இதான் டைமிங் படங்கள் !

மின்னஞ்சலில் வந்த வாவ் படங்கள் !! பார்த்து ரசியுங்கள்.

ஒட்டுக்கேக்கறது தப்புங்க.. அது சிலையா இருந்தாலும் சரி !

one.JPG

அட… ஏம்பா சும்மா மிதிக்கிறே !

two1.JPG

கண்ணும் கருத்துமாய் பேசறாரோ ?

three.JPG

ஊதறாரா ? உறுஞ்சறாரா ?

four.JPG

இந்த காலத்துல எதையும் நம்ப முடியாதுப்பா !

five.JPG

மூன்று கொலை, மூன்று தூக்கு

bus.jpgமூன்று மாணவியரை உயிரோடு எரித்துக் கொலை செய்த வழக்கில் கொலையாளிகள் மூன்றுபேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி அதிரடித் தீர்ப்பு வெளியாகி உள்ளது.

கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா எனும் மூன்று மாணவிகளைக் கொலை செய்த வழக்கில் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் என்ற மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனையும், மற்ற இருபத்து ஐந்து பேருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனையும் வழங்கி இன்று சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

வழக்கறிஞர் சீனிவாசனின் மிகத் திறமையான வாதத்தால் கிடைத்திருக்கும் இந்தத் தீர்ப்பு கொலையாளிகள் சார்ந்திருக்கும் கட்சியினருக்கு அதிர்ச்சியையும், கொலை செய்யப்பட்ட மாணவியரின் குடும்பத்தினருக்கு கொஞ்சமேனும் நிம்மதியையும் வழங்கியிருக்கிறது.

பல்வேறு கனவுகளோடு கல்லூரிக்குச் சென்ற மாணவியர் அரசியல் வெறியர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. எனினும் குற்றவாளிகள் ஏதோ கட்சிக்காக பணியாற்றியது போல நடந்து கொண்டதும், அவர்களை விடுவிக்க அவர்கள் சார்ந்திருந்த கட்சி பல்வேறு பிரம்மப் பிரயர்த்தனங்கள் செய்ததும் சமூக அக்கறை கொண்ட அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்தது.

தவறு செய்பவர்கள் யாராயிருந்தாலும் தண்டிப்பதே அரசின் முக்கியமான பணியாக இருக்க வேண்டும். அரசு என்பது கட்சிக் கூட்டம் அல்ல அது மக்களை நிர்வாகிக்கும் , பராமரிக்கும் ஒரு அமைப்பு. இந்த அமைப்பைக் களங்கப்படுத்தும் நிகழ்வுகள் பல நடந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

இந்தத் தீர்ப்புக்கு ஆதரவாகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் குரல்கள் எழப்போவது உறுதி.

எந்தத் தண்டனை கொடுத்தாலும் சட்டத்தில் ஓட்டைகள் போட்டு வெளியேறுவதும், சட்டத்தின் கதவுகளை அதிகாரிகளே திறந்து விடுவதும் என அரசியல் குற்றங்கள் பல நீதிக்கு வெகு தொலைவில் தான் உலவி வருகின்றன. இது போன்ற தீர்ப்புகள் தான் அரசியல் குற்றங்கள் செய்வோரையும் சற்று யோசிக்க வைக்கும்.

மனிதாபிமானம் கொஞ்சமும் இன்றி, ஆசிரியர்களின் கெஞ்சல்களையும், மாணவிகளின் அலறலையும் மீறி உயிரோடு கொளுத்தும் வெறி கொண்டவர்கள் சமூக அமைப்பில் வாழத் தகுதியற்றவர்களே.

போய் டீ குடிச்சிட்டு வாங்க…

tea2.jpgதேனீர் ( டீ ) குடிப்பது உடல்நலத்துக்குக் கேடானது என்று காலம் காலமாய் உலவி வந்த நம்பிக்கையை சமீபத்திய ஆராய்ச்சிகள் பொய்யாக்கியிருக்கின்றன. தேனீர் குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது அல்ல என்று கடந்த ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருந்தார்கள். தற்போது ஒரு படி மேலே போய் தேனீர் எந்தெந்த விதத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதையும் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

தண்ணீர் குடிப்பதை விட தேனீர் குடிப்பது நல்லது என்று தடாலடியாய் ஆரம்பிக்கிறார் லண்டன் கல்லூரி ஆரோக்கியத் துறை மருத்துவர் ரக்ஸ்டன். தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்கிறது. ஆனால் தேனீர் அருந்துவது உடலின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் பல நன்மைகளையும் செய்கிறது என்கிறார் அவர்.

இதனால் தேனீர் உடலின் திரவ அளவை குறைக்கும் என்னும் கருதல்களும் உடைந்திருக்கிறது. முதலில் தேனீர் குடிப்பதனால் மாரடைப்பு நிகழும் வாய்ப்பு பெருமளவு குறைகிறதாம். தினமும் மூன்று குவளை தேனீர் அருந்துபவர்கள் மாரடைப்பிலிருந்து பெரும்பாலும் தப்பி விடுவதாக அவர் தெரிவிக்கிறார்

பற்களுக்கும், எலும்புகளுக்கும் கூட தேனீர் சிறந்த மருந்தாகிறது. ஆரோக்கியமான பற்களுக்கும், உறுதியான எலும்புகளுக்கும் தேனீர் துணை செய்கிறது.

தேனீர் உடலிலுள்ள செல்களின் வளர்ச்சிக்கும் துணை செய்கிறது. செல்களின் வளர்ச்சிக்கு தேனீர் துணை செய்வதால் அது புற்று நோய் வரும் பாதிப்பைக் கூட குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

எனினும் தேனீரில் முழுமையான பலனைப் பெறவேண்டுமானால் தேனீரில் பால் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறி இது வரை உற்சாகமாய் வாசித்து வந்த உங்கள் உற்சாகத்துக்கு ஒரு வேகத் தடையையும் அவர்கள் போடுகிறார்கள்