரை நான் தனியே சந்தித்தேன். அதில் முக்கியமான ஒருவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் லாரன்ஸ். இவர் மைக்கேலுடன் தொடர்ந்து மூன்று வாரங்கள் ஹாலிவுட் ஹில்ஸ் வீட்டில் வைத்து உறவு கொண்டதாய் வரி வரியாய் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

இப்படியெல்லாம் மைக்கேலின் அந்தரங்கத்தை நூலாக்கி காசு பார்த்தவர், இப்போது மைக்கேலின் மரணம் ஒரு கொலை தான் எனக் கூறியிருக்கிறார். தனக்குக் காவல் துறையில் ஏராளம் நண்பர்கள் உண்டு என்றும், மைக்கேலின் மரணம் கொலை எனும் கோணத்தில் தான் அணுகப்படுகிறது என்றும், மூன்று டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு விரைவில் நடக்கும் எனவும் தன் பங்குக்குப் பேசி பரபரப்பைக் கூட்டுகிறார் அவர்.

இதே இயான் ஹால்பர் தான் “மைக்கேலின் வாழ்க்கை” மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே என கடந்த ஆண்டு பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது கிட்டத்தட்ட நிஜமாகியிருக்கும் இன்றைய சூழலில் அவருடைய கருத்துக்களும் சிறப்புக் கவனத்தில் பார்க்கப்படுகின்றன.

இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று புதிய திடுக் தகவலை வெளியிட்டிருக்கிறார். மைக்கேலின் தோல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த ‘டெர்மட்டோலஜிஸ்ட்’ டாக்டர். அர்னால்ட் கெவின். மைக்கேலின் முதல் இரண்டு குழந்தைகளுக்கும் இவர் தான் ‘பயலாஜிகல்’ அப்பாவாம். அதாவது இவருடைய உயிர் அணுக்களிலிருந்து தான் மைக்கேலுக்குக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனவம். யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் மைக்கேலின் மனைவியிடம் கேட்கட்டும், அதிலும் நம்பிக்கையில்லையேல் டி.என்.ஏ டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளட்டும் என அதிரடியில் இறங்கியிருக்கிறார் டாக்டர்.

ஆளாளுக்கு குற்றச்சாட்டுகளையும், பரபரப்புகளையும் கிளப்பிக் கொண்டிருப்பதால், நிம்மதியான அடக்கம் கூட கிடைக்காமல் இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது மைக்கேல் ஜாக்ஸன் என்னும் பாப் இசை மன்னனின் உடல்!

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களிக்கலாமே

இறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் !

Sperm2

“ஐயோ… என்னால் அப்பாவாக முடியாதே” என இனிமேல் ஆண்கள் யாருமே புலம்பத் தேவையில்லை என்கிறது பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் ஒரு சூப்பர் ஆராய்ச்சி முடிவு.

விந்தணுவும் முட்டையும் இணைந்து கரு உருவாவது தானே இயற்கையின் நியதி. ஒருவேளை நோயினாலோ, வேறு ஏதேனும் காரணத்தினாலோ சரியான விந்தணுக்கள் இல்லாத ஆண்கள் என்ன செய்வது ?

கவலையை விடுங்கள் உங்கள் உடலிலுள்ள ஒரு “ஸ்டெம் செல்” போதும் உங்களுக்குச் சொந்தமான ஒரு விந்தணுவை உருவாக்கி விடலாம் என்பது தான் அந்த ஆராய்ச்சி சொல்லும் ஆச்சரிய சங்கதி. பிரிட்டனின் நியூகாசில் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்தி உலகின் புருவத்தை உயர வைத்திருப்பவர் பேராசிரியர் கரிம் நயிர்னியா.

இன்றைய தேதியில் ஆறு தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கிறது. பழைய காலத்தைப் போல குழந்தையில்லையேல் பழியை பெண்ணின் தலையில் போட்டு விட்டு தப்பிக்கவும் நவீன யுகம் வளர்ச்சி இடம் தருவதில்லை. ஒரு சோதனை போதும் யாருக்குப் பிரச்சினை, என்ன பிரச்சினை போன்ற சர்வ சமாச்சாரங்களையும் புட்டுப் புட்டு வைக்க.

குளோபல் வார்மிங், ஆபீஸ் டென்ஷன், பீட்சா, பர்கர், சீஸ் என கொழுப்பு உணவுகள், நோ எக்சர்சைஸ், மன அழுத்தம் இப்படி ஆயிரத்தெட்டு காரணங்கள் இதைச் சுற்றி. அதனால் இப்போதெல்லாம் ரேஷன் கடை வாசலில் நீளும் கூட்டத்தை விட அதிகமாய் கைனோகாலஜிஸ்ட் களின் வாசலில் கூட்டம் நீள்கிறது என்பது தான் நிஜம்.

உண்மையில், பிரச்சினை இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆண்களிடம் தான். ஜீவனில்லா விந்தணு, வீரியமில்லா விந்தணு, மூவ்மெண்ட் குறைவான விந்தணு, குறைவான எண்ணிக்கை இப்படி எக்கச்சக்கமான பிரச்சினைகள் இந்த உயிரணுவைச் sperm3சுற்றி. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாகக் கூடும் இந்த ஆராய்ச்சி என்பதே இப்போதைக்கு மருத்துவ உலகின் நம்பிக்கை.

உலக மருத்துவ வரலாற்றிலேயே முதன் முறையாக எனும் அடைமொழியுடன், ஒரு ஆண் கருவிலிருந்து ஒரு செல்லைப் பிரித்தெடுத்து, , அதை சோதனைக்கூடத்தில் ஸ்பெர்ம் ஆக வளரச் செய்திருக்கிறார் அவர். கருவிலிருந்து தான் செல்லை எடுக்க வேண்டுமென்றில்லை, ஆண்களின் கைகளிலிருந்தே ஒரு ஸ்டெம் செல்லைப் பிரித்து எடுத்து ஒரு ஸ்பெர்ம் செல்லை உருவாக்க முடியும் என நம்புகிறார் பேராசிரியர் கரிம் நயிர்னியா.

எளிதாய் சொன்னாலும் இதன் பின்னணியில் உள்ள உழைப்பு அசாத்தியமானது. ஸ்டெம் செல் ஒன்றை திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி, அங்கிருந்து சாதாரண வெப்பநிலைக்குக் கொண்டு வந்து வைட்டமின்கள் உதவியுடன் ஸ்பெர்ம் ஆக வளர்த்தெடுக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகிறதாம். இந்த விந்தணுவை IVF முறைப்படி நேரடியாக முட்டையில் செலுத்தினால் கரு தயார். ஆண்மையில்லை, விந்தணு இல்லை எனும் ஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை Spermசொல்லிவிடலாம்.

இவர் ஏற்கனவே இந்த ஆராய்ச்சியை எலிகளை வைத்து நடத்தி நிறைய எலிக்குட்டிகளை உருவாக்கினார் என்பது வியப்புச் செய்தி ! ஆனால் மனித விந்தணுவை வைத்து இன்னும் குழந்தையை உருவாக்கவில்லை, காரணம், பிரிட்டனில் அதற்கான அனுமதி இல்லை என்பது தான்.

ஏற்கனவே செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் முறை இருக்கிறது. ஆனால் அதற்கு ஸ்பெர்ம் யாராவது தானமாய் தரவேண்டும், முட்டை யாராவது தானமாய் தரவேண்டும். இரண்டையும் சேர்த்து ஏதோ ஒரு தாயின் கருவறையில் கருவாய் வளர்க்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் “ எனக்குள்ள ஓடற இரத்தம் தான் உனக்குள்ளயும் ஓடுது” என டயலாக் அடிக்க முடியாத உறுத்தல் பெற்றோருக்கு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் இந்த புதிய ஆராய்ச்சி மட்டும் நடைமுறைக்கு வந்தால், அச்சு அசலாக பெற்றோரின் குணாதிசயங்களுடன் இயற்கையாய் பிறக்கும் குழந்தைக்குரிய அத்தனை இயல்புகளோடும் செயற்கையாய் ஒரு குழந்தையை உருவாக்க முடியும் என்கிறார் கரீம்.

இந்த ஆராய்ச்சி ஸ்பெர்ம் தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கான கதவுகளை ஒரு சேரத் திறந்திருக்கிறது. உயிரணுக்கள் எப்படி உருவாகின்றன, வளர்கின்றன, என்னென்ன தன்மையில் வலுவடைகின்றன என அனைத்து நுண்ணிய விஷயங்களையும் இனிமேல் விரிவாக அறிய முடியும் என்பது மருத்துவ நம்பிக்கை. அப்படி நடந்தால் “வயாகரா” போல ஒரு மாத்திரை வந்து சர்வ உயிரணுப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த அவசர உலகில் இனிமேல் “அந்த” விஷயங்களெல்லாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்கள் தேவைப்படும் போது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது. “ஏங்க, உங்க கையைக் கொஞ்சம் நீட்டுங்க. ஒரு செல் வேணும், குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறேன்” என மனைவியர் சொல்லும் காலத்தை நினைத்தால் கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கிறது !

இப்படியெல்லாம் நடந்தால் ஆண்களுக்கு இங்கே என்ன வேலை என டென்ஷனாகாதீர்கள். இப்போதைக்கு ஒரு விந்தணுவை உருவாக்க ஒரு ஆணின் ஸ்டெம் செல் கட்டாயம் தேவை என்பதே நிலை. பெண்ணின் ஸ்டெம் செல்லைக் கொண்டு விந்தணு உருவாக்க முயன்ற முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. அப்படி பெண்ணின் செல்லில் இருந்தே ஒரு விந்தணுவும் உருவாக்க முடிகின்ற ஒரு காலம் உருவாகும் போது ஒரு குழந்தைக்கு பெண்ணே தாயுமானவளாகவும், தந்தையானவளாகவும் மாறும் வியப்பின் உச்சகட்டம் உருவாகும் !

இந்த ஆராய்ச்சியின் மிகவும் வியக்கத் தக்க விஷயமே இனிமேல் தான் இருக்கிறது. அதாவது இறந்து போன ஒருவருடைய உடலிலிருந்து கூட ஒரு செல்லை எடுத்து அதை வளரவைத்து ஸ்பெர்ம் ஆக மாற்றி அவருடைய சந்ததியை செயற்கையாகவே உருவாக்கிவிடலாம் என்பது தான் அது !

இறந்து பல வருடங்களானால் கூட இந்த செயற்கை ஸ்பெர்ம் உருவாக்குதல் சாத்தியம் எனும் தகவல் ஜுராசிக் பார்க் படம் போல திகிலூட்டுகிறது.

 

தமிழிஷில்  வாக்களிக்க விரும்பினால்