உலகக் கோப்பையில் கிடைத்த நியாயமான தோல்விக்குப் பின் அடுத்த உலகக் கோப்பை வரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கொண்டு செல்லக்கூடிய ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் வலை வீசித் தேடிக்கொண்டிருக்கிறது.
இந்த விஷயம் கேள்விப்பட்ட மீன்கள் எல்லாம், வலையில் விழுவதற்காக ஓடிக் கொண்டிருக்கின்றன. காரணம் இந்த வலையில் விழுந்தால் சாதாரண மீன்களெல்லாம் தங்க மீன்களாக மாறிவிடும் என்பது மட்டுமல்ல உலகப் புகழ் பெற்ற மீன்களாகவும் மாறிவிடும் என்பதும் தான்.
இலங்கையை உலகக் கோப்பை வாங்க வைத்ததும், வங்காள தேச அணியை அதிர்ச்சி வைத்திய அணியாக உருமாற்றியதும் என இவரிடம் நல்ல பயோடேட்டா. வங்காளதேச துணைதல அஷ்ரபுல் வேறு வாட்மோர் மாதிரி இன்னொரு ஆளை பார்க்க முடியாது ரேஞ்சுக்கு ( ஸ்பீச் ஃபிக்சிங் ? ) பேசித் தள்ள அவர் மீதான ஆர்வம் எகிறியிருக்கிறது.
தனக்கு இந்தியப் பயிற்சியாளராக இருக்க விருப்பம் என்று அவரே முன்வந்து அறிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பயிற்சியாளரை நியமிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாவிட்டாலும், ஆஸ்திரேலிய பயிற்சியாளரையாவது வீழ்த்த முடிந்ததே ( பின்னே… டீம் தோற்று போனா பயிற்சியாளர் தானே பொறுப்பு ) எனும் சந்தோசத்தில் இந்தியா இருக்க மேலும் ஒரு வாய்ப்பு வருகிறது.
பார்க்கலாம்.
தலைப்பு நச்சென்று இருக்கிறது
LikeLike