ஆஸ்பிரின் மாத்திரையை தாய்மைக் காலத்தில் தொடர்ந்து உட்கொண்டு வருவது பலவிதமான தாய்மைக்கால பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
கருவளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்துகள், ஆக்சிஜன் போன்றவை கிடைக்காமல் செய்யும் குருதி அடைப்புகளை இந்த ஆஸ்பிரின் மாத்திரை சரிசெய்து விடுவதாகவும் அவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
ஆஸ்பிரின் மாத்திரை குறைப்பிரசவம், பிரசவத்தில் ஏற்படும் சிக்கல் போன்ற பலவற்றுக்கும் தீர்வாக இருக்க முடியும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக முந்தைய பிரசவங்களில் பிரச்சனைகளைச் சந்தித்தவர்களுக்கும், வயது அதிகமானபின் கருவுற்றிருப்பவர்களுக்கு இந்த மாத்திரை அதிக பலன் தருமாம்.
ஆஸ்பிரின் மாத்திரையைப் பற்றி இத்தனை நல்ல செய்திகளை அவர்கள் சொன்னாலும் எக்காரணம் கொண்டும் மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் தாய்மைக் காலத்தில் எந்த மருந்தையும் உபயோகப்படுத்தக் கூடாது எனும் எச்சரிக்கையையும் அவர்கள் தருகிறார்கள்.