வத்திக்கானில் ஆராய்ச்சியாளர்களின் பொக்கிஷமாக இருந்து வந்த அறுநூறு ஆண்டுகள் பழமையான நூலகம் ஒன்று மூன்று ஆண்டுகளுக்கு மூடப்படுகிறது. இந்தத் தகவல் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
புனித நிக்கோலஸ் என்பவரால் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த நூலகத்தில் ஒரு பத்து இலட்சத்திற்கும் அதிகமான அபூர்வமான நூல்கள் இருக்கின்றன. இந்த நூலகத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் இங்கே இருக்கின்ற எழுபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் எனலாம். இது ஆராய்ச்சியாளர்களின் பொக்கிஷமாக இருந்து வருகிறது.
குளிர்சாதன வசதி, தூசு தடுப்பு நடவடிக்கைகள், நல்ல காற்றோட்டம் என வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தான் இந்த மூடுதல் என்று நிர்வாகம் சொன்னாலும், அதை முன்கூட்டியே தெரிவிக்காததனால் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி ஆனி போலினுக்கு எழுதிய சரித்திரப் புகழ்வாய்ந்த காதல் கடிதங்களும் இந்த நூலகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது, இந்த திருமணத்தை போப் நிராகரித்ததும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் கிறிஸ்தவ வரலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும் நீங்கா இடம் பிடித்தவை என்பது தனிக்கதை !
ஃ